சமையலறையில் தான் இந்த பொருட்கள் இருக்கணுமா? எந்த பொருள் எப்படி இருந்தால் குடும்பத்திற்கு நல்லது தெரியுமா?

- Advertisement -

ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் லக்ஷ்மி கடாட்சத்துடன் சுபீட்சமாக இருக்க, நோய் நொடி இல்லாமல், வறுமை இல்லாமல், மகிழ்ச்சியுடன் நிம்மதியாக இருக்க வீட்டின் அமைப்பானது சரியாக அமைந்திருக்க வேண்டும். ஒரு வீட்டில் பூஜை அறை முதன்மையானது, அடுத்ததாக பார்க்க வேண்டியது சமையலறை தான். சமையலறையில் எந்த பொருள்? எப்படி இருந்தால் குடும்பத்திற்கு நல்லது? அப்படின்னு தான் இந்த ஆன்மீக குறிப்பு பகுதியின் மூலம் நாம் இனி அறிந்து கொள்ள போகிறோம்.

வீட்டின் அக்னி மூலையில் தான் சமையல் அறை அமைக்கப்படுகின்றது. அடுப்பு வைத்திருக்கும் இடமும் அக்னி மூலையாக தான் இருக்கும். மேலும் அக்னி மூலையில் அடுப்பு அமைந்திருக்கும் இடத்தின் வலது கை புறத்தில் எண்ணெய், உப்பு போன்றவற்றை நிரம்ப வைத்திருக்க வேண்டும். அங்கு வைத்திருக்கப்படும் எண்ணெய் அல்லது உப்பு குறையவே கூடாது.

- Advertisement -

பொதுவாக பண்டைய காலங்களில் எல்லாம் தானியங்களை, அரிசி, பருப்பு, புளி போன்ற மளிகை பொருட்களை மொத்தமாக வாங்கி வைப்பது வழக்கமாக வைத்திருந்தார்கள். அனுதினமும் சமைக்கக்கூடிய முக்கியமான பொருட்களாக இருக்கக்கூடிய உப்பு, புளி, மிளகாய், பருப்பு, அரிசி, எண்ணெய், மஞ்சள், அஞ்சறை பெட்டியில் வைத்திருக்கக் கூடிய தாளிக்க கூடிய மசாலா பொருட்கள் அனைத்துமே எப்பொழுதும் நிறையவே வாங்கி வைத்திருப்பார்கள். அனுதினமும் சமைக்கக்கூடிய காய்கறிகளை மொத்தமாக யாரும் வாங்கி வைப்பது கிடையாது. அன்றைய நாளுக்கு உரிய காய்கறிகளை அன்றைய நாள் வாங்குவது தான் உடல் நலத்திற்கும், குடும்பத்திற்கும் நன்மை தரும்.

எப்பொழுதும் இரண்டு டப்பாக்களை வைத்திருக்க வேண்டும். ஒன்று பெரிய அளவிலானதும் இன்னொன்று சிறிய டப்பாக்களும் இருக்க வேண்டும். பெரிய அளவிலான டப்பாக்களில் நீங்கள் கிலோவாக வாங்கி வைத்து அதிலிருந்து எடுத்து சிறிய டப்பாக்களில் முழுமையாக நிரப்பி கொள்ள வேண்டும். இந்த சிறிய டப்பாக்கள் எப்பொழுதும் குறைவில்லாமல் பார்த்துக் கொள்வது என்பது தான் முக்கியமாகும்.

- Advertisement -

இந்த டப்பாக்களில் இருக்கக்கூடிய மளிகை சாமான்கள் காலியாக காலியாக பெரிய டப்பாவில் இருந்து எடுத்து நிரப்பிக் கொண்டே இருக்க வேண்டும். இது தான் குடும்பத்தில் வறுமை இல்லாத செழிப்பான வாழ்விற்கு சிறப்பான சமையலறையாக இருக்கக்கூடும். அதுபோல தண்ணீர் பானையிலும் தண்ணீர் குறைய குறைய நீங்கள் நிரப்பி கொண்டே இருக்க வேண்டும்.

வீட்டில் சமையல் கட்டில் குலதெய்வமும், பித்ருக்களும் நீரில் இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே வட இந்திய மக்கள் பெரும்பாலும் வீட்டில் ஒரு மண் குடுவையில் அல்லது சிறிய மண் பானையில் தண்ணீரை வாயு மூலையில் வைத்திருப்பார்கள். அப்படி இருக்கும் வாயு மூலையில் காலியாக வைத்திருக்கக் கூடாது. அங்கு தண்ணீர் பானையோ அல்லது அரிசி மூட்டையோ ஏதாவது ஒன்றை வைத்திருக்க வேண்டும்.

- Advertisement -

இரும்பினால் ஆன அஞ்சறை பெட்டியில் நாணயங்களை சேகரிக்க கூடாது. இரும்பு பொருட்களை இரும்புடன் சேர்க்கக்கூடாது. ரூபாய் நோட்டுகளை நீங்கள் சேர்க்கலாம். அது போல அஞ்சறை பெட்டி அலுமினியம் மற்றும் எவர்சில்வரில் இருப்பது நன்மை தரும். அந்த காலங்களில் எல்லாம் வெண்கலத்தில் வைத்திருந்தார்கள். அது கிடைத்தாலும் வாங்கி வைத்துக் கொள்ளலாம் மேலும் நீங்கள் பணத்தை சேகரிக்கும் பொழுது சமையல் கட்டில் மண்சட்டி ஒன்றை மறைத்து வைத்து அதில் சேகரித்து வந்தால் செல்வ வளம் அதிகரிக்குமாம்.

இதையும் படிக்கலாமே:
பொங்கல் அன்று பொங்கல் செய்ய புதிய மண்பானை தான் வாங்கணுமா? ஏன் குக்கரில் பொங்கல் வைக்கக் கூடாதா?

மேலும் சமையல் அறையில் இருக்கக்கூடிய அஞ்சறைப் பெட்டியில் மஞ்சள், ஏலக்காய் போன்றவற்றை வைத்திருப்பது லட்சுமி கடாட்சத்தை அதிகரிக்குமாம், இதனால் பணமும் பெருகும். இப்படி அஞ்சறை பெட்டியில் இருந்து ஆரம்பித்து சமையல் அறை முழுவதும் குடும்பத்திற்கு நன்மை தரும் ஏராளமான ரகசியங்கள் ஒளிந்து கொண்டிருக்கின்றன.

- Advertisement -