நாளை புரட்டாசி மாத 2ஆம் சனிக்கிழமை. சீக்கிரம் சொந்த வீடு வாங்க, சிவப்பு நிற துணியில் இந்த 3 பொருட்களை முடிந்து வையுங்கள்.

perumal
- Advertisement -

நாளை புரட்டாசி மாதத்தில் வந்திருக்கக்கூடிய இரண்டாவது சனிக்கிழமை என்பது நாம் எல்லோருக்கும் தெரியும். அதில் என்ன அற்புதம் வாய்ந்த சிறப்பு இருக்கிறது. சொந்த வீடு வாங்குவதற்கான யோகம், நாளை வழிபாட்டு நமக்கு எப்படி கிடைக்கும், என்பதை பற்றிய தெளிவான விளக்கத்தை கொடுக்கவே இந்த பதிவு. நாளை பெருமாளுக்கு உகந்த இந்தப் புரட்டாசி மாத சனிக்கிழமையில் கேட்டை நட்சத்திரமும் சேர்ந்து வந்திருக்கின்றது. இந்த கேட்டை நட்சத்திரத்தின் அதிபதி வராக மூர்த்தி. இதோடு முருகருக்கு உகந்த சஷ்டி திதியும் சேர்ந்து வந்திருக்கின்றது. கேட்டையில் பிறந்தவர்கள் கோட்டை கட்டி ஆள்வார்கள் என்ற பழமொழி உண்டு அல்லவா.

முருகர் வழிபாடு நிச்சயமாக நமக்கு சொந்த வீடு வாங்கித் தரும் யோகத்தை கொடுத்து விடும். பெருமாள் வழிபாடு கோடி கோடியாக பணத்தை கொட்டி தரும் ஆக இந்த 3 சிறப்பம்சங்களைக் கொண்ட இந்த நாளில் நாம் செய்ய வேண்டிய பரிகாரத்தை தெரிந்து கொள்ள தவறலாமா.

- Advertisement -

சரி இப்போது நேரடியாக பரிகாரத்தை பார்த்து விடலாம். நாளைய தினம் உங்களுடைய வீட்டில் பெருமாள் வழிபாடு நிச்சயம் இருக்கும். தளிகை போடுபவர்கள் வழக்கம்போல தழுகை போட்டு முடித்து விடுங்கள். நாளைய தினம் காலை அல்லது மாலை எந்த நேரத்தில் உங்களுக்கு ஓய்வு நேரம் கிடைக்கிறதோ, அப்போது இந்த பரிகாரத்தை செய்யுங்கள். ஒரு சதுர வடிவில் சிவப்பு நிற துணியை எடுத்துக் கொள்ளுங்கள்.

அந்த சிவப்பு நிற துணியில் 11 ரூபாய், ஏலக்காய் 3, கிராம்பு மூன்று, பச்சை கற்பூரம் ஒரு சிறிய துண்டு, பெருமாள் படத்தின் மீது வைத்திருக்கும் துளசி இலை, இந்த பொருட்களை எல்லாம் வைத்து ஒரு சிறிய முடிச்சாக கட்டி பெருமாளின் பாதங்களில் வைத்து விடுங்கள். அதன் பின்பு பூஜை அறையில் ஒரு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, பூஜையறையில் அமர்ந்து இந்த வராக மூர்த்தியின் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். கேட்டை நட்சத்திரத்தின் அதிபதி இந்த வராஹராக மூர்த்தி தான். அதனால் இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

- Advertisement -

ஓம் நாராயணாய வித்மஹே
பூமிபாலாய தீமஹி
தன்னோ வராஹ ப்ரசோதயாத்

இந்த மந்திரத்தை எத்தனை முறை உங்களால் முடியுமோ அத்தனை முறை உச்சரித்து, உங்களுடைய கோரிக்கைகளை இறைவனிடம் வைக்க வேண்டும். சொந்தமாக வீடு நிலம் வாங்க வேண்டும் என்ற ஆசை கொண்டவர்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம். அப்படி இல்லை என்றால் பூர்வீக சொத்து வழக்குகள் நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருக்கிறது என்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். சில பேருக்கு சொத்தில் நிறைய வில்லங்கங்கள் இருக்கும். சொத்து கைக்கு வந்து சேருவதில் சிரமங்கள் இருக்கும். அப்படிப்பட்ட பிரச்சனை உள்ளவர்களும் இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

- Advertisement -

இதனுடன் கூடவே வழிபாட்டில் முருகப்பெருமானையும் மனதார நினைத்து வேண்டிக் கொள்ளுங்கள். முடிந்தால் முருகனின் திருவுருவப்படத்திற்கு முன்பு ஒரு சிறிய மண் அகல் விளக்கை வெற்றிலையின் மேல் வைத்து நெய் ஊற்றி தீபம் ஏற்றுவது சிறப்பு. பெருமாள் அவதாரம் தான் இந்த வராக மூர்த்தி உங்களுடைய வீட்டில் பெருமாளின் படம், விஷ்ணு பகவானின் படம், நாராயணரின் படம் இப்படி எந்த திருவுருவப்படம் இருந்தாலும் அந்த படத்திற்கு முன்பாக நீங்கள் முடிந்து வைத்த சிவப்பு முடிச்சை வைத்து வேண்டுதல் வைத்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: வாழ்நாள் முழுவதும் கவலையே இல்லாமல் சிரித்துக் கொண்டே வாழும் வாழ்க்கை வேண்டுமா? வாரத்தில் 1 நாள் இதை சாப்பிட்டாலே போதுமே.

ஒரு வாரம் அந்த முடிச்சு பூஜை அறையிலேயே இருக்கட்டும். நீங்கள் பெருமாள் கோவிலுக்கு செல்லும்போது அந்த முடிச்சை பிரித்து உள்ளே இருக்கும் காணிக்கையை பெருமாள் கோவில் உண்டியலில் செலுத்தி விடலாம். அடுத்த வாரம் சனிக்கிழமை கூட இந்த காணிக்கையை செலுத்தலாம். வாடிய மீதம் இருக்கக்கூடிய பொருட்களை கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். மேல் சொன்ன வழிபாட்டை மன நிறைவோடு நம்பிக்கையோடு செய்தால் நிச்சயமாக உங்கள் பிரச்சனைக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -