தமிழ் புத்தாண்டு துடங்கி, எந்த ராசிக்காரர்களெல்லாம் கவனமாக இருக்கவேண்டும். எதை எல்லாம் செய்யலாம், எதை எல்லாம் செய்யக்கூடாது.

Rasi tamil
- Advertisement -

60 தமிழ் வருடங்களில் 37 வது வருடமாக தற்போதைய “சோபகிருது” வருடம் பிறந்துள்ளது. புதிதாக பிறந்துள்ள இந்த சோபகிருது வருடத்தில் குரு கிரக பெயர்ச்சி, ராகு – கேது பெயர்ச்சி மற்றும் சனி கிரக பெயர்ச்சி ஆகிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெற உள்ளன. எனவே இந்த வருடத்தில் எந்தெந்த ராசியினர் பாதகமான பலன்களை அடையப் போகிறார்கள் என்பதையும், அந்த பாதகமான பலன் களிலிருந்து காத்துக்கொள்ள என்ன பரிகாரங்களை அந்த ராசியினர் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து இங்கு நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
ரிஷப ராசியினர் புதிதாக பிறந்திருக்கும் சோபகிருது வருடத்தில் பிறருக்கு பிணை கையெழுத்து போடக்கூடாது. எந்த ஒரு செயலிலும் தீவிரமான முயற்சிக்குப் பிறகே வெற்றி கிடைக்கும். எவ்வளவு வருமானம் வந்தாலும், அதற்கேற்றார் போல் செலவுகள் இருந்து கொண்டே இருக்கும்.

- Advertisement -

ஒரு சிலருக்கு பெண்களால் அவமரியாதைகள் ஏற்படலாம். சிலருக்கு அரசாங்க ரீதியான காரியங்களில் தாமதங்கள் உண்டாகும். ஆடம்பரமாக செலவு செய்வதை குறைத்துக் கொண்டாலே பணப்பற்றாக்குறையிலிருந்து விடுபடலாம். உடன்பிறப்புகளால் பெரியளவில் உதவிகள் கிடைக்காது.

ஒரு சிலருக்கு பிரயாணங்களால் அலைச்சலும், அதனால் பொருள் விரயம் மட்டுமே ஏற்படும். கடினமான உடலுழைப்பில் ஈடுபடுவதால் சிலருக்கு உடல்நல பாதிப்புகளும் ஏற்படும். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்காமல் போகலாம். பணம் கொடுக்கல் – வாங்கல் விவகாரங்களில் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

- Advertisement -

ரிஷப ராசியினருக்கு இந்த சோபக்கிறது வருடத்தில் ஏற்படுகின்ற பாதகமான பலன்கள் நீங்க விநாயகப் பெருமானையும், ஆஞ்சநேயரையும் வழிபட்டு வர வேண்டும். சனிக்கிழமைகளில் சனீஸ்வர பகவானுக்கு கருப்பு எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

கடகம்
புதிதாக பிறந்திருக்கின்ற சோபக்கிறது வருடத்தில் கடக ராசியினருக்கு அஷ்டம சனி நடைபெறுவதாலும், குரு 10 இடத்திற்கு பெயர்ச்சியாவதாலும் ஏற்ற இறக்கமான பலன்கள் இருக்கும். சிலர் புதிய பணிக்கு மாறினாலும் எதிர்பார்த்த வருமானம் கிடைக்காது. பூர்வீக சொத்து தொடர்பான விவகாரங்களில் இழுபறிநிலை நீடிக்கும். தம்பதிகளிடையே மனஸ்தாபங்கள் ஏற்படும்.

- Advertisement -

கடன் பிரச்சினைகளால் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும். வாகனங்களில் பயணிக்கும் பொழுது கூடுதல் கவனம் தேவை. சிறிய அளவிலான காயங்கள் ஏற்படுதல், அறுவை சிகிச்சை போன்ற வழியில் சிலருக்கு மருத்துவ ரீதியிலான செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்கள் பெரிய லாபம் ஈட்ட முடியாது.

பெண்கள் வழியில் சிலருக்கு தன வரவு ஏற்பட்டாலும், அதே பெண்களால் அவமானங்களையும் சந்திக்க வேண்டிய நிலை உண்டாகும். வீட்டில் சுபகாரிய முயற்சிகளில் தாமதம் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் மந்த நிலையை அடைவார்கள். கலைஞர்களுக்கு தொழில் ரீதியாக வெளிநாடு செல்வதில் தடை ஏற்பட்டு நீங்கும்.

சோபகிருது வருடத்தில் கடக ராசியினர் எல்லா வகையான நன்மைகளையும் பெற வீட்டில் ராகவேந்திரர் மகான் படத்திற்கு கற்கண்டு நைவேத்தியம் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரம் சென்று ராகு பகவானுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.

கன்னி
கன்னி ராசியினருக்கு பிறந்திருக்கின்ற சோபகிருது வருடத்தில் உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு காரிய தடைகள் ஏற்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்காது. தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு மந்தமான நிலையே இருக்கும். வாங்கிய கடன்களுக்கு சரியான வட்டி கட்ட முடியாத நிலை ஏற்படும். பெண்களுக்கு பணி புரியும் இடங்களில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

உடன் பிறந்தவர்களால் வீணான, வம்பு வழக்குகள் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் கடின முயற்சிகள் மேற்கொண்டால் மட்டுமே சிறப்பான பலன்களை பெற முடியும். பசிக்காக இல்லாமல் ருசிக்காக சாப்பிடுவதால் உடல்நல குறைவு ஏற்பட்டு மருத்துவ செலவுகள் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே: சமையலறையில் மறந்தும் கூட வைக்க கூடாத 4 பொருட்கள் என்னென்ன?

எதிர்பார்த்த காரியங்களில் தாமதங்கள் ஏற்படும். வெளியூர், வெளிநாடு முயற்சிகளில் இழுபறியான நிலை நீடிக்கும். பணம் தொடர்பான விவகாரங்களில் உங்களுக்கு நன்கு தெரிந்தவர்களே உங்களை ஏமாற்ற முயல்வர். பொருளாதார ரீதியான நெருக்கடிகள் இருந்து கொண்டே இருக்கும்.

அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றங்கள் இருக்கும். உறவினர்கள், நண்பர்களுடன் வீண் விவாதங்கள் ஏற்பட்டு உறவு நிலை முறையும். கன்னி ராசியினர் இந்த சோபகிருது வருடத்தில் நன்மையான பலன்களை பெற சனிக்கிழமைகள் தோறும் சனிபகவான் சன்னதிக்கு சென்று கருப்பு எள் தீபமேற்றி வழிபாடு செய்ய வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் ஸ்ரீபெரும்புதூரில் இருக்கின்ற அருள்மிகு ராமானுஜர் சன்னதிக்கு சென்று நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியினருக்கு பிறந்திருக்கின்ற சோபகிருது வருடத்தில் அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு பல தடைகளை கடந்த பிறகே பதவி உயர்வு கிடைக்கும். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு ஏற்ற இறக்கமான பலன்களே இருக்கும். எனினும் வாங்கிய பழைய கடன்களை வட்டியுடன் கட்டி அடைத்து விடுவார்கள்.

சிலருக்கு மறைமுக எதிரிகளின் தொந்தரவு ஏற்படும். மருத்துவ செலவுகள் அடிக்கடி ஏற்படும். உண்ணும் உணவு விடயங்களில் கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும். கலைத்துறையில் இருப்பவர்கள் வெளியூர், வெளிநாடு பயணங்களால் வீண் அலைச்சலுக்கு உள்ளாவதோடு, எதிர்பார்த்த பெரிய வருமானம் கிடைக்காத நிலை ஏற்படும். பெண்கள் தங்கள் வாழ்க்கைத் துணையிடம் எதிர்வாக்கு வாதங்கள் செய்யாமல் அமைதி காப்பது நல்லது.

மாணவர்கள் கவனச்சிதறல்கள் இல்லாமல் கல்வியல் கவனம் செலுத்தினால் மட்டுமே சிறப்பான எதிர்காலத்தை பெற முடியும். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு பாதகமான நிலையே சிறிது காலத்திற்கு நீடிக்கும். உறவினர்கள் மத்தியில் உங்களுக்கு மரியாதை குறைவு ஏற்படும்.

எதிர்பாராத வகையில் திடீர் பொருள் விரயங்கள் சிலருக்கு ஏற்படும். விருச்சிக ராசியினர் சோபகிருது வருடத்தில் நன்மையான பலன்களைப் பெற முருகப்பெருமானை வழிபட்டு வர வேண்டும். சனிக்கிழமையில் சனி பகவானுக்கு எள்தீபமேற்றி, நீல வண்ண வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

மீன ராசி
புதிதாக பிறந்திருக்கின்ற சோபகிருது வருடத்தில் மீன ராசியினருக்கு சனி விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும், குரு பகவான் மீன ராசிக்கு இரண்டாம் இடத்திற்கு பெயர்ச்சியாவதாலும் உத்தியோகங்களில் இருப்பவர்களுக்கு பணி மாறுதல் ஏற்படும். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு தங்களின் வியாபாரம் தொடர்பாக கடன் வாங்கும் சூழல் ஏற்படும். உறவுகள் நண்பர்களிடம் பகைமை ஏற்படும்.

உணவு விடயங்களில் கட்டுப்பாடு கடைப்பிடிக்காவிட்டால் அதனால் உடல் நல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவ ரீதியிலான பொருள் விரயம் ஏற்படும். உடல் மற்றும் மனதளவில் சோர்வான நிலை இருக்கும். குடும்பத்தில் குழப்பமும் நிம்மதியற்ற நிலையும் ஏற்படும். பிறருக்கு கடன் கொடுக்கும் பொழுது கவனத்துடன் செயல்பட வேண்டும். இரவு நேர பயணங்களை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பதில் தாமதங்கள் ஏற்படும்.

மாணவர்கள் தீவிரமான முயற்சி மேற்கொண்டு படித்தால் மட்டுமே கல்வியில் சிறக்க முடியும். பெண்களுக்கு வீண் அலைச்சல்களால் மன அழுத்தம் அதிகரிக்கும். ஒரு சிலர் காவல் நிலையம், நீதிமன்றம் போன்றவற்றிற்கு சென்று வரும் நிலையும் ஏற்படும். தம்பதிகளிடையே வாக்குவாதங்கள் அதிகரித்து மனஸ்தாபங்கள் ஏற்படும்.
இதையும் படிக்கலாமே: தமிழ் புத்தாண்டு முதல் ராஜ யோகம் பெறப்போகும் 5 ராசிகள்

சோபகிருது வருடத்தில் நன்மையான பலன்களைப் பெற மீன ராசியினர் திருநள்ளாறு அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலுக்கு சென்று சனி பகவானை வழிபாடு செய்ய வேண்டும். நவக்கிரகங்களில் ராகு பகவானுக்கு ராகு கால நேரத்தில் மந்தாரை மலர் சமர்ப்பித்து, கருப்பு நிற ஆடை சாற்றி வழிபாடு செய்வதால் சோதனைகளும் சாதனைகளாக மாறும்.

- Advertisement -