அழகிய வில் போல வளைந்த நேர்த்தியான புருவங்களை பெற தினமும் இரவில் இதில் ஒரு சொட்டு மட்டும் தடவி வந்தால் போதும். அப்புறம் பாருங்க உங்க முக அழகே பல மடங்கு கூடி விடும்.

beautifull-eyes
- Advertisement -

பெண்களுக்கு முகத்தின் அழகை தனியாக எடுத்துக் காட்டுவது அவர்களின் புருவம் தான். என்ன தான் விதவிதமாக ஆடை அணிந்து நகைகளை அணிந்தால் கூட இந்த புருவ அழகு இல்லை என்றால் ஏதுவும் முழுமை பெறாது. அதனால் தான் இன்றைய சூழலில் முகத்திற்கான மேக்கப் போட பார்லர் எப்போதாவது ஒரு தரம் போனாலும் கூட, இந்த புருவ முடியை நேர் செய்து கொள்ள மட்டும் மாத மாதம் தவறாமல் சென்று விடுகிறார்கள். அந்த அளவிற்கு முகத்தின் அழகை எடுத்து காட்டும் சிறப்பு இந்த புருவத்திற்கு உண்டு. இப்போது இந்த அழகு குறிப்பு பதிவில் இந்த புருவ முடியை எப்படி வேகமாக வளர செய்வது என்று தான் பார்க்க போகிறோம்.

இந்த புருவ முடியை பொறுத்த வரையில் சிலருக்கு இயற்கையாகவே நல்ல அடர்த்தியாக நீண்டு வளர்ந்து பார்க்கவே அழகாக இருக்கும். ஆனால் பெரும்பாலோனருக்கு அப்படி இருப்பதில்லை இவர்கள் இதற்கென பென்சில், மை போன்றவைகளை உபயோகப் படுத்துகிறார்கள். இன்னும் சிலர் முடி வளர அதிக அளவு கெமிக்கல் கலந்த கிரீம்களையும் உபயோகிக்கிறார்கள். இனி நீங்கள் இதற்காக அதிக அளவில் செலவு செய்ய வேண்டாம். வீட்டிலிருக்கும் மிக எளிமையான பொருட்களைக் கொண்டே புருவம், இமை முடிகளை அழகாக வளர்த்து விடலாம்.

- Advertisement -

வில் போல வளைந்த அழகிய புருவத்தை பெற:
இதற்க்கு முதலில் ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்து கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய், ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய், ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய், (இந்த எண்ணெய்கள் நல்ல சுத்தமான, தரமானதாக வேண்டும்). இத்துடன் ஒரு விட்டமின் ஈ கேப்ஸ்யூல் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து குழைத்தால் இது ஒரு ஜெல் போல கிடைக்கும். இதை ஒரு சுத்தமான பாட்டிலில் ஊற்றி எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

தினமும் இரவு தூங்கும் முன் உங்கள் முகத்தை கழுவிய பிறகு, ஒரு நல்ல சாப்ட்டான துணியை கொண்டு நன்றாக ஈரம் இல்லமால் துடைத்த பிறகு, இந்த ஜெல்லை புருவதிற்கு மீதும், இமை முடிகளின் மீதும் தடவி அப்படியே விட்டு விடுங்கள். இது இரவு முழுவதும் அப்படியே இருக்கட்டும். மறுநாள் காலை முகத்தை அலம்பினால் போதும். இந்த ஜெல்லை ஒரு வாரம் வரை பிரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம். இது தீர்ந்த பிறகு இதே போல மறுபடியும் செய்து வைத்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த ஜெல்லை தொடர்ந்து தேய்த்து வர வேண்டும் அப்போது தான் நல்ல பலனை பெற முடியும். இதை குறைந்தது ஒரு மாதம் வரை தொடர்ந்து தேய்த்து வர வேண்டும். தலை முடியை போல புருவ முடிகள் சீக்கிரம் வளராது.

இதையும் படிக்கலாமே: 1/2 கேரட் இருந்தா போதும் 10 பைசா செலவு செய்யாமல் ஊரே மயங்கும் அழகி ஆகலாமே!

இனி நீங்களும் இதே போல செய்து இயற்கையான வழியில் உங்களின் புருவ, இமை மூடிகளை, அழகாக வளர்த்து மேலும் உங்கள் முகத்தை அழகாக்கி கொள்ளலாம்.

- Advertisement -