சூரிய ஓரையில் இந்த செடியானது உங்கள் வீட்டிற்குள் வந்து விட்டால் போதும். தாராளமான பணவரவுடன் குடும்பத்தில் சண்டை சச்சரவு நோய் நொடி எதுவும் இல்லாமல் சகல சௌபாக்கியத்தோடும் மகிழ்ச்சியாக வாழ்வீர்கள்.

surya bhagavan family
- Advertisement -

என்ன தான் கையில் பணம், காசு எல்லாம் சேர்த்து இருந்தாலும் குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் இல்லை என்றால் நாம் சேர்க்கும் பணம் சம்பாதிக்கும் அனைத்துமே வீண் தானே. இத்தனை சம்பாதிப்பதற்கு காரணமே குடும்பத்தாரின் மகிழ்ச்சியையும் அவர்களின் தேவைகளை நிறைவேற்ற கொள்ளத் தான். இத்தனை செய்தும் அங்கே நிம்மதி இல்லாமல் எப்போதும் சண்டை சச்சரவாக இருந்தால் வாழ்க்கையே போராட்டமாக மாறி விடும் அல்லவா.

இந்த சூழ்நிலையில் தான் இன்றைய பெரும்பாலான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவை எல்லாம் மாறி குடும்பத்தில் எப்பொழுதும் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்து இருக்க ஆன்மீகத்தில் ஒரு சில பரிகாரங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. அதில் ஒன்றான நாயுருவி செடி பரிகாரம் பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க
நாயுருவி செடி இது அநேகமான ஆன்மீக பரிகாரங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்தச் செடியின் வேரை முறைப்படி பூஜை செய்து வைக்கும் போது பணவரவையும் அதிகரிக்க கூடிய ஆற்றலை தர வல்லது. இந்த செடியானது இருக்கும் இடத்தில் சகல சௌபாக்கியங்களும் பணவரமும் நிலைத்து இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலைக்க இந்த நாயுருவி செடியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பார்க்கலாம்.

இந்த நாயுருவி செடியை வெளியில் எங்கு இருந்தும் கொண்டு வரக் கூடாது. பணம் கொடுத்து கார்டனில் வாங்க வேண்டியது மிகவும் முக்கியம். இப்படி வாங்கும் வாங்கும் போது உங்கள் வீட்டில் இருக்கும் யாருக்கும் சந்திராஷ்டமம் இல்லாமல் இருக்க வேண்டும் அதுவும் மிகவும் முக்கியம். அதே போல் இந்தச் செடி வாங்க உங்களுக்கு ராசியான நாள் எதுவோ அதையே தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம். இந்த நாளில் தான் வாங்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை.

- Advertisement -

இந்த செடியை வாங்கும் தினத்தில் சூரிய ஓரை இருக்கும் நேரத்தில் இதை நீங்கள் பணம் கொடுத்து வாங்கி வீட்டிற்கு கொண்டு வர வேண்டும் இது தான் மிகவும் முக்கியம். இப்படி வாங்கி வந்த இந்த செடியை வீட்டில் வடகிழக்கு மூலையில் வைக்க வேண்டும் இந்த திசையும் மிகவும் முக்கியம் அதையும் கவனமாக பார்த்து வைத்து விடுங்கள். இதை வீட்டில் வைத்த உடன் கொஞ்சம் மஞ்சள் கலந்த தண்ணீரை தெளித்து விட்டு நீங்கள் எப்போதும் போல இந்த செடிக்கு தண்ணீர் ஊற்றி பராமரித்து வளர்த்து வாருங்கள்.

இதையும் படிக்கலாமே: வியாபாரம் செய்யும் இடத்தில் செல்வ வளம் கொழிக்க, சில்லறை காசுகள் எல்லாம் கட்டுக்கட்டாக நோட்டு பணமாக மாற, இதோ இந்த ஒரு விளக்கை மட்டும் ஏற்றி வையுங்கள் போதும்.

இந்த செடியானது எப்படி செழித்து வளர்கிறதோ அது போல உங்கள் குடும்பத்தில் இருக்கும் துன்பங்கள் துயரங்கள் எல்லாம் மறைந்து சந்தோசம் தழைத்து வளர்ந்து பணவரவு அதிகரித்து நிம்மதியான சூழ்நிலையில் வாழக்கூடிய யோகத்தை இது உருவாக்கிக் கொடுக்கும். இந்த நாயுருவி செடி பரிகாரத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் இதை உடனே வாங்கி செய்து சந்தோஷமான வாழ்க்கையை குடும்பத்துடன் வாழ்ந்து நிம்மதியாக இருக்கலாம் என்று தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -