செல்வ வளம் பெருக யானை பொம்மை பரிகாரம்

indiran
- Advertisement -

யானையை வீட்டில் எந்த திசையில் வைத்தால் செல்வம் கொழிக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு, நாம ஒரு குட்டிக்கதையை பார்க்கப் போகின்றோம். தேவலோகத்தில் இந்திரன், தன் மகளான தெய்வானையை முருகப்பெருமானுக்கு திருமணம் செய்து கொடுக்கின்றார். அப்போது தன்னிடம் இருக்கும் செல்வ வளங்களை எல்லாம், தன் மகளுக்கு சீர்வரிசையாக கொடுத்து சந்தோஷமாக திருமணத்தை நடத்தி முடிப்பார் இந்திரன்.

ஆனால் தெய்வானையின் முகம் வாட்டமாக இருக்கும். என்னவென்று முருகப்பெருமான் தெய்வாயை பார்த்து கேட்டபோது, ‘என்னுடைய அப்பா எல்லா செல்வத்தையும் எனக்கே சீர்வரிசையாக கொடுத்துவிட்டார். இப்போது அவரிடம் எந்த செல்வ வளமும் இல்லை’. அதனால் மன வருத்தம் கொள்வதாக தெய்வானை, முருகப்பெருமானிடம் சொல்லுவாங்க.

- Advertisement -

மனைவி மனசு கஷ்டப்பட்டால் முருகனின் மனசு தாங்குமா. இந்திரன், தன்னுடைய மகளுக்கு தன்னிடம் இருந்த ஐராவதயானையும் சீர்வரிசையாக கொடுத்திருப்பார். முருகப்பெருமான் அந்த ஐராவத யானையை அப்படியே கிழக்கு பார்த்தவாறு திருப்பி நிறுத்துவார். அந்த யானையின் தும்பிக்கையின் வழியாக இந்திரனுக்கு நிறைய செல்வ வளங்கள் கிடைத்துவிடும்.

தெய்வானையின் மனமும் குளிர்ந்து விடும். கதையைப் படிக்கும்போதே உங்களுக்கு புரிந்து இருக்கும். யானையை எந்த திசையில் நோக்கி வைக்க வேண்டும் என்று. அதோட பரிகாரம் முடிந்துவிடவில்லை. எப்படிப்பட்ட யானையை வாங்க வேண்டும் என்பதை பதிவை தொடரத்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

செல்வ வளம் பெருக யானை பொம்மையை வைக்க வேண்டிய திசை

தும்பிக்கையை மேல் பக்கமாக தூக்கி இருக்கும் யானையை தான் ஐராவதயானை என்று சொல்லுவார்கள். அந்த யானையை ஒற்றை யானையாக வாங்காதீங்க. இரண்டு ஜோடியானையாக வாங்கிக்கோங்க. ஜோடியான யானை என்றால் ஒட்டி இருக்காது. தனித்தனி யானைகளாகத்தான் இருக்கும். இரண்டு யானைகள் வாங்க வேண்டும்.

இரண்டு யானைகளாக வீட்டில் வைப்பது ரொம்ப ரொம்ப சிறப்பு. தும்பிக்கை மேலே பார்த்தபடி இருக்கக்கூடிய இரண்டு யானைகளை வாங்கி அந்த தும்பிக்கையானது கிழக்கு பக்கத்தை பார்த்தவாறு இரண்டு யானைகளையும் வைத்து விட வேண்டும். எந்த நிறத்தில், எந்த சைஸில் உங்களுக்கு தோதாக இருக்கிறதோ, அப்படி ஒரு யானையை வாங்கிக் கொள்ளலாம்.

- Advertisement -

ஒரு சின்ன சீனரி அட்டையில் யானை படம் இப்படி தும்பிக்கையை தூக்கி இருந்தாலும், அந்த படத்தை வாங்கி கிழக்கு நோக்கியவாறு மாற்றி வைக்கலாம். பூஜை அறை, வரவேற்பறை, படுக்கையறை, என்று இந்த யானையை நீங்கள் எந்த இடத்தில் வைத்தாலும் தவறு கிடையாது.

உங்களுக்கு யானை பொம்மை வரைய தெரியும். இதே போல தும்பிக்கையை தூக்கி இருக்கும் படி யானை பொம்மையை வரைந்து கூட வீட்டில் மாட்டி வைக்கலாம் தவறு கிடையாது. மேலே சொன்ன கதையின் அடிப்படையில், நம்பி உங்களுக்கும் இந்திரனை போல செல்வ வளம் கிடைக்கும் என்று நம்பி, இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்தால், நிச்சயம் உங்கள் வீட்டிலும் செல்வ வளம் கொழிக்கும். செய்துதான் பாருங்களேன்.

இதையும் படிக்கலாமே: கோர்ட்டு கேஸ் வழக்குகளில் வெற்றி தரும் முருகன் மந்திரம்.

இரண்டு யானை பொம்மையின் விலை எவ்வளவு வரப்போகிறது. விநாயகரின் மறு உருவம் இந்த யானை. வீட்டில் வைப்பதால் செல்வ வளம் கொழிக்கிறதோ இல்லையோ, எந்த கெட்டதும் நிச்சயம் நடக்கப் போவதில்லை என்ற இந்த தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -