செல்வ செழிப்பை உயர்த்தும் தானியங்கள்

thaniyam
- Advertisement -

ஒருவர் செல்வ செழிப்புடன் வாழ வேண்டுமென்றால் அவருக்கு கண்டிப்பான முறையில் நவகிரகங்களின் அருள் வேண்டும். அதிலும் குறிப்பாக குரு, சுக்கிரன் மற்றும் சனி பகவானின் அருள் பரிபூரணமாக வேண்டும். யார் ஒருவர் ஜாதகத்தில் இவர்கள் மூவரின் பரிபூரணமான அருள் கிடைக்கிறதோ அவர்கள் கண்டிப்பாக முறையில் சீரும் சிறப்புடன் வாழ்வார்கள். அப்படி இவர்கள் மூவரையும் சிறப்பாக வைப்பதற்கு செய்யக்கூடிய ஒரு எளிய பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஒவ்வொரு கிரகங்களுக்கும் ஒவ்வொரு வகையான நன்மைகளும் இருக்கின்றன, தீமைகளும் இருக்கின்றன. நம்முடைய ஜாதகத்தில் அந்த கிரகத்திற்குரிய தீமை பலன்கள் ஏற்படுமாயின் அந்த தீமையை நீக்கி நன்மை தரக்கூடிய அளவிற்கு செய்வதற்கு அந்த கிரகத்திற்குரிய பரிகாரங்களை நாம் மேற்கொள்வோம். அந்த வகையில் ஒருவர் வாழ்வில் செல்வ செழிப்பிடம் வாழ வேண்டும் என்றால் குரு சுக்கிரன் மற்றும் சனிபகவானின் அருள் பரிபூரணமாக வேண்டும். அவர்களின் அருளை பரிபூரணமாக பெறுவதற்குரிய எளிய பரிகாரத்தை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

பொதுவாக ஒவ்வொரு கிரகத்திற்கு என்று ஒவ்வொரு நிறம், மலர், தானியம், உணவுப் பொருட்கள் என்று பல இருக்கின்றனர். எந்த கிரகத்தின் அருள் நமக்கு பரிபூரணமாக வேண்டுமோ அவர்களுக்கு உரிய நிறத்திலான உடைகளை அணிவதும் தானியங்களை அதிக அளவில் உபயோகப்படுத்துவதும் மலர்களை சாற்றுவது என்று பலவிதமான வழிப்பாட்டு முறைகளை நாம் இன்றளவும் கடைப்பிடித்து வருகிறோம். அந்த வகையில் இந்த பரிகாரத்திற்கு நமக்கு உதவக்கூடியது தான் அவர்களுக்குரிய தானியங்கள்.

இந்த பரிகாரத்தை நாம் வெள்ளிக்கிழமையில் வரக்கூடிய குரு ஹோரையில் செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால் சனிக்கிழமை வரக்கூடிய குரு ஹோரையில் செய்ய வேண்டும். வெள்ளை நிறத்தில் இருக்கக்கூடிய பட்டுத்துணி ஒன்றை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அதில் வெள்ளை மொச்சை, கருப்பு கொண்டை கடலை, கருப்பு எள் இவை மூன்றையும் சம அளவு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 100 கிராம் வெள்ளை மொச்சை வைத்தால் 100 கிராம் கொண்டைக்கடலை, 100 கிராம் கருப்பு எள் இப்படி ஒரே அளவில் இருப்பது போல் பார்த்துக் கொண்டு வாங்கி வைத்து அதை மூட்டையாக கட்டிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்த மூட்டையை அப்படியே பூஜை அறையில் வைத்து விடுங்கள். தினமும் வீட்டில் சாம்பிராணி தூபம் காட்டும் பொழுது இந்த மூட்டைக்கும் தூபம் காட்டி வழிபாடு செய்ய வேண்டும். இதை ஒரு வருடத்திற்கு ஒருமுறை மாற்றினால் போதும். அவ்வாறு மாற்றும் பொழுது இந்த பொருட்களை கால்படாத இடத்திலோ அல்லது ஓடுகின்ற நீரிலோ போட்டு விடலாம். மறுபடியும் புதிதாக பொருட்களை வாங்கி வைக்க வேண்டும்.

இந்த பரிகாரத்தை தை அல்லது புரட்டாசி மாதத்தில் செய்வது மிகவும் சிறப்புக்குரியதாக இருக்கும். கண்டிப்பான முறையில் கார்த்திகை மாதத்தில் இந்த பரிகாரத்தை செய்ய ஆரம்பிக்கக் கூடாது. இதில் இருக்கக்கூடிய வெள்ளை மொச்சை சுக்கிரனையும், கருப்பு கொண்டை கடலை குருவையும், கருப்பு எள் சனிபகவானையும் குறிக்கிறது என்பதால் இவர்களை நினைத்து நாம் இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது இவர்களின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். இவர்களின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் பட்சத்தில் நம் வாழ்வில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் நலமாக வாழ முடியும்.

இதையும் படிக்கலாமே: செல்வாக்கோடு வாழ செம்பருத்திப்பூ பரிகாரம்

மிகவும் எளிமையான இந்த பரிகாரத்தை முழு நம்பிக்கையுடன் செய்து வழிபடுபவர்கள் வாழ்வில் நல்ல பல மாற்றங்கள் கண்கூடாக தெரியும்.

- Advertisement -