தலையெழுத்தை மாற்றக்கூடிய சக்தி வாய்ந்த துர்க்கை மந்திரம்

durgai manthiram
- Advertisement -

மனிதனின் வாழ்க்கையானது இன்பம் துன்பம் சுக துக்கம் எல்லாம் கலந்த ஒன்று தான். இது பொதுவான கருத்து. ஒரு சிலர் வாழ்க்கையில் துன்பத்தையும் துயரத்தையும் தவிர வேறு எதையுமே அனுபவித்திருக்க மாட்டார்கள். நமக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என்று தினம் தினம் நொந்து கொண்டே காலத்தை கழிப்பார்கள். அப்படியானவர்களின் தலையெழுத்தை மாற்றி அவர்களையும் நல்ல முறையில் எல்லோரையும் போல் மகிழ்ச்சியாக வாழ வைக்கக் கூடிய ஒரு அற்புதமான மந்திர வழிபாட்டை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

துன்பங்கள் நீங்க துர்க்கை அம்மன் மந்திரம்

துர்க்கையின் சக்திகளையும் அற்புதங்களையும் பற்றி யாருக்கும் நாம் சொல்லித் தெரிய வேண்டியது கிடையாது. துன்பம் என்று அவரை நாடி சரணடைந்து விட்டால் போதும் உடனே அவர்களின் துன்பங்களை நீக்கக் கூடிய ஆற்றல் படைத்த அன்னையர் அதிலும் எதிரிகளை அழித்து தன்னுடைய பக்தர்களை வாழ வைப்பதில் அவருக்கு நிகர் அவரே தான்.

- Advertisement -

அப்படியான அந்த அன்னையை நம்முடைய துன்பங்கள் துயரங்களும் நீங்க ஒரே ஒரு மந்திரத்தை சொன்னால் போதும் என்று சொல்லப்பட்டிருக்கிறது அந்த மந்திரத்தை நாம் என்று சொல்ல வேண்டும் எப்படி சொல்ல வேண்டும் என்பதை தான் இப்பொழுது நாம் தெளிவாக தெரிந்து கொள்ள போகிறோம்.

ஓம் தும் துர்காய நமக
என்ற இந்த மந்திரத்தை செவ்வாய்க்கிழமை ராகுகால நேரத்தில் வடக்கு திசை பார்த்து அமர்ந்தபடி 108 முறை சொல்ல வேண்டும். ஒரு தெய்வத்தை நாம் சாதாரணமாக வணங்குவதற்கும் அவர்களுடைய சக்தி வாய்ந்த மந்திரத்தை சொல்லி வணங்குவதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு.

- Advertisement -

ஆகையால் தான் ஒவ்வொரு தெய்வத்திற்கும் தனியாக மந்திர வார்த்தைகள் நாம் கையாளுகிறோம். அந்த வகையில் துர்க்கை அம்மனுடைய இந்த சக்தி வாய்ந்த மந்திரத்தை நாம் சொல்லி அவரை வணங்கும் பொழுது நிச்சயம் அதற்கான பலன் அதிகமாகவே இருக்கும். இந்த மந்திரத்தை நீங்கள் ஆலயத்திற்கு சென்று தான் சொல்ல வேண்டும் என்று இல்லை வீட்டிலோ பணியிடத்திலிருந்து கொண்டு கூட செல்லலாம். ஆனால் இதை பயணத்தின் போது மட்டும் சொல்லக் கூடாது.

இதையும் படிக்கலாமே: கடன் தீர்க்கும் குபேர மந்திரம்

அதே போல் இந்த மந்திர வார்த்தையை சொல்லும் நாளன்று அசைவத்தை தவிர்த்து விட வேண்டும். சுத்தமாக இருக்க வேண்டும் பெண்களாக இருந்தால் மாதவிலக்கு நேரத்தில் இதை செய்யாமல் இருப்பது சிறந்தது. இந்த மந்திரத்தை சொல்லி வணங்கிய சில நாட்களுக்குள்ளாகவே உங்களுடைய துன்பங்கள் அனைத்தும் நீங்கி உங்கள் வாழ்க்கை நீங்கள் நினைத்தது போல இன்பமாய் மாறும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. நம்பிக்கை இருப்பின் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -