சின்ன சின்ன உடல் உபாதைகளுக்கு கை வைத்தியம் பார்க்க சமையலறையில் இந்த குறிப்புகளை எல்லாம் நீங்கள் கொஞ்சம் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

face10
- Advertisement -

செலவில்லாத வைத்தியமா? அப்படி என்றால் என்ன. அதாவது நாம் சாப்பிடக்கூடிய பொருட்களே சில சமயம் நம்முடைய உடலில் இருக்கும் நோய்களுக்கு மருந்தாக அமையும். அந்த வரிசையில் ஒரு சில நல்ல பயனுள்ள குறிப்புகளை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உடல் ரீதியாக உங்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை வந்து விட்டால், அதை சரி செய்ய மருத்துவரை அணுகுவது சரி தான். அதேசமயம் இப்படி சின்ன சின்ன கை வைத்தியங்களை முயற்சி செய்து பார்ப்பதில் தவறில்லை. வாங்க பயனுள்ள அந்த குறிப்புகளை நாமும் தெரிந்துகொள்வோம்

Tip 1:
சக்கரை வியாதி உள்ளவர்கள் அடிக்கடி இலந்தம் பழத்தை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை கட்டுக்குள் வரும்.

- Advertisement -

Tip 2:
சிலபேருக்கு தொப்பை ரொம்பவும் பெரியதாக இருக்கும். முளைகட்டிய வெந்தயத்தை சாப்பிட்டு வரும்போது தொப்பை படிப்படியாக குறைய நிறையவே வாய்ப்புகள் உள்ளது.

Tip 3:
சில பேருக்கு பற்கள் வலுவில்லாமல் ஈறுகளில் ரத்தம் வரும். ஆப்பிள் பழத்தை கடித்து சாப்பிட்டால் வலுவிழந்த பருக்கள் பலம் பெறும்.

- Advertisement -

Tip 4:
நிறைய பேருக்கு விக்கல் தொந்தரவு அடிக்கடி இருக்கும். ஒரு மீடியம் சைஸ் டம்ளர் அளவு தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் 2 ஏலக்காய்களை நசுக்கி போட்டு, நான்கைந்து துளசி இலைகளை போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அந்த தண்ணீரை குடித்தால் விக்கல் பிரச்சனை குறைந்துவிடும்.

Tip 5:
சாதம் வடித்த கஞ்சியை 1 டம்ளர் அளவு எடுத்துக் கொள்ளுங்கள். 1/2 ஸ்பூன் நெய்யில், 1/2 ஸ்பூன் சீரகத்தை போட்டு வறுத்து சாதம் வடித்த கஞ்சியில் கொட்டி கலந்து குடித்தால் இடுப்பு வலி நீங்கும்.

- Advertisement -

Tip 6:
நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடலாம். நரம்பு தளர்ச்சி சீக்கிரமே குணமாகும். (இது மாம்பழம் சீசன் தானே இந்த குறிப்பை முயற்சி செய்து பார்க்கலாம்.)

Tip 7:
இந்த காலத்தில் பனங்கிழங்கு கிடைப்பது மிக மிக அரிதான ஒரு விஷயம். இருப்பினும் பணம் கிழங்கை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடல் அழகு கூடும்.

Tip 8:
சில பேருக்கு வாய் ஓயாமல் இருமல் இருக்கும். முற்றிய வெண்டைக்காய்களை எடுத்து தண்ணீராக சூப் வைத்து குடிக்கும் போது அந்த இருமல் குறைவதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது. முற்றிய வெண்டைக்காய்களை எண்ணெயில் லேசாக வதக்கி விட்டு ஒரு பெரிய டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி அதில் கொஞ்சமாக உப்பு மிளகுத்தூள் போட்டு கொதிக்க வைத்து குடித்து விடுங்கள் போதும்.

Tip 9:
நாம் குடிக்கின்ற தண்ணீரில் ஒரு சில துளசி இலைகளை போட்டு வையுங்கள். இந்த துளசி தண்ணீரை தினமும் குடித்து வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

Tip 10:
தீராத தலைவலி தீர இப்படி ஆவி பிடித்து பாருங்கள். ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து விட வேண்டும். அதில் 1 ஸ்பூன் காபி தூளைப் போட்டு ஆவி பிடிக்க வேண்டும். இப்படி செய்தால் தீராத தலை வலியும் சீக்கிரமே தீரும்.

Tip 11:
திடீரென்று அஜீரண கோளாறு வந்து விட்டால் மோரில் கொஞ்சமாக கறிவேப்பிலையைப் போட்டு மிக்சி ஜாரில் ஒரு ஓட்டு ஓட்டி அப்படியே குடித்து விடுங்கள். அஜீரண கோளாறு சீக்கிரமாக சரியாகிவிடும். புரிந்ததா மோரில் கருவேப்பிலையை போட்டு இதை அப்படியே மிக்ஸியில் ஊற்றி அரைத்து குடிக்க வேண்டும். அவ்வளவுதாங்க.

- Advertisement -