பொருளாதார நிலை உயர செல்ல வேண்டிய ஆலயங்கள்

money temple
- Advertisement -

ஒருவருடைய பொருளாதாரம் சிறப்பாக இருந்தால்தான் அவருடைய வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும். அதிலும் குறிப்பாக குடும்பத் தலைவரின் பொருளாதாரம் நிறைவாக இருந்தால்தான் அந்த குடும்பமே சிறப்பாக இருக்கும். அதனால் தான் ஒவ்வொரு குடும்பத் தலைவரும் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து தன்னுடைய பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அப்படிப்பட்ட பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ள முயற்சிகளை செய்யும் பொழுதே ஆலய வழிபாட்டையும் மேற்கொண்டால் விரைவிலேயே நல்ல பலனை பெற முடியும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பொருளாதாரத்தை உயர்த்தக்கூடிய ஆலயங்களை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

நம்முடைய வாழ்வில் நாம் சந்திக்கக்கூடிய ஒவ்வொரு நிலைக்கும் நவகிரகங்களே காரணமாக விளங்குகின்றன. அந்த வகையில் நம்முடைய பொருளாதாரத்தை நிர்ணயிக்கக்கூடிய கிரகமாக இரண்டு கிரகங்கள் திகழ்கின்றன. ஒன்று சுக்கிரன், மற்றொன்று குரு. சிறிய அளவிலான பண சுழற்சியை ஏற்படுத்தக் கூடியவர் சுக்கிரன் என்றும் பெரும்பணத்தை தரக்கூடியவர் குருபகவான் என்றும் கூறப்படுகிறது. இவர்கள் இருவரின் அருளும் நமக்கு பரிபூரணமாக இருந்தால்தான் பொருளாதாரத்தில் நம்மால் நல்ல முன்னேற்றத்தை அடைய முடியும்.

- Advertisement -

மேலும் இவர்கள் இருவருடன் ராகு சேர்ந்திருக்கும் பொழுது நம்முடைய பொருளாதார நிலை என்பது பல மடங்கு உயரும். ராகுவிற்கு பதிலாக கேது சேர்ந்திருந்தால் நம்முடைய பொருளாதாரத்தில் பின்னடைவை நாம் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். இது பொதுவாக ஜோதிட ரீதியாக கூறப்படுகின்ற செய்திகள். நம் ஜாதகத்தை ஒரு முறை பார்த்து எந்த சூழ்நிலையில் கிரகங்கள் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வது நல்லது.

இந்த பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய சில ஆலயங்கள் இருக்கின்றன. வெள்ளிக்கிழமை அன்று திருச்சி ஸ்ரீரங்கம் சென்று வழிபாடு செய்தால் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இது சுக்கிரனின் அம்சம் பொருந்திய ஆலயமாக திகழ்கிறது. வியாழக்கிழமை அன்று திருச்செந்தூர் சென்று முருகரை வழிபாடு செய்தால் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இது குரு பகவானின் அம்சம் பொருந்திய ஆலயமாக திகழ்கிறது.

- Advertisement -

மேலும் சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஆலயத்திற்கு வெள்ளிக்கிழமை அன்று சென்று காலையில் இருக்கக்கூடிய மகாலட்சுமி அலங்காரத்தை பார்ப்பதன் மூலம் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இதே போல் திருவனந்தபுரம் பத்ம சுவாமி ஆலயத்திற்கு பிறந்த மாதத்தில் பிறந்த நட்சத்திரம் வரும் நாளன்று சென்று அர்ச்சனை செய்து வழிபாடு மேற்கொள்ள அவர்களின் வாழ்வில் பல அற்புதமான முன்னேற்றம் ஏற்படும்.

வருடத்திற்கு ஒரு முறையாவது இந்த ஆலயத்திற்கு சென்று வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். ஆலயத்திற்கு செல்ல முடியாத காலங்களில் மிகவும் எளிமையான பரிகாரமாக வாராவாரம் வியாழக்கிழமை அன்று குரு பகவானுக்கு மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சனை செய்து நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் குரு பகவானின் அருள் கிடைக்கும்.

- Advertisement -

இதே போல் வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர பகவானுக்கு வெள்ளை நிற பூக்களால் அர்ச்சனை செய்து நெய் தீபம் ஏற்றி அதில் சிறிது கற்கண்டை போட்டு வழிப்பட சுக்கிர பகவானின் அருளும் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் முக்கியமான பணரீதியான விஷயங்களுக்கு செல்லும் பொழுது வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து செல்வதன் மூலம் குரு மற்றும் சுக்கிரனின் அருளோடு அந்த பணரீதியான பிரச்சனையில் நம்மால் வெற்றி பெற முடியும்.

இதையும் படிக்கலாமே: செல்வ செழிப்பை உயர்த்தும் தானியங்கள்

இந்த வழிபாட்டு முறைகளை பின்பற்றினால் கண்டிப்பான முறையில் நம்முடைய பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தை நம்மால் பெற முடியும்.

- Advertisement -