பொருளாதார தடை நீங்க வழிபாடு

vanni maram money
- Advertisement -

ஒருவருக்கு பொருளாதாரம் சிறப்பாக இருந்தால்தான் அவர்கள் குடும்பத்தில் எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் நிம்மதியாக வாழ்க்கை ஓடும். அந்த பொருளாதாரம் சிறப்பாக இருப்பதற்கு பணவரவு என்பது தாராளமாக இருக்க வேண்டும். பணவரவு தாராளமாக இருக்க வேண்டும் என்றால் அதற்குரிய முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும். இப்படி நாம் முயற்சிகளை மேற்கொண்டாலும் ஏதாவது ஒரு ரூபத்தில் தடைகள் ஏற்பட்டு பொருளாதார முன்னேற்றம் ஏற்படாத சூழ்நிலை உண்டாகும் பொழுது வன்னி மரத்தை எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கடவுள் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்பது நம் அனைவரும் அறிந்த உண்மையே அதிலும் குறிப்பாக மரங்களை நாம் தெய்வமாக பாவித்து வழிபாடு மேற்கொள்கிறோம். இதனால் நமக்கு உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பல நன்மைகள் ஏற்படுகிறது. வேப்பமரம், வில்வமரம், ஆலமரம், அரசமரம், வன்னி மரம் என்று நாம் மரங்களை கூறிக் கொண்டே செல்லலாம். அந்த அளவுக்கு மகத்துவமும் மருத்துவமும் நிறைந்த மரங்களில் பொருளாதார முன்னேற்றத்தில் ஏற்படக்கூடிய தடைகளை விளக்க வன்னி மரத்தை வழிபடும் முறையைப் பற்றி பார்ப்போம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை நாம் சனிக்கிழமை அன்றுதான் மேற்கொள்ள வேண்டும். விடியற்காலையில் தான் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். அருகில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு வன்னி மரத்திடம் செல்ல வேண்டும். அங்கு விநாயகர் அல்லது வேறு ஏதாவது தெய்வங்கள் இருந்தாலும், தெய்வமே இல்லை வெறும் மரம் மட்டும்தான் இருக்கிறது என்றாலும் இந்த வழிபாட்டை நாம் மேற்கொள்ளலாம்.

தெய்வங்கள் இருந்தால் தெய்வங்களுக்கு தண்ணீரை ஊற்றி அபிஷேகம் செய்து பூக்களை சமர்ப்பித்து வழிபாடு மேற்கொள்ள வேண்டும். தெய்வங்கள் இல்லாத பட்சத்தில் அந்த வன்னி மரத்தடியை சுத்தம் செய்ய வேண்டும். பிறகு அதற்கு உங்கள் கைகளால் தண்ணீர் ஊற்ற வேண்டும். பிறகு சுத்தம் செய்த இடத்தில் சிறிது மஞ்சள் தூளை தூவி விட்டு பச்சரிசி மாவால் கோலம் போட வேண்டும்.

- Advertisement -

அந்த கோலத்தில் 8 அகல் விளக்குகளை வைக்க வேண்டும். அந்த விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி கருப்பு நிற திரியை போட வேண்டும். கருப்பு நிற திரியா? என்று கேட்டால் கருப்பு நிற பருத்தி துணியை நாம் திரியாக திரித்து உபயோகப்படுத்த வேண்டும் என்று அர்த்தம். பாலிஸ்டர் துணியை உபயோகப்படுத்த கூடாது. கருப்பு நிற திரியை போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

பிறகு அந்த தீபத்திற்கு முன்பாக சிறிது மலர்களையும் அதே சமயம் நாட்டுச்சக்கரை அல்லது கற்கண்டு போன்ற ஒரு இனிப்பு வகையை வைத்து பொருளாதார முன்னேற்றத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்க வேண்டும் என்று மனதார வழிபாடு செய்ய வேண்டும். இப்படி நாம் தொடர்ந்து செய்து வர நம்முடைய பொருளாதாரத்தில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் விலகும்.

இதையும் படிக்கலாமே: தீய சக்தியை விரட்டி அடிக்கும் லட்சுமி நரசிம்மர்.

முழு நம்பிக்கையுடன் சனிக்கிழமை தோறும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளும் நபர்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

- Advertisement -