பார்லருக்கு போய் காசு கொடுத்து ப்ளீச் செய்யாம வீட்டில் 1 உருளைக்கிழங்கு இருந்தா இப்படி செய்யுங்கள் போதும் இன்ஸ்டன்ட் ஷைனிங் உங்க ஃபேஸ்க்கு கிடைக்குமே!

potato-face-pack_tamil
- Advertisement -

ஒரு மாதத்திற்கு முகம் முழுக்க ஷைனிங்காக இருக்க பேசியல் செய்து கொள்வார்கள். ஆனால் இன்ஸ்டண்டாக க்ளோயிங் மற்றும் ஷைனிங் கிடைக்க முகத்தில் முதலில் ப்ளீச் செய்ய வேண்டும். இந்த ப்ளீச் செய்வதற்கு பெரும்பாலானோர் பார்லருக்கு சென்று காசைக் கொட்டி கொடுப்பார்கள். அப்படி இல்லாமல் வீட்டிலேயே எப்படி எளிதான முறையில் நம்முடைய முகத்தை பிளீச் செய்வது? இதனால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்னென்ன? என்பதை தான் அழகு குறிப்பு பதிவாக இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம்.

நம்முடைய முகம் ரொம்பவும் மென்மையானது. சென்ஸிட்டிவாக இருக்கக்கூடிய எந்த சருமத்தினரும் செயற்கை ப்ளீச் செய்வதை தவிர்க்க வேண்டும். இது பக்க விளைவுகளை சில சமயங்களில் ஏற்படுத்தி விடுகிறது எனவே வீட்டில் இயற்கையாக கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து உங்களுடைய முகத்தை நீங்கள் வாரம் ஒரு முறை ப்ளீச் செய்து வந்தால் என்றுமே இளமையுடன் இருக்க முடியும்.

- Advertisement -

ப்ளீச்சிங் செய்யும் பொழுது நம்முடைய சரும துவாரங்களுக்குள் இருக்கும் அழுக்குகள், இறந்த செல்கள், பாக்டீரியா தொற்றுகள் எதுவாகினும் எளிதாக நீங்கி விடுகிறது. அது மட்டும் அல்லாமல் கரும்புள்ளிகள், வெண்புள்ளிகள் இருந்தாலும் அவை மாயமாய் மறைந்து போகும். முகத்தில் மருக்கள் இருந்தாலும் உதிர்ந்து விடும். மேலும் காயம் பட்ட வடுக்களும் எளிதாக மறைந்து பளபளன்னு முகம் ஜொலிக்க ஆரம்பிக்கும்.

இவ்வளவு நன்மைகளை செய்யக்கூடிய இந்த ப்ளீச்சிங் இயற்கையாக நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எப்படி செய்வது என்று பார்ப்போமா? இதற்கு முதலில் ஒரு உருளைக்கிழங்கை எடுத்து மிக்ஸியில் அல்லது உரலில் இடித்து ஜூஸ் எடுத்துக் கொள்ளுங்கள். உருளைக்கிழங்கு சாறு 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு எடுத்து ஒரு பவுலில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் இருக்கக்கூடிய விட்டமின் சி சருமத்திற்கு நல்ல ஒரு ஆரோக்கியத்தை கொடுக்கும். மேலும் இதில் நிறைந்துள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட் சீக்கிரம் முதுமை அடைவதில் இருந்து நம்முடைய சருமத்தை பாதுகாக்கும்.

- Advertisement -

கருவளையத்தை முற்றிலுமாக அகற்றும். அரிப்பு, அலர்ஜி போன்ற நோய்கள் இருந்தாலும் இந்த உருளைக்கிழங்கு ஜூஸ் நல்ல ஒரு நிவாரணத்தை கொடுக்கும். இதனுடன் ஒரு டீஸ்பூன் அளவிற்கு கடலை மாவை சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் பயன்படுத்தும் கடலை மாவு வீட்டில் அரைத்ததாக இருந்தால் நன்றாக இருக்கும். பின்னர் இவற்றுடன் கால் ஸ்பூன் அளவிற்கு எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்வது நல்லது. சிலருக்கு எலுமிச்சை சாறு ஒவ்வாமையை ஏற்படுத்தும். ஒரு விதமான அரிப்பை இது உண்டாக்கும். இப்படிப்பட்ட சருமத்தினர் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டாம்.

இதையும் படிக்கலாமே:
ஃப்ரிட்ஜில் நீங்கள் எப்பொழுதும் வைத்திருக்கும் இந்த 1 பொருள் மட்டும் இருந்தால் உங்களுடைய தலைமுடி பிரச்சனை ஒரே வாரத்தில் தீர்ந்து விடுமே!

இதை மெதுவாக முகத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். ப்ளீச் செய்வது போல நன்கு மசாஜ் செய்ய வேண்டும். குறைந்தது அரை மணி நேரமாவது உங்களுடைய முகத்தில் இது போல மூன்று பிரிவுகளாக மசாஜ் செய்யுங்கள். முதல் பிரிவில் பத்து நிமிடம் மசாஜ் செய்த பின்பு வெதுவெதுப்பாக இருக்கும் தண்ணீரில் முகத்தை கழுவி விடுங்கள். மீண்டும் முகத்தில் இருக்கும் ஈரப்பதத்தை துடைத்து விட்டு இதே போல மசாஜ் செய்யுங்கள். இப்படி மூன்று முறை செய்தால் போதும், உங்களுடைய முகம் ஒரு வாரத்திற்கு பிரைட்டாக பளிச்சுன்னு இருக்கும். தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் அரை மணி நேரம் மட்டும் இதை நீங்கள் உங்களுடைய முகத்தில் செய்து வந்தால் நீங்களும் பேரழகு தான்.

- Advertisement -