வாழ்நாள் முழுவதும் கவலையே இல்லாமல் சிரித்துக் கொண்டே வாழும் வாழ்க்கை வேண்டுமா? வாரத்தில் 1 நாள் இதை சாப்பிட்டாலே போதுமே.

curd-rice
- Advertisement -

வாழ்நாள் முழுவதும் சிரித்துக் கொண்டே வாழ்ந்தால் நாம் ஆரோக்கியமாக இருப்போம். உடல் ரீதியாக கூட எந்த ஒரு நோய் நொடியும் வராது. மன அழுத்தம் இருக்காது. வாழ்க்கை பாரமாகவே தெரியாது. உங்களுடைய வாழ்க்கையை நீங்கள் சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் ஆன்மீக ரீதியாக என்னென்ன பரிகாரங்கள் செய்யலாம். உங்களுக்காக ஒரு சில குறிப்புகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு எது சுலபமாக இருக்கிறதோ அதை பின்பற்றி பலன் பெறுங்கள். வாழ்க்கையில் திருப்தி என்ற ஒன்று இருந்தால்தான் இன்பம் என்ற ஒன்று வரும். இன்பம் இருந்தால் தான் முகத்தில் புன்னகை இருக்கும். ஆகவே வாழ்கின்ற வாழ்க்கையை மனதிருப்தியோடு நிறைவோடு வாழத் தொடங்குங்கள் என்ற இந்த தகவலோடு இன்றைய பதிவிற்குள் செல்வோம்.

வாரம் தோறும் வரக்கூடிய திங்கட்கிழமையில் தயிர் சாதம் சாப்பிட்டு வந்தால், நம்முடைய மனது மகிழ்ச்சியாக இருக்கும். எப்போதும் சிரித்துக் கொண்டே வாழலாம். அதேபோல திங்கட்கிழமை வெள்ளிக்கிழமை நீர் மோரை தானமாக கொடுக்க வேண்டும். ரோட்டோரங்களில் வெயிலில் கஷ்டப்படுகிறார்கள் அல்லவா, அவர்களுக்கு நீர்மோர் தானம் கொடுக்கலாம். பசியில் வாடிக் கொண்டிருப்பவர்களுக்கு நீர்மோர் தானம் கொடுக்கலாம்.

- Advertisement -

சில பேர் வெயிலிலேயே அயராது உழைக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். ரோட்டோரங்களில் கடைகள் வைத்து ரொம்பவும் கஷ்டப்படுவார்கள், கட்டிட வேலை செய்பவர்கள் என்று பார்த்தால் அவர்களுக்கு உங்கள் கையால் நீர்மோர் தானமாக வாங்கிக் கொடுங்கள். எந்த கிழமை வாங்கிக் கொடுத்தாலும் தவறு கிடையாது. ஆனால் சாஸ்திரப்படி திங்கட்கிழமை வெள்ளிக்கிழமை இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு மன நிம்மதி அதிகமாகும்.

அதேபோல திங்கட்கிழமை வெள்ளிக்கிழமைகளில் ஏதாவது ஒரு அருவியில் குளிப்பது நல்லது. உங்களுடைய வீட்டின் அருகில் ஏதாவது அருவி இருந்தால் அந்த இடத்தில் போய் குளித்துவிட்டு வரலாம் தவறு கிடையாது. அப்படி இல்லை என்றால் புண்ணிய ஸ்தலங்களில் அறிவு இருக்கும் அந்த இடங்களுக்கு சென்று குளித்தாலும் மன நிம்மதியை பெற முடியும்.

- Advertisement -

கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை வந்து கொண்டே இருக்கிறது. குடும்பத்தில் நிம்மதி இல்லை. கணவனும் சிரிப்பது கிடையாது. மனைவியும் சிரிப்பது கிடையாது. சொல்ல போனால் விவாகரத்து வரை கூட பிரச்சனை சென்றவர்கள், இந்த பரிகாரத்தை செய்யலாம். கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ இல்லற வாழ்க்கையில் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் டைவர்ஸ் அப்ளை பண்ணியாச்சு. என்ன செய்வது.

இதையும் படிக்கலாமே: உங்கள் வீட்டில் பூஜையின் போது இந்த ஒரு பொருளை மட்டும் சாமி படத்திற்கு முன்பாக காட்டுங்கள், தெய்வம் உங்கள் வீட்டில் மகிழ்ச்சியாக வந்து அமர்ந்து விடும்.

ஒன்றாக சேர்ந்து வாழ வேண்டும் என்ற விருப்பம் இருப்பவர்கள் ஒன்பது சீப்புகளை வாங்கி யாருக்காவது தானம் கொடுக்க வேண்டும். சீப்பு தானம் நிச்சயமாக கணவன் மனைவிக்குள் ஒற்றுமையை அதிகரிக்கும். தனியாக சீப்பை தானம் கொடுக்க முடியவில்லை என்றால் கூட பரவாயில்லை. வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், சிறிய கண்ணாடியுடன் ஒரு சீப்பு வைத்து ஒரு செட் விற்கும். அதை 9 என்ற கணக்கில் வாங்கி கோவிலுக்கு சென்று அங்கு வரக்கூடிய பெண் பக்தர்களுக்கு கூட இந்த தாம்பூலத்தை தானமாக கொடுக்கலாம். இதை செய்தாலும் குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். மேல் சொன்ன குறிப்புகளில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -