தினம் தினம் பாடாய் படுத்தும் இந்த தோஷம் உங்க ஜாதகத்தில் இருந்தால் பயப்படாமல் வீட்டிலேயே எளிமையாக இந்த பரிகாரத்தை செய்து விடுங்கள் போதும். இது வரை உங்களை துரத்தி வந்த துன்பமெல்லாம் தூர போய் விடும்.

sarbha thosam
- Advertisement -

எந்த காரியத்தை செய்தாலும் அதில் ஏதாவது ஒரு வகையில் தடங்கல்கள் ஏற்பட்டு, அந்த காரியம் நிறைவடையாமல் போய் விடுகிறது என்றால், அது ராகு, கேதுவால் ஏற்பட்ட தோஷமாக கருதப்படுகிறது. ஜோதிடம் பார்ப்பவர்கள் இதற்கு ராகு கேது சர்ப்ப சாந்தி செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். அதாவது சர்ப தோஷத்தை நீக்க வேண்டும் என்று கூறுவார்கள். இதற்காக நாம் கோவிலுக்கு சென்று பல பரிகாரங்களை செய்வோம். ஆனால் இன்று இந்த சர்ப தோஷத்தை நீக்க வீட்டில் எவ்வாறு பரிகாரம் செய்ய வேண்டும் என்று தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

சர்ப்ப தோஷம் நீங்க வீட்டிலேயே பரிகாரம் செய்யும் முறை
ராகு, கேது தோஷத்தை நீக்க, முதலில் நாம் ஒரு தலை நாகம் மற்றும் ஐந்து தலை நாகம் சிலையை வாங்க வேண்டும். இந்த சிலை வெள்ளியில் இருந்தால் அது மிகவும் விசேஷம். இவை நகை கடைகளில் கிடைக்கிறது. மேலும் கோவில்களுக்கு அருகில் இருக்கும் கடைகளிலும் கிடைக்கும். மேலும் இந்த பரிகாரத்திற்கு இரண்டு ஜாக்கெட் பிட் வேண்டும். அதில் ஒன்று நீல நிறத்தில் இருக்க வேண்டும். மற்றொன்று பலவண்ண நிறங்களில் இருக்க வேண்டும்.

- Advertisement -

இப்பொழுது ஒரு தாம்பாளத்தை எடுத்து, அதில் இந்த இரண்டு ஜாக்கெட் துணிகளை வைத்து அதன் மேல் நாம் வாங்கி வைத்திருக்கும் இரண்டு நாக சிலைகளை வைக்க வேண்டும். அடுத்ததாக மஞ்சள் மற்றும் குங்குமம் இரண்டையும் கலந்து நம் கைகளால் பிள்ளையாரை பிடித்து வைத்து, விநாயகர் மந்திரங்களை சொல்லி விநாயகர் பூஜை செய்து, அவரை வணங்க வேண்டும்.

பிறகு நாம் கலந்து வைத்திருக்கும் அந்த மஞ்சள், குங்குமத்தை வைத்து இந்த இரண்டு நாக சிலைகளுக்கும் அர்ச்சனை செய்ய வேண்டும். பூக்களை கொண்டும் அர்ச்சனை செய்ய வேண்டும். அவ்வாறு அர்ச்சனை செய்யும் பொழுது ராகு கேதுவின் அஷ்டோத்திரத்தை கூறலாம். அல்லது “ராகுவே நமஹ” “கேதுவே நமஹ” என்றும் கூறலாம். 108 முறை இந்த அர்ச்சனையை செய்த பிறகு, தூபம் காண்பித்து, தீபா ஆராதனை காட்ட வேண்டும். பிறகு அந்த தாம்பலத்தை வடக்குப் பார்த்தவாறு வைத்து விட வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு தொடர்ந்து 15 நாட்கள் பூஜை செய்ய வேண்டும். 16 வது நாள் இந்த சிலைகளை அருகில் இருக்கும் சிவாலயங்களுக்கு எடுத்து சென்று, ஒரு சிலையை சிவன் முன்பு இருக்கும் உண்டியலில் போட வேண்டும். மற்றொரு சிலையை அம்மனின் முன்பு இருக்கும் உண்டியலில் போட வேண்டும். மேலும் அந்த இரண்டு ஜாக்கெட் துணிகளை யாருக்கேனும் தானமாக வழங்கலாம். இவ்வாறு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை என்று வருடத்தில் இரண்டு முறை செய்ய வேண்டும்.

இந்த பூஜை யாருக்கு சர்ப்ப சாந்தி செய்ய வேண்டும் என்று இருக்கிறதோ அவர்கள் தான் செய்ய வேண்டும். அந்த நபர் வீட்டில் இல்லாமல் வேலை நிமிர்த்தமாகவோ அல்லது படிப்பு நிமிர்த்தமாகவோ ஹாஸ்டலில் தங்கி இருந்தால், அவர்கள் இந்த இரண்டு சிலைகளையும் வாங்கி, அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு சென்று மனதார பிரார்த்தனை செய்து 15 முறை கோவிலை வலம் வர வேண்டும். பிறகு இந்த சிலைகளை உண்டியலில் போட்டு விடலாம்.

இதையும் படிக்கலாமே: பணம் தேவையில்லாமல் வீண் விரயம் ஆகிக் கொண்டே இருந்தால். இவர்களிடம் ஒரு முறை பணத்தை கொடுத்து வாங்குங்கள். இனி ஒரு ரூபாய் கூட உங்க கையில இருந்து அனாவசியமாக செலவு ஆகாவே ஆகாது.

பாவ கிரகங்களாக கருதப்படும் இந்த ராகு கேதுவால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து வெளிவருவதற்கும், சர்ப தோஷத்தை நீக்குவதற்கும், ராகு கேது சர்ப்ப சாந்தியை செய்வதற்கும் மேற்கூறிய பரிகாரம் நமக்கு முழு பலனையும் தரும்.

- Advertisement -