நம் வாழ்வில் இந்த ஒரு நாளில் மறக்காமல் தானம் செய்தால் கோடி கோடியாய் செல்வம் சேருமாம்! வரம் பல தரும் தானம் என்ன தானம்?

calendar-thanam-cash
- Advertisement -

தானம் என்பது புண்ணியத்தை சேர்க்கும் ஒரு அற்புத பரிகாரமாக இருக்கிறது. மனம் உவந்து இல்லாதவர்களுக்கு செய்யும் தானம் ஆனது புண்ணிய கணக்கில் சேர்கிறது. இப்படி ஒவ்வொரு நாளும் நம்மால் முடிந்த தானங்களை செய்து வந்தால் மோட்சத்தை அடையலாம் என்பது நம்முடைய நம்பிக்கையாக இருந்து வருகிறது. அப்படிப்பட்ட இந்த தானம் இந்த நாளில் செய்யும் பொழுது கோடி கோடியாய் செல்வத்தை வாரி வழங்குமாம்! வரங்கள் பல அளிக்கக்கூடிய அப்படியான தானம் என்ன தானம்? அதை எப்பொழுது செய்ய வேண்டும்? என்பது போன்ற ஆன்மீக குறிப்பு தகவல்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம் வாங்க.

நம் முன்னோர்கள் இறந்த தியதியை விட, இறந்த திதியை தான் முக்கியமாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. அந்த திதியில் தான் தானம், தர்ப்பணங்கள் எல்லாம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. திதிக்கு அந்த அளவிற்கு முக்கியத்துவம் உண்டு. ஒருவர் இறந்த திதியை குறித்து வைத்துக் கொள்ள வேண்டியதும் இதனால் தான் அவசியமாகிறது.

- Advertisement -

அதே போல நாம் பிறந்த திதியை தெரிந்து வைத்துக் கொண்டால் அந்த திதியில் நாம் செய்யும் தானம் ஆனது பல கோடி செல்வத்தை அருளக்கூடிய அற்புத பலன்களை தரக்கூடியதாக இருக்குமாம். ஒருவர் பிறந்த நாளை விட, அவர் பிறந்த அன்று இருக்கக்கூடிய திதி ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது. இந்த திதியானது நாம் பிறந்த நாளில் இருந்து ஒரு சில நாட்கள் முன்னரோ அல்லது ஒரு சில நாட்கள் பின்னரோ வரக்கூடும்.

அந்த நாளில் நீங்கள் புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்வதும், அங்குள்ள தீர்த்தங்களின் நீராடுவதும் மிக சிறப்பான பலன்களை கொடுக்கும் மேலும் இறைவனே கதி என்று இருக்கும் எளியவர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள். புண்ணிய ஸ்தலங்களில் பிச்சை கேட்கும் ஏழை, எளியவர்களுக்கு தங்களால் முடிந்தவற்றை தானம் செய்யலாம். பணமாகவோ, பொருளாகவோ, உணவாகவோ நீங்கள் கொடுக்கும் இந்த தானமானது பல மடங்கு புண்ணியத்தை கொடுக்குமாம்.

- Advertisement -

மகாபாரதப் போரில் பலர் மாண்டாலும் கர்ணன் வீழும் பொழுது அந்த கண்ணனே கண்ணீர் விட்டு அழுதான். கர்ணன் பெரிதாக எதையும் செய்யவில்லை! இறைவனே கதி என்று இருக்கவில்லை, முக்தி கிடைக்க வேண்டும் என்று நினைக்கவும் இல்லை. அவன் சாகும் தருவாயில் கூட அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால், இல்லை என்று யாருக்கும் சொல்லாத உள்ளத்தை கொடு இறைவா! என்றே வேண்டினான். தானம் செய்வதும், செய் நன்றி மறவாமல் இருப்பதும், எளியவர்களுக்கு உதவி செய்வதும், நமக்கு உதவி செய்தவர்களிடமிருந்து நன்றி மறவாமல் இருப்பதும் ஒன்றே இறைவன் நம்மிடத்தில் எதிர்பார்ப்பது ஆகும். இது எத்தனை பேரிடம் இருக்கிறது? இக்குணங்கள் இருந்தாலே தவம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை.

கடவுள் தானாகவே வந்து நம் முன் நின்று தரிசனத்தை கொடுப்பார். வரங்களை அள்ளிக் கொடுப்பார். அவ்வாறே கர்ணனும் வரங்களை பெற்றான். எவ்வளவு பிறவிகள் எடுத்தாலும், கர்ணன் தானம் செய்பவர் ஆகவும் அதற்கு உரிய செல்வங்களையும் அவன் பெறுவான் என்று வரம் பெற்றான். இறுதியில் முக்தியும் கிடைக்கும் என்று கண்ணன் வரம் கொடுத்தார். இறைவனே ஒருவர் இறக்கும் பொழுது வந்து அழுகிறார் என்றால் தானம் செய்வதுடைய மகிமையை உணர வேண்டும். வாழும் ஒவ்வொரு நாளும் நம்மால் பிறருக்காக வாழ முடியாவிட்டாலும், நாம் பிறந்த ஒரு நாளிலாவது மற்றவர்களுக்காக வாழ்ந்து தான் பார்ப்போமே!

- Advertisement -