பிள்ளைகளுக்கு திருமணம் நடக்க, பெற்றவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம்

amman
- Advertisement -

ஒரு விஷயத்தை நாம் இழக்கும் போது தான், இன்னொரு விஷயத்தை இந்தப் பிரபஞ்சமானது நமக்கு கொடுக்கின்றது. ஒரு கெடுதல் நடக்கக்கூடிய வீட்டில் அடுத்து நிச்சயமாக ஒரு நல்லது நடக்கும் என்று சொல்லுவார்கள். நம்மை நாமே வருத்தி இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் போது, அந்த கஷ்டத்திற்கு உண்டான பலனை அந்த இறைவன் நிச்சயம் நமக்கு கொடுப்பான்.

அதனால் தான் அந்த காலத்திலேயே வேண்டுதல்கள், பிரார்த்தனைகள், விரதங்கள் கடைபிடிக்க வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். கஷ்டத்தை இந்த பிரபஞ்சம் நமக்கு கொடுப்பதற்கு முன்பு, நாமே அந்த கஷ்டத்தை உருவாக்கி கொள்கின்றோம். அந்த கஷ்டத்திற்கு பிறகு நிச்சயம் நமக்கு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

- Advertisement -

அதேபோலதான் இன்றும் ஒரு பரிகாரத்தை பார்க்க போகின்றோம். உங்களுடைய பிள்ளைக்கு நல்ல மணமகள் அமையவில்லையா. நல்ல மணமகன் அமையவில்லையா. பெற்றவர்கள் இந்த ஒரு பரிகாரத்தை மட்டும் செய்து பாருங்கள். நிச்சயமாக உங்கள் குழந்தைக்கு சீக்கிரமே நல்ல வரன் தேடி வரும்.

திருமணம் நடக்க பரிகாரம்

உங்களுடைய பிள்ளைக்கு நல்ல வரன் அமைய வேண்டும் என்பதற்காக நீங்கள் பல முயற்சிகளை எடுத்து இருக்கலாம். ஆனால் வீட்டிற்குள் நல்ல மருமகனோ, நல்ல மருமகளோ வர வேண்டும் என்பதற்காக நீங்கள் உங்கள் வாழ்க்கையில் இருந்து ஏதாவது ஒரு விஷயத்தை இழந்திருக்கிறீர்களா. ஏதாவது ஒரு விஷயத்தை இழக்கும்போது தானே இன்னொன்று உங்களுக்கு கிடைக்கும் அதுதானே இந்த பிரபஞ்சத்தின் நீதி.

- Advertisement -

உங்களுக்கு விருப்பமான ஏதாவது ஒரு விஷயத்தை உங்கள் வாழ்க்கையில் இருந்து நீங்கள் இழக்க வேண்டும். உதாரணத்திற்கு உங்களுக்கு பிடிச்ச ஏதோ ஒரு காய்வகை, பழ வகை ஏதாவது ஒன்னு தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச விஷயமாக இருக்க வேண்டும். அந்த பிடிச்ச விஷயத்தை இன்று முதல் நான் சாப்பிட மாட்டேன் என்ற உறுதிமொழியை எடுத்துக் கொள்ள வேண்டும்.

உதாரணத்திற்கு முருங்கைக்காய் உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். முருங்கைக்காய் சாம்பார் என்றால் விருப்பமாக சாப்பிடுவீர்கள். அந்த முருங்கைக்காயை இனிமேல் நான் சாப்பிட மாட்டேன் என்ற ஒரு முடிவுக்கு வந்து விடுங்கள். முருங்கைக்காய் உதாரணத்திற்கு சொல்லப்பட்டுள்ளது இதே போல உங்களுக்கு எது ரொம்ப பிடிக்குமோ அதை நீங்க விட்டுடனும்.

- Advertisement -

இப்போ வாழ்க்கையில் நீங்கள் ஒரு விஷயத்தை இழுந்து விட்டீர்கள். குல தெய்வத்து கோயிலுக்கு போறீங்க. உங்க கையில் முருங்கைக் காயை வைத்துக் கொள்ளுங்கள். நான் பிறந்ததிலிருந்து சாப்பிடக்கூடிய ஒரு காய் இது. இனிமேல் இந்த ஒரு காயை நான் சாப்பிட மாட்டேன் என்று சொல்லி அந்த முருங்கைக்காயை குலதெய்வ கோவிலிலேயே விட்டுவிட்டு வந்து விடுங்கள். அவ்வளவுதான்.

நீங்களும் அன்றிலிருந்து, உங்களுடைய உயிர் பிரியும் வரை அந்த முருங்கைக்காயை சாப்பிடவே கூடாது. எந்த இடத்திலும் சாப்பிடக்கூடாது. கல்யாண பந்தியில் கூட அதை சாப்பிடக்கூடாது. அப்படி இல்லை என்றால் ஓடுகின்ற தண்ணீர் இருக்கும் இடத்துக்கு போங்க. அந்த தண்ணீரை சாட்சியாக வைத்துக் கொண்டு இந்த முருங்கைக்காயை நான் சாப்பிட மாட்டேன் என்று நீங்களே ஒரு சபதம் மேற்கொள்ளுங்கள்.

அந்த முருங்கைக்காயை அந்த தண்ணீரிலும் போட்டுவிட்டு வந்துவிடலாம் இந்த மாதிரி உங்களுக்கு பிடிச்ச ஒரு விஷயத்தை இழக்கும்போது இன்னொரு விஷயத்தை பிரபஞ்சம் உங்களுக்கு கொடுக்கும். அதுதான் உங்களுடைய பிள்ளையின் திருமணம். எனக்கு பிடிச்ச இந்த விஷயத்தை நான் விட்டு விடுகின்றேன். என்னுடைய வீட்டிற்கு ஒரு நல்ல உறவை கொண்டு வந்து சேர்த்து விடு பிரபஞ்சமே என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: சிவன் அருளைப் பெற சனி மகா பிரதோஷ பரிகாரம்

உங்களுக்கு விருப்பமான ஒரு விஷயத்தை நீங்கள் கைவிடும் போது, அந்த நிறைவேறாத ஆசை நிச்சயம் நிறைவேறும். இது தான் இயற்கை நமக்கு சொல்லித் தரக்கூடிய பாடம். பிரபஞ்ச சக்தியும் அப்படி தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. தேவைப்படுபவர்கள் இந்த பரிகாரத்தை பின்பற்றி பாருங்கள். நிச்சயம் நல்லது நடக்கும் என்ற இந்த தகவலோடு ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -