குலதெய்வத்தை கண்டுபிடிக்க எளிமையான வழிபாடு

karuppa-sami
- Advertisement -

ஒரு குடும்பம் சுபிட்சம் அடைய வேண்டும் என்றால், அந்த குடும்பத்திற்கு குலதெய்வ வழிபாடு மட்டும்தான் ஒரே வழி. ஆனால் சில குடும்பங்களுக்கு குலதெய்வமே எது என்று தெரியாமல் தவித்து வருவார்கள். இவர்களாகவே, ஒரு தெய்வத்தை குலதெய்வமாக நினைத்துக் கொண்டு வழிபாடு செய்வார்கள்.

அந்த தெய்வத்தை இவர்கள் இஷ்ட தெய்வமாக ஏற்றுக் கொள்ள முடியுமே தவிர, எந்த நாளும் நம்முடைய இஷ்ட தெய்வம் குலதெய்வமாக மாறாது. சரி நீங்கள் செய்யும் இந்த இஷ்ட தெய்வ வழிபாடு, உங்கள் குலதெய்வம் எது என்பதை காட்டிக் கொடுக்கும். அதற்கான சூட்சமமான ஆன்மீகம் சார்ந்த ஒரு தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

குலதெய்வத்தை கண்டுபிடிக்க வழிபாடு

இன்று நாம் பார்க்கப் போவது பூசம் நட்சத்திரத்தன்று செய்ய வேண்டிய இஷ்ட தெய்வ வழிபாடுதான். இருக்கக்கூடிய 27 சித்திரங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த நட்சத்திரமாக சொல்லப்படுவது இந்த பூசம் நட்சத்திரம். மாதம் தோறும் பூசம் நட்சத்திரம் வரும் அல்லவா. அந்த பூசம் நட்சத்திரத்தன்று உங்களுடைய இஷ்ட தெய்வ கோவிலுக்கு சென்று மனம் உருகி வழிபாடு செய்யுங்கள்.

‘எங்களுடைய குலதெய்வம் எது என்று தெரியவில்லை. உன்னை இஷ்ட தெய்வமாகவும் எங்களுடைய குலதெய்வம் ஆகவும் நினைத்து வழிபாடு செய்கின்றோம். நீயே எங்களுடைய குல தெய்வத்தை, எங்கள் குடும்பத்திற்கு காட்டி கொடுத்து விடு’ என்று வேண்டுதல் வைத்தால் உங்கள் இஷ்ட தெய்வம் உங்களை, உங்களுடைய குலதெய்வத்திடம் கூட்டி செல்லும்.

- Advertisement -

பூசம் நட்சத்திரத்தன்று ஒருவர் இறைவனிடம் சென்று எந்த வரங்களை கேட்டாலும், அந்த வரத்தை இறைவன் கொடுக்க மாட்டேன் என்று சொல்லவே முடியாது. நீங்கள் கேட்ட வரத்தை அந்த இறைவன் நிச்சயம் கொடுத்து தான் ஆக வேண்டும். அதற்கான சக்தி இந்த பூசம் நட்சத்திரத்திற்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை நீங்கள் இஷ்ட தெய்வமாக யாரையுமே வழிபடவில்லை என்றால், உங்களுடைய குலதெய்வமாக இஷ்ட தெய்வமாக கருப்பசாமியை நினைத்துக் கொள்ளுங்கள். பூசம் நட்சத்திரத்தில் கருப்பசாமி கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யுங்கள். ‘என்னுடைய குலதெய்வம் எது என்று தெரியவில்லை. கருப்பசாமியை நீதான் அதை காட்டிக் கொடுக்க வேண்டும்’ என்று கேளுங்கள்.

- Advertisement -

மாதம்தோறும் வரக்கூடிய பூசம் நட்சத்திரத்தன்று இதே வழிபாட்டை மேற்கொண்டால் ஒரு சில மாதங்களில் உங்கள் குலதெய்வம் எது என்று உங்களுக்கு தெரிந்து விடும். உங்க ஊர் காரங்க அல்லது உங்க சொந்தகாரங்க யாரோ ஒருவரின் மூலம் அந்த குலதெய்வத்தை, இந்த இஷ்ட தெய்வம் ஆனது உங்களுக்கு தெரியப்படுத்து.

இதே போல இந்த பூசம் நட்சத்திரத்திற்கு நட்சத்திரத்திற்கு இன்னொரு சிறப்பு அம்சமும் உள்ளது. பூச நட்சத்திரத்தில் ஜீவசமாதிகளுக்கு சென்று வழிபாடு செய்வது மிக மிக அற்புதமான பலனைத் தரும். உங்க வீட்டு பக்கத்தில் ஏதாவது ஜீவசமாதி இருந்தால், பூசம் நட்சத்திரத்தன்று அந்த ஜீவசமாதிக்கு சென்று வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து 21 பூசம் நட்சத்திரத்தன்று ஜீவசமாதிக்கு சென்று வழிபாடு செய்தால் உங்களுக்கு அடுத்த பிறவியே கிடையாது.

இதையும் படிக்கலாமே: ஏழு தலைமுறை பாவம் நீங்க சிவ மந்திரம்.

இறைவனின் பாதங்களில் முக்தி கிடைத்து விடும். பூசம் நட்சத்திரத்தைப் பற்றி மேல் சொன்ன வழிபாட்டு முறைகளை மேற்கொள்ளுங்கள். கரடு முரடான உங்கள் வாழ்க்கை கஷ்டத்தை, கொடுக்கும் உங்கள் வாழ்க்கை, கசப்பான அனுபவத்தை கொடுத்திருக்கும் உங்கள் வாழ்க்கை உடனே இனிமையாக மாறிவிடும் என்ற இந்த தகவலோடு ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -