குலதெய்வத்தை வேண்டி கோவில் குளத்தில் இந்த பொருளை போட்டால் போதும், மலை போல் வந்த பிரச்சனைகள் கூட பனி போல உருகி ஓடி விடும். வெளியே சொல்ல முடியாத பிரச்சினைகள், மன குழப்பங்கள், கவலை தீர எளிய பரிகாரம்.

kuladhievam sad man
- Advertisement -

ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு வகையான பிரச்சனைகள் இருக்கும். இதில் பணம், வேலை, குடும்பம் என இவற்றையெல்லாம் தாண்டி யாரிடமும் சொல்ல முடியாத பல வேதனைகளை சுமந்தபடி இருப்பார்கள். இதனாலே அவர்கள் பெரும் மன அழுத்தத்திற்கு ஆளாகி என்னடா வாழ்க்கை இது என்று சலித்துக் கொள்வர்கள். இத்தகைய மன வேதனைகளை எல்லாம் காணாமல் செய்து விட இந்த ஒரு எளிய பரிகாரத்தை செய்யலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது என்ன பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் இந்த ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த பரிகாரத்தை முதலில் நாம் வீட்டில் செய்து அதன் பிறகு உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் குளம் உள்ள ஆலயத்திற்கு சென்று முடித்துக் கொள்ள வேண்டும். அதே போல் இந்த பரிகாரத்திற்கு அவல், பொரி இரண்டையும் வாங்கிக் கொள்ளுங்கள். ஏற்கனவே வீட்டில் உள்ளதை பயன்படுத்த கூடாது.

- Advertisement -

துன்பம் கஷ்டம் தீர வழி:
இந்த பரிகாரத்தை உங்கள் குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்த நாள் எதுவோ அந்த நாளில் செய்யலாம். அன்றைய தினத்தில் காலையில் எழுந்து குளித்து முடித்த பிறகு உங்கள் வீட்டின் பூஜையறையில் குலதெய்வத்தை நினைத்து முதலில் தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள். அதன் பிறகு நீங்கள் வாங்கி வைத்திருக்கும் அவல், பொரி இரண்டையும் கையில் வைத்துக் கொண்டு உங்களுடைய மன வேதனை எதுவோ அது தீர்ந்து போக வேண்டும் என்று குலதெய்வத்திடம் மனதார பிரார்த்தனை செய்து கொண்டு இதை ஒரு பையில் போட்டு எடுத்துக் கொள்ளுங்கள்.

இதை நேராக உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் ஆலயத்திற்கு எடுத்து சென்று அங்கிருக்கும் குளத்தில் இந்த அவலையும் பொரியையும் குளத்தில் உள்ள மீன்களுக்கு உணவாக போட்டு விடுங்கள். அப்படி போட்ட பிறகு அங்கேயே ஐந்து நிமிடம் அமைதியாக அமர்ந்து மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இவையெல்லாம் செய்து முடித்த பிறகு நீங்கள் சென்றிருக்கும் ஆலயத்தின் தெய்வத்தை வணங்கி கோவிலை சுற்றிய பிறகு சிறிது நேரம் ஆலயத்திலும் அமர்ந்து விட்டு நேராக வீட்டுக்கு வந்து விடுங்கள். இந்தப் பரிகாரத்தை நீங்கள் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தொடர்ந்து செய்யலாம். இதனால் மனம் எப்போதும் குழப்பங்கள் நீங்கி தெளிவாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: ஞாயிற்றுக்கிழமை இரவு எலுமிச்சம் பழத்தை வைத்து இதை மட்டும் செய்தால் போதும். உங்களுடைய உடம்பில் இருக்கும் கண் திருஷ்டி, கெட்ட சக்தி அனைத்தும் உடம்பை விட்டு தெறித்து ஓடிவிடும்.

நீங்கள் யாரிடமும் சொல்ல முடியாத பிரச்சனைகளில் சிக்கித் தவித்து இருந்தாலும் கூட, அவையெல்லாம் தானாகவே மறைந்து போகக் கூடிய சூழ்நிலையை இந்த பரிகாரம் ஏற்படுத்திக் கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது. இத்துடன் எந்த பிரச்சனையாக இருந்தாலும் தைரியமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் வளர்த்து கொள்ளுங்கள் என்ற இந்த கருத்தோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -