இந்த 3 பொருட்கள் எப்போதும் பூஜை அறையில் இருந்தால், கடன் இல்லாத வாழ்க்கையை வாழலாம். குடும்ப கஷ்டத்தை தீர்க்க போகும் அந்த பொருட்கள் என்னென்ன?

thamarai-vithai-lakshmi
- Advertisement -

எல்லா குடும்பத்திலும் கஷ்டம் இருக்கத்தான் செய்கிறது. மனித பிறவி எடுத்துவிட்டால், வரக்கூடிய கஷ்டங்களை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். கஷ்டம் இல்லாமல் இந்த பூமியில் எந்த ஜீவனும் வாழவில்லை. ஆகவே, கஷ்டத்தை கண்டு யாரும் பயப்படாதீங்க. கஷ்டத்திற்கு உண்டான தீர்வை தேடுங்க. வந்த கஷ்டங்கள் வந்த வழி தெரியாமல் திரும்ப சென்று விடும். இதுதான் முதல் வழி. அடுத்தபடியாக ஆன்மீகத்தில் கடவுளை நினைத்து ஏதாவது பரிகாரம் செய்யலாம். வீட்டில் தீராத கஷ்டம் கடன் சுமை இருக்கிறது என்றால், அந்த கஷ்டங்களை குறைப்பதற்கு என்ன முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமோ அதை முழு மூச்சோடு மேற்கொள்ளுங்கள். கூடவே சேர்த்து இந்த பரிகாரத்தையும் செய்யுங்கள். உங்களுடைய முயற்சிகள் 100% வெற்றி பெறும்.

கடன் சுமை குறைய பூஜை அறையில் வைக்க வேண்டிய 3 பொருட்கள்:
பண கஷ்டம் தீர வேண்டும் என்றால் உங்களுடைய வீட்டு பூஜை அறையில் தாமரை பூ  இருக்க வேண்டும். தாமரைப் பூ இருக்கும் இடத்தில் பணக்கஷ்டம் இருக்காது. செல்வ செழிப்பு தான் இருக்கும். தாமரைப் பூவால் மகாலட்சுமிக்கு பூஜை செய்ய வேண்டும். தினமும் தாமரைப்பூ வாங்குவது என்பது ஒரு சிலரால் முடியும். ஒரு சிலரால் முடியாது. தாமரை பூ கிடைக்காத பட்சத்தில் என்ன செய்வது. வீட்டில் விளக்கு ஏற்றுவீர்கள் அல்லவா. அதில் தாமரை தண்டு திரி போட்டு விளக்கு ஏற்றுங்கள். நாட்டு மருந்து கடைகளில் தாமரை விதை கிடைக்கும் அந்த விதையை வீட்டில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

தினமும் காலையில் எழுந்து சுத்த பத்தமாக குளித்துவிட்டு மண் அகல் விளக்கில் சுத்தமான நெய் ஊற்றி, அதில் தாமரை தண்டு திரி போடவும். அந்த நெய்யில் ஒரே ஒரு தாமரை விதை போட்டு விளக்கு ஏற்றி மகாலட்சுமி தாயை மனதார நினைத்து வேண்டுதல் வையுங்கள். உங்களுடைய பண கஷ்டம் படிப்படியாக குறையும். கடனை எல்லாம் சீக்கிரம் திருப்பிக் கொடுக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.

பூஜை அறையில் மகாலட்சுமிக்கு விருப்பமான தாமரைப்பூ, தாமரை தண்டு திரி, தாமரை மணிமாலை(தாமரை விதை), இந்த 3 பொருட்களும் இருந்தாலே போதும். உங்கள் குடும்பம் செல்வ செழிப்போடு இருக்கும். விளக்கில் போடக்கூடிய தாமரை விதைகளை வாரத்தில் ஒரு நாள் புதுசாக மாற்றினால் கூட போதும். தினமும் மனதிருப்தியோடு இந்த வழிபாட்டை மேற்கொள்பவர்களுக்கு மகாலட்சுமியின் அருள் ஆசி முழுமையாக கிடைக்கும்.

- Advertisement -

ஒரு தாமரை மணி மாலையை மகாலட்சுமி படத்திற்கு எப்போதும் மாலையாக போட்டு வைப்பது வீட்டிற்கு ரொம்ப ரொம்ப நல்லது. அந்த தாமரை மணி மாலையை தினமும் உங்கள் கையில் எடுத்து ‘ஓம் மகாலட்சுமி தாயே போற்றி!’ என்ற மந்திரத்தை ஜபிக்கலாம். தாமரை மணி மாலைக்கு இருக்கக்கூடிய பவர் இன்னும் கொஞ்சம் கூடும். இந்த மகாலட்சுமியின் மந்திரத்தை சொல்லிவிட்டு உங்கள் கையில் இருக்கும் தாமரை மணி மாலையை மீண்டும் மகாலட்சுமி படத்திற்கு மாலையாக போட்டு விடவும்.

இதையும் படிக்கலாமே: சமையலறையில் எப்போதுமே இல்லை என்று சொல்லாத அளவிற்கு பொருட்கள் நிறைவாக இருக்க, இதை மட்டும் செய்தாலே போதும். அன்னபூரணி தாயாரின் அனுகிரகம் பெற்று உங்க சந்ததியே வறுமை நிலையிலிருந்து தப்பித்து விடும்.

இப்படி தொடர்ந்து செய்து வர, அந்த மாலையில் பாசிட்டிவ் வைப்ரேஷன் நிறைவாக இருக்கும். தினமும் அதை நீங்கள் கையில் தொடும் போது அந்த மகாலட்சுமியின் அருளாசி உங்களுக்கும் கிடைத்து, உங்களுடைய கையில் பல மடங்கு பணம் சேர தொடங்கும். இதுதான் இந்த பரிகாரத்தில் மறைந்திருக்கும் சூட்சமம். நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சொல்லும் இந்த பரிகாரத்தை பின்பற்றித்தான் பாருங்கள். மூன்றே மாதத்தில் நல்ல பலனை உணருவீர்கள்.

- Advertisement -