ஞாயிற்றுக்கிழமை இரவு எலுமிச்சம் பழத்தை வைத்து இதை மட்டும் செய்தால் போதும். உங்களுடைய உடம்பில் இருக்கும் கண் திருஷ்டி, கெட்ட சக்தி அனைத்தும் உடம்பை விட்டு தெறித்து ஓடிவிடும்.

- Advertisement -

நம்முடைய உடம்பில் எதிர்மறை ஆற்றலின் தாக்கம் இல்லாமல் இருந்தால்தான் சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியும். ஆரோக்கியமாக இருக்க முடியும். கண் திருஷ்டி, கெட்ட சக்தி, ஏவல், பில்லி, சூனியம் போன்ற எதிர்மறை ஆற்றல்கள் நம்முடைய உடம்பில் வந்து குடியேறி விட்டால், உடல் சோர்வு ஏற்படும். அடிக்கடி ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனை ஏற்படும். சுறுசுறுப்பாக ஒரு வேலையை செய்து முடிக்க முடியாது. கண்ணை சொக்கும். தூக்கம் வந்து கொண்டே இருக்கும்.

இப்படிப்பட்ட பிரச்சனைகளை எல்லாம் சரி செய்ய வேண்டும் என்றால் வாரத்தில் ஒருமுறை நம் உடம்பில் தங்கி இருக்கும் எதிர்மறை ஆற்றலை வெளியே விரட்டி அடிக்க வேண்டும். அது எப்படி. சுலபமாக ஆன்மீகம் ஒரு பரிகாரம் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. அதை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

உடம்பில் இருக்கும் கெட்ட சக்தியை விரட்டி அடிக்க எலுமிச்சம் பழ பரிகாரம்:
ஒரே ஒரு கரும்புள்ளிகள் இல்லாத மஞ்சள் நிறத்தில் இருக்கும் எலுமிச்சம் பழத்தை வாங்கி வாருங்கள். அந்த எலுமிச்சம் பழத்தை நான்கு பாகங்களாக வெட்டி பிரித்துக் கொள்ள வேண்டும். நான்காக வெட்டி தனித்தனியாக எடுக்கக் கூடாது. நான்காக வெட்டி பிரித்த எலுமிச்சம் பழத்திற்கு நடுவே ரத்த சிவப்பு நிறத்தில் இருக்கும் குங்குமத்தை தடவிக்கொள்ள வேண்டும். அதன் நடுவே கொஞ்சம் கல்லுப்பு வைத்து, அதன் மேலே ஒரு கட்டி கற்பூரத்தை வைத்து, நெருப்பு பற்ற வைத்து விடுங்கள்.

இந்த எலுமிச்சம் பழத்தை வீட்டில் இருப்பவர்களுடைய தலையை சுற்றி குப்பை தொட்டியில் போட்டு விட வேண்டும். உங்களுக்கு நீங்களே கூட இந்த திருஷ்டியை கழித்துக் கொள்ளலாம். வீட்டில் இருக்கும் அனைவரையும் கிழக்கு பார்த்தவாறு அமர வைத்து, இந்த எலுமிச்சம் பழத்தை மூத்தவர்கள் கையால் சுற்றி போட்டால், வீட்டில் இருப்பவர்களுடைய உடம்பில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் பீடை நீங்கிவிடும்.

- Advertisement -

உங்களுடைய வீட்டிற்கே பீடை பிடித்தது போல இருக்குதா. வீட்டில் இருள் சூழ்ந்த சூழ்நிலை நிலவுகிறதா. வீட்டில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் வருகிறதா. வீட்டில் இருப்பவர்களுக்கு அடிக்கடி விபத்து நடந்து ரத்த காயம் ஏற்படுகிறதா. இதே போல எலுமிச்சம் பழத்தை தயார் செய்து, வீட்டிற்கு வெளியே சென்று உங்கள் வீட்டை 3 முறை சுற்றி எலுமிச்சம் பழத்தை கொண்டு போய் ஊருக்கு வெளி பக்கத்தில் தூக்கி எறிந்து விட்டு வந்து விடுங்கள். அவ்வளவு தான். உங்களையும் உங்கள் வீட்டையும் பிடித்த பீடை ஒழியும்.

குறிப்பாக இந்த பரிகாரத்தை ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு மேல், இரவு 12 மணிக்குள் எப்போது வேண்டும் என்றாலும் செய்யலாம். அமாவாசை இரவு இந்த பரிகாரத்தை செய்தாலும் சிறப்பான பலனை கொடுக்கும். மிக மிக எளிமையான பரிகாரம் இது. உங்களை பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கும் எவ்வளவு பெரிய எதிர்மறை ஆற்றலாக இருந்தாலும், அதை ஓட ஓட விரட்டக்கூடிய சக்தி ஒரு எலுமிச்சம் பழத்துக்கு உண்டு.

இதையும் படிக்கலாமே: நினைத்த காரியம் நினைத்தபடி நடக்க, கம்பீரமாக நம்முடைய வாழ்க்கையை வாழ, இந்த ஒரு குச்சியை பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்தாலே போதும்.

மனதில் குலதெய்வத்தை வேண்டி இந்த பரிகாரத்தை செய்யுங்கள். உங்கள் குடும்பம் சுபிட்சம் பெறும். எந்த ஒரு பிரச்சனையிலும் சிக்கிக் கொள்ளாமல் நிம்மதியாக வாழ்க்கை நகரும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த எளிமையான பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -