இனி வாழ வழியே இல்லை என கலங்கி நின்றவர்களை கூட, ராஜ வாழ்க்கை வாழ வைக்க இந்த கிராம்பு இருந்தா போதும். தீர்க்கவே முடியாத சிக்கலை கூட தீர்க்கும் சக்தி வாய்ந்த பரிகாரம்.

- Advertisement -

இந்த வாழ்க்கை எந்த அளவுக்கு இன்பத்தை கொடுக்குமோ, அதை விட பல மடங்கு துன்பத்தை கொடுக்கக் கூடியது தான். ஒரு சிலர் வாழ்க்கையில் தொடர்ந்து துன்பத்திற்கு ஆளாகி சொல்ல முடியாத சிக்கல்களில் எல்லாம் சிக்கி இனி வாழ வழியே இல்லை என்று முடிவெடுத்தவர்கள் கூட, நல்லபடியாக வாழ இந்த பரிகாரம் செய்தால் போதும். எப்படியான பிரச்சனையில் இருந்தும் வெளியிடலாம் என்று சொல்லப்படுகிறது.

வாழ்க்கையில் பிரச்சனை இல்லாத மனிதன் என்று யாருமே இருக்க முடியாது. எல்லோருக்கும் பிரச்சினைகள் இருக்கும் அதன் அளவுகள் மட்டுமே மாறும். என்ன இருந்தாலும் பிரச்சனைகளை எதிர்த்து போராடி சமாளித்து வாழ்வதில் தான் வாழ்க்கையின் சுவாரசியமே இருக்கிறது. வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகளை வெல்ல ஆன்மீகம் நமக்கு சில தாந்த்ரீக பரிகாரங்களை தந்திருக்கிறது அதில் ஒன்றான கிராம்பு பரிகாரத்தை பற்றி தான் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

மீள முடியாத துயரிலிருந்து மீள பரிகாரம்:
இந்த பரிகாரம் செய்வதற்கு நம் வீட்டில் ஆஞ்சநேயர் படம் இருக்க வேண்டும். இதை கோவில்களில் கூட செய்யலாம் இருந்தாலும் வீட்டில் செய்வது இன்னும் விசேஷம். ஆஞ்சநேயர் படம் இல்லாதவர்கள் நம்முடைய பெரும் துயரை போக்க ஒரே ஒரு ஆஞ்சநேயர் படத்தை வாங்கி பூஜையறையில் வைத்து விடுங்கள். அதே போல் உடையாமல் நல்ல நிலையில் கிராம்பை பார்த்து வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த பரிகாரத்தை எந்த நாளில் வேண்டுமானாலும் தொடங்கலாம். பரிகாரம் தொடங்கும் நாளில் காலையில் எழுந்து குளித்து முடித்து பூஜை அறையில் அமர்ந்து 21 கிராம்புகளை வைத்து மாலையாக தொடுத்து ஆஞ்சநேயர் படத்திற்கு போட்டு விடுங்கள். இதே போல் 21 நாட்கள் தொடர்ந்து 21 கிராம்புகளை வைத்து கட்டி இந்த கிராம்பு மாலைகளை போட வேண்டும். முதல் நாள் போட்ட மாலை அடுத்த நாள் போடும் போது எடுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். 21 நாள் இந்த பரிகாரம் முடிந்த பிறகு இந்த கிராம்பை எடுத்து வைத்துக் கொண்டு சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதை அசைவத்தில் சேர்க்காமல் இருந்தால் நல்லது.

- Advertisement -

அதே போல் இந்த பரிகாரம் செய்யும் 21 நாளும் அசைவம் சாப்பிடாமல் இருந்தால் மிகவும் நல்லது. 21வது நாள் பரிகாரம் முடியும் அன்று அருகில் உள்ள ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு சென்று தீபம் ஏற்றி வழிபட்டு வந்து விடுங்கள். இத்துடன் எனக்கு இருக்கும் பிரச்சைனைகள் அனைத்தும் நீங்க வேண்டும் என்று மனதார வேண்டி கொள்ளுங்கள்.

எத்தனை பெரிய துன்பமாக இருந்தாலும், எத்தனை பெரிய துயரமாக இருந்தாலும் நிச்சயமாக அதிலிருந்து மீள்வதற்கான வழியை ஆஞ்சநேயர் காட்டுவார். அதுவும் இந்த பரிகாரம் தொடங்கி பரிகாரம் முடியும் நாட்களுக்குள்ளாகவே இதற்கான பலன் கிடைக்கும். இந்த பரிகாரத்தை மிகவும் நம்பிக்கையுடனும், பக்தியுடனும் செய்ய வேண்டியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: குலதெய்வ கோவிலுக்கு போகும் பொழுது கொண்டு செல்ல வேண்டிய ஒரு முக்கியமான பொருள் என்ன? தவறியும் இந்த பொருளை அந்த ஊரில் வாங்காதீங்க!

வாழ்க்கையில் எத்தனை பெரிய துன்பம் வந்தாலும் அதை இன்பமாக மாற்றி வாழ வைக்க இது போன்ற தாந்திரீக பரிகாரங்கள் உதவி புரியும் என்ற தகவலுடன் பதிவை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -