கொத்துக்கொத்தாய் கொந்தளித்துக் கொண்டு இருக்கும் பிரச்சனைக்கு கூட தீர்வு தரும் கொத்தவரங்காய். பெரிய பஞ்சாயத்துக்கு போறீங்கன்னா இதை செஞ்சுட்டு போங்க.

- Advertisement -

கொத்துக்கொத்தாய் இருக்கும் பிரச்சனையா. அப்படி என்றால் என்ன. பெரிய அளவில் சில குடும்பத்தில் பஞ்சாயத்து இருக்கும். அங்காளிகள் பங்காளிகள், அண்ணன் தம்பிகள் என்று கூடி பிரச்சனை செய்வதற்காகவே பஞ்சாயத்தை கூட்டுவார்கள். சில பேருக்கு சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனை இருக்கும். சில பேருக்கு, மதிப்பு மரியாதையில் குறைவு என்ற பிரச்சனை இருக்கும். திடீரென்று பார்த்தால் திருமணத்தில் கூட கைகலப்பு வந்து பஞ்சாயத்து என்று வந்து நிற்பார்கள். இப்படி பெரிய அளவு பிரச்சனை வந்துவிட்டது அதை சரி செய்ய நீங்க போறீங்க என்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

பெரிய அளவில் தலைக்கட்டு உள்ள குடும்பத்தில் பத்து பதினைந்து பேர் இருப்பார்கள். ஒருவர் சொல்லுவதை இன்னொருவர் கேட்க மாட்டார்கள். இப்படிப்பட்ட குடும்பத்தில் பெரிய பிரச்சனை என்றாலும் அதை தீர்த்து வைக்க இந்த பரிகாரம் கை கொடுக்கும்.

- Advertisement -

கொந்தளிக்கும் பிரச்சனைக்கு தீர்வு தரும் கொத்தவரங்காய்:
உதாரணத்திற்கு ஒரு பூர்வீக சொத்து பிரச்சனை என்று வைத்துக் கொள்வோம். கோர்ட்டு கேஸ் ரொம்ப நாட்களாக நடந்து கொண்டு இழுப்பறியாகவே இருக்கிறது. ஒரு முடிவுக்கு வரவே இல்லை என்றால் அந்த வழக்குக்கு செல்வதற்கு முன்பு நான்கு கொத்தவரங்காய்களை கையில் எடுத்துக் கொண்டு, உங்கள் தடையை மூன்று முறை சுற்றி அந்த கொத்தவரங்காய் இரண்டாக முறித்து அப்படியே தூர தூக்கிப்போட்டு விட்டு செல்லுங்கள். (இந்த கொத்தவரங்காய் முறிந்து போவது போல, உங்களுடைய பெரிய பிரச்சனையும் முடிந்து போகும்).

சில பேர் சில கிராமங்களில் பஞ்சாயத்து வைத்து பிரச்சனைகளை தீர்ப்பதற்காக போவார்கள். அப்படி பஞ்சாயத்தில் வைத்து ஒரு பிரச்சனையை பைசல் செய்வதாக இருந்தாலும் நீங்கள் அந்த பஞ்சாயத்திற்கு செல்வதற்கு முன்பு கொத்தவரங்காயை உங்கள் தலையை சுற்றி முறித்து போட்டு விட்டு சென்று பாருங்கள். அந்தப் பிரச்சினை காண முடிவு உடனடியாக கிடைத்துவிடும்.

- Advertisement -

இப்படி காலம் காலமாக தீர்க்க முடியாத குடும்ப பிரச்சினை, கணவன் மனைவி பிரச்சனை, பைசல் பிரச்சனை, என்று பெரிய அளவில் இருக்கும் எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு தரக்கூடிய சக்தி கொத்தவரங்காய்க்கு உண்டு. படிக்கும்போது யாராலும் இதை நம்ப முடியாது. ஆனால் முயற்சி செய்து பார்த்த பின், இந்த பரிகாரத்திற்கு பின்னால் இருக்கும் பவர் நிச்சயம் எல்லோருக்கும் தெரியும்.

இதையும் படிக்கலாமே: தெரியாமல் கூட இந்த தெய்வங்களுக்கு இந்த பூவை சாற்றி வழிபடாதீர்கள் பலன் இருக்காது தெரிந்து கொள்ளுங்கள்!

உங்களுக்கு எந்த பிரச்சனைகள் எல்லாம் தலைவலியை கொடுக்கிறது என்று நினைக்கிறீர்களோ, அந்த பிரச்சனைக்கு எல்லாம் ஒரு முடிவு கட்ட இந்த பரிகாரத்தை செய்யலாம். ஆண்களும் இந்த பரிகாரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். பெண்களும் இந்த பரிகாரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். எளிமையான முறையில் இப்படி அன்றாடம் நாம் பயன்படுத்தும் காய்கறி பழவகைகளை வைத்து அந்த காலத்தில் சித்தர்கள் நமக்கான சின்ன சின்ன பரிகாரங்களை வகுத்து வைத்துள்ளார்கள். காலப்போக்கில் அது மறந்து விட்டது மறைக்கப்பட்டது. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த எளிமையான பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -