அம்பாளுக்கு இந்த 7 பூவை உங்கள் கையால் வாங்கிக் கொடுங்கள். தீராத பண கஷ்டம் தீரும். தீராத கடன் பிரச்சனை தீரும். ஏதாவது ஒரு ரூபத்தில் வருமானம் உங்களுக்கு பெருகிக்கொண்டே செல்லும்.

amman
- Advertisement -

உங்களுடைய குடும்பத்தில் தீராத மன கஷ்டம் எதுவாக இருந்தாலும் முதலில் இந்த வழிபாட்டை செய்யுங்கள். வீட்டை சுத்தம் செய்துவிட்டு பூஜை அறையில் இருக்கும் அம்பாலின் திருவுருவப்படத்திற்கு அலங்காரம் செய்துவிட்டு ஒரு விளக்கு ஏற்றி வையுங்கள். பிறகு வீட்டின் அருகில் இருக்கும் கோவிலுக்கு செல்லுங்கள். ஏதாவது ஒரு அம்மன் கோவில்‌ அந்த கோவிலில் இருக்கும் அம்பாளுக்கு உங்களால் முடிந்த ஒரு பொருளை வாங்கி செல்லலாம். ஒரு முழம் பூ வாங்கி கொடுத்தாலும் மனதிற்கு நிம்மதி கிடைக்கும். பிறகு அந்த கோவிலில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு அம்பாளை பார்த்தவாறு கோவிலில் சற்று நேரம் அமர்ந்து குறைகளை அம்பாளின் பாதங்களில் இறக்கி வைத்து விட்டு வாருங்கள். உங்களுடைய மனது ரொம்ப ரொம்ப லேசாகும். இது பொதுப்படையாக எல்லோருக்கும் சொல்லக்கூடிய ஒரு வழிபாட்டு முறை.

உடனடியாக ஒரே நாளில், ஒரு மணி நேரத்தில் மனது லேசாக வேண்டும் என்றால் அம்மன் கோவிலுக்கு செல்வதுதான் பெண்களுக்கு ஒரே ஒரு வழி. நம்பிக்கை உள்ளவர்கள் இதை பின்பற்றலாம். அடுத்து பண கஷ்டம் இருப்பவர்கள் கடன் சுமையில் மனபாரம் கொண்டவர்கள் அம்பாள் வழிபாட்டை எப்படி செய்யலாம் என்பதை பற்றிய ஆன்மீகம் சொல்லும் ஒரு பரிகாரத்தையும் இப்போது பார்க்கப் போகின்றோம்.

- Advertisement -

கடன் சுமை தீர அம்பாள் வழிபாடு:
உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று அர்ச்சகரிடம் கேட்டால் அவர் அம்பாளுக்கு அபிஷேகம் செய்த மஞ்சளை உங்களுக்கு கொடுப்பார். அந்த மஞ்சளை வீட்டிற்கு கொண்டு வாருங்கள். தினமும் குளித்துவிட்டு காலையில் குரு பகவானையும், அம்பாலையும், நினைத்த அந்த மஞ்சளை நெற்றியில் இட்டு வந்தால் உங்களுக்கு பண கஷ்டம் என்பது வராது. கடன் சுமை படிப்படியாக குறையும்.

அடுத்து வெள்ளிக்கிழமை தோறும் ஏழு என்ற கணக்கில் மஞ்சள் நிற பூவை உங்கள் கையால் அம்பாளுக்கு கொண்டு போய் கொடுக்க வேண்டும். ஒரே மாதிரி இருக்கும் ஏழு வண்ண மஞ்சள் பூவையும் எடுத்துச் செல்லலாம். உதாரணத்திற்கு ஏழு சாமந்திப்பூவை கூட நீங்கள் அம்பாளுக்கு கொண்டு போய் கொடுக்கலாம், அல்லது வகை வகையாக ஏழு மஞ்சள் நிற பூ உங்களுக்கு கிடைத்தால் இன்னும் சிறப்பு. அந்த ஏழு வகையான பூவை கொண்டு போய் அம்பாளுக்கு கொடுத்து உங்கள் பெயரை சொல்லி அர்ச்சனை செய்து அம்பாலின் முன்பு சிறிது நேரம் அமர்ந்து உங்கள் பண பிரச்சினை தீர வேண்டும் என்று வேண்டிக் கொண்டாலும் உங்களுக்கு பண கஷ்டம் படிப்படியாக குறையும்.

- Advertisement -

எப்போதுமே அம்பாள் கோவிலுக்கு சென்றால் கஷ்டங்கள் தீர விளக்கு ஏற்றும் பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு விளக்கு ஏற்ற வேண்டும். நல்லெண்ணெய் தீபம் அல்லது நெய் தீபம் உங்கள் வசதிக்கு ஏற்ப அதை ஏற்றலாம். இப்படி தொடர்ந்து அம்பாள் வழிபாட்டை செய்து வர உங்களுடைய கஷ்டங்கள் எல்லாம் படிப்படியாக குறைய தொடங்கி விடும்.

இதையும் படிக்கலாமே: வியாபாரம் செய்யும் இடத்தில் செல்வ வளம் கொழிக்க, சில்லறை காசுகள் எல்லாம் கட்டுக்கட்டாக நோட்டு பணமாக மாற, இதோ இந்த ஒரு விளக்கை மட்டும் ஏற்றி வையுங்கள் போதும்.

அம்பாள் வெறும் கடவுள் அல்ல நம்முடைய ஒவ்வொருவருக்கும் தாய். ஆகவே நம்முடைய கஷ்டத்தை புரிந்து கொண்டு அவள் நமக்கான நல்ல வழியை காட்டிக் கொடுப்பாள் என்ற இந்த தகவலுடன் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -