திருமண தடை விலக எளிமையான பரிகாரம்

atchathai
- Advertisement -

சில பேருக்கு திருமண வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் இருக்கும். எவ்வளவோ பரிகாரம் செய்திருப்பார்கள், எத்தனையோ கோவில்களுக்கு சென்று இருப்பார்கள், ஆனால் நல்லவரன் அமைந்திருக்காது. இப்படிப்பட்டவர்களுடைய ஜாதகத்தை அலசி ஆராய்ந்து பார்த்தால் சில பேருக்கு ஜாதக கட்டத்தில் பெண் சாபம் இருக்கும்.

பெண் சாபத்திலிருந்து விடுபட்டு நல்லபடியாக திருமணம் நடக்க வேண்டும் என்றால் என்ன பரிகாரம் செய்வது. ஆன்மீகம் சொல்லும் எளிய பரிகாரம் ஒன்று உள்ளது அதைத்தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகின்றோம். பெண் சாபம் நீங்க திருமணம் நடக்க பரிகாரம்.

- Advertisement -

பெண் சாபம் நீங்கி திருமணம் நடக்க பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு முதலில் நீங்கள் ஏழு கன்னிப்பெண்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். வயதுக்கு வந்த திருமணம் ஆகாத கன்னிப்பெண்கள் என்று சொல்லுவார்கள் அல்லவா அப்படிப்பட்ட பெண்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

அந்த ஏழு பெண்களை வரிசையாக மனப்பலகையில் அமர செய்யுங்கள். ஏழு பெண்களுக்கும் பாத பூஜை செய்ய வேண்டும். ஒரு தாம்பல தட்டில் இந்த கன்னி பெண்களின் பாதங்களை வைத்து தண்ணீர் ஊற்றி அலம்பி சந்தனம் குங்குமம் பொட்டு வைத்து பூக்களால் அர்ச்சனை செய்து அவர்களுக்கு பாத பூஜையை நிறைவு செய்து விடுங்கள்.

- Advertisement -

ஒரு தாம்பூல தட்டில் இரண்டு வெற்றிலை, இரண்டு கொட்டைப்பாக்கு, கலிப்பாக்கு என்று சொல்லுவார்கள் அல்லவா அதுதான் வைக்க வேண்டும். மஞ்சள், குங்குமம், பூ, வளையல், ரவிக்கை துணி இப்படி வாங்கி வைத்து பாத பூஜை செய்த பெண்களுக்கு இந்த தாம்பூலத்தை தானமாக கொடுக்க வேண்டும்.

இந்த பூஜையை நிறைவு செய்து விடுங்கள். இறுதியாக மஞ்சள் அச்சதையை அந்த பெண்கள் கையில் கொடுத்து, திருமணம் ஆகாத அந்த நபருக்கு ஆசிர்வாதம் செய்ய சொல்லுங்கள். பாத பூஜை செய்யும் கன்னிப்பெண்கள் வயதில் சின்னவர்களாக இருப்பார்கள். இருந்தாலும் பரவாயில்லை, அந்த கன்னி பெண்களின் கையால் அட்சதையில் ஆசிர்வாதம் செய்யும்போது, இந்த பெண் சாபம் கொண்ட நபருக்கு சாப விமோசனம் கிடைக்கும்.

- Advertisement -

திருமணமாகாமல் பிரச்சனையில் சிக்கி இருப்பவர்களுக்கு ஒரு நல்ல விடிவு காலம் பிறக்கும். இந்த பரிகாரத்தை எங்கு செய்வது. கோவில்களுக்கு பக்கத்தில் மண்டபங்கள் இருக்கும் அல்லவா அந்த மாதிரி இடத்தில் செய்யலாம். ஆத்தங்கரையில் குளத்தங்கரையில் இப்படிப்பட்ட பரிகாரங்களை செய்யலாம் தவறு கிடையாது. வீட்டில் வைத்தும் செய்யலாம் தவறு கிடையாது.

வீட்டில் வைத்து இந்த பரிகாரத்தை செய்யும் பட்சத்தில் அந்த கன்னிப் பெண்களுக்கு உங்கள் கையால் சமைத்த உணவை வயிறார சாப்பிட வைத்து பின்பு இந்த பரிகாரத்தை செய்வது மேலும் நல்ல பலனை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இது நல்லதுக்காக செய்யக்கூடிய பரிகாரம்தான்.

ஆகவே உங்களுக்கு தெரிந்தவர்களிடம் சொல்லி ஏழை கன்னிப் பெண்களாக பார்த்து அழைத்து இந்த பரிகாரத்தை நிறைவேற்றினாலும் தவறு கிடையாது. இதன் மூலம் பரிகாரம் செய்யக்கூடிய பெண்களுக்கு, அதாவது பாத பூஜை செய்யக்கூடிய பெண்களுக்கு ஏதேனும் பாதிப்பு வந்து விடுமா என்று கேட்டால் அதெல்லாம் எதுவும் கிடையாது.

இதையும் படிக்கலாமே: கண் திருஷ்டி தீய சக்தி விலக

இந்த பரிகாரம் முழுக்க முழுக்க ஆன்மீகம் சம்பந்தப்பட்ட பரிகாரம். நம்முடைய முன்னோர்களால் நமக்கு சொல்லப்பட்டுள்ள பரிகாரம். பாதிக்கப்பட்டவர்கள் வாய்ப்பு கிடைத்தால் ஆன்மீகம் சொல்லும் இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறுங்கள்.

- Advertisement -