தொழிலில் பணத்தடை விலக சனிக்கிழமை அன்று செய்ய வேண்டிய பரிகாரம்

cash2
- Advertisement -

சொந்தத் தொழில் என்றாலே அதில் வெற்றி அடைய வேண்டும் என்றால், சனி பகவானின் அனுக்கிரகம் நமக்கு முழுமையாக கிடைக்க வேண்டும். சனிபகவானுக்கு உரிய சனிக்கிழமை அன்று இந்த பரிகாரத்தை செய்தால், சனிபகவானின் ஆசிர்வாதத்தை முழுமையாக பெற்று, சொந்த தொழிலில் வெற்றி காண முடியும்.

சனி பகவானினை மனதில் நினைத்து இந்த ஒரு வேரை கொண்டு வந்து கல்லாப்பெட்டியில் வைக்கும் போது, சொந்த தொழிலில் இருக்கும் தடைகள் விலகி, பணவசியம் ஜன வசியம் ஏற்பட தொடங்கி விடும். கல்லாப்பெட்டியில் வைக்க வேண்டிய அந்த ஒரு வேர் என்ன என்பதை பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

தொழிலில் பணத்தடைவிலக செய்ய வேண்டிய பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு முதலில் உங்களுக்கு தேவையான பொருள் பொன் ஊமத்தை செடியின் வேர். சின்னதாக இருக்கும் பொன் ஊமத்தை செடியின் வேரை எடுத்துக் கொள்ளுங்கள். அதை கொஞ்சம் மஞ்சள் தண்ணீரில் கழுவி நிழலிலேயே காய வைத்து விடுங்கள். இந்த வேரை கரு நீல நூலில் முழுமையாக சுற்ற வேண்டும். வேர் வெளியே தெரியக்கூடாது.

சின்ன வேர், இரண்டு இன்ச் அளவு இருக்க கூடிய வேரை பரிகாரத்துக்கு பயன்படுத்தினால் போதும். வேரின் ஒரு முனையை உங்களுடைய கையில் பிடித்துக் கொள்ளுங்கள். கரு நீல நூலை அப்படியே அந்த வேரில் கொஞ்சம் நெருக்கமாக சுற்றி சுற்றி வாருங்கள். நூலை சுற்றும் போது தொழிலில் வருமானம் அதிகரிக்க வேண்டும் என்ற வார்த்தையை சொல்லிக் கொண்டே நூலை சுற்ற வேண்டும்.

- Advertisement -

வேரின் நுனிவரை அந்த நூல் சுற்றப்பட்ட பிறகு, அப்படியே முடிச்சு போட்டு விட வேண்டும். வேரிலிருந்து நூல் கழன்டு வரக்கூடாது. வேரும் வெளியே தெரியக்கூடாது. எந்த அளவுக்கு வேர் கருநீள நூலில் மறைக்கப்பட்டிருக்கிறதோ, அந்த அளவுக்கு உங்களுக்கு பலன் இரட்டிப்பாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கருநீளம் என்பது சனிபகவானின் நிறம். பொன் ஊமத்தை வேருக்கு பொதுவாகவே பணத்தை வசியம் செய்யக்கூடிய தன்மை உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. ஆக இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து நாம் கல்லாப்பெட்டியில் வைக்கும் போது நமக்கு பண வசியம் ஏற்படும்.

- Advertisement -

சனிக்கிழமை அன்று எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யலாம். உங்களுக்கு இந்த பொன் ஊமத்தை செடி எது என்று தெரியும் என்றால், நீங்களே தேடி வேரை பறித்து வாருங்கள். இல்லை என்றால் நாட்டு மருந்து கடைகளில் சொல்லி வைத்து அந்த வேரை வாங்கிக் கொள்ளுங்கள்.

தயார் செய்த வேரை உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு, குலதெய்வத்தையும் மகாலட்சுமியையும் மனதார நினைத்து, செய்யும் தொழிலில் வெற்றி காண வேண்டும், பண வசியம் ஜன வசியம் ஏற்பட வேண்டும், நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று மனதார நினைத்து இந்த வேரை கொண்டு போய் அப்படியே கல்லாப்பெட்டியில் வைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: பெருமாள் நம் இல்லத்தில் நிரந்தரமாக தங்கி பண மழை பொழிய இப்படி வழிபாடு செய்யுங்கள்.

இதை அடிக்கடி மாற்ற வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது. வருடத்திற்கு ஒருமுறை பழைய வேரை எடுத்துப் போட்டுவிட்டு, புதுசாக வேரில் கருநீலன் நூல் சுற்றி மீண்டும் கல்லாப்பெட்டியில் வைத்துக் கொள்ளவும். இதை செய்தால் நொடிந்து போன தொழில் கூட, ஒரு சில நாட்களிலேயே தலைதூக்கும் என்பது நம்பிக்கை. ஆன்மீகம் சொல்லும் இந்த தாந்திரீக பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -