பூஜைக்கு தூபம் போடும் போது இந்த பொருள்களையும் சேர்த்து போட்டால் மகாலட்சுமி தாயார் நம் வீட்டில் நிரந்தரமாக தங்கி சகல ஐஸ்வர்யங்களையும் நிச்சயமாக வாரி வழங்குவார்.

- Advertisement -

வீட்டில் பூஜை செய்யும் போது தீப, தூப ஆராதனை செய்வது பழங்காலம் தொட்டு நாம் செய்து வரும் ஒரு பழக்கம் தான். இந்த தூபம் போடும் போது இதில் சேர்க்கும் சாம்பிராணியின் வாசனைக்கு வீட்டில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் நீங்கி, மனம் தெளிவடைந்து நல்ல சிந்தனைகள் மேலாகும். அது மட்டுமின்றி தெய்வங்களின் அனுகிரகமும் கிடைக்கும். அப்படி போடும் இந்த தூபத்தில் மேலும் சில பொருட்களை சேர்ப்பதன் மூலம் மகாலட்சுமி தாயாரை நிரந்தரமாக நம் வீட்டில் தங்க வைத்து சகல ஐஸ்வர்யங்களை பெறலாம் என்று சொல்லப்படுகிறது. அந்த தூபம் எப்படி போட வேண்டும் என்பதை இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

வீட்டில் பூஜை செய்யும் வேளையில் இந்த சாம்பிராணி தூபம் போடுவதை நிச்சயமாக செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலமே பூஜையானது நிறைவு பெறும். என்ன தான் நீங்கள் விளக்கேற்றி தீபாரதனை எல்லாம் செய்தாலும் கூட, இந்த சாம்பிராணி தூபம் போடும் போது கிடைக்கும் மனநிறைவு என்பதே தனி தான். இந்த வாசத்திற்கு சகல தெய்வங்களும் நம் இல்லம் தேடி வருவார்கள் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

- Advertisement -

செல்வம் வளம் பெருக சாம்பிராணி தூபம் போடும் முறை
இப்போது தூபத்துடன் எந்த பொருள்களை சேர்த்து போட வேண்டும் என்பதை பார்க்கலாம். நாம் சேர்க்க வேண்டிய பொருட்கள் வெண் குங்கிலியம் இதில் வகை உண்டு இரண்டு. இதில் வெண் குங்கிலியத்திற்கு அதிக இறை சக்தி உண்டு இந்த வெண்குங்கிலியத்தின் பவுடரை வாங்கிக் கொள்ளுங்கள். அதே போல் மூலிகைகளில் முதல் மூலிகை என சொல்லப்படும் வெட்டி வேரின் மூலிகையும் பவுடராக ஆக கிடைக்கும் அதையும் வாங்கிக் கொள்ளுங்கள். இத்துடன் நன்னாரி வேர் இதன் பவுடரையும் வாங்கிக் கொள்ளுங்கள். இவை அனைத்தும் உங்களுக்கு நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.

சாம்பிராணி தூபம் போடும் போது இந்த மூன்று பவுடர்களையும் கலந்து போட்டால், உங்கள் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் அனைத்தும் விலகுவதோடு, உங்கள் மனமானது தெளிவு பெறும். மனம் ஒரு நிலையில் இல்லாமல் அலை பாய்ந்து கொண்டு ஏதாவது சிந்தனையில் இருந்தால், நம்மால் எந்த வேலையிலும் முழுமனதோடு ஈடுபட முடியாது. இந்த தூபம் போடும் போது மனமானது தெளிவடைந்து நல்ல சிந்தனை அடைந்து மேலும் நம்மை நல்ல முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

பொதுவாகவே சாம்பிராணி தூபம் போடும் போது வீட்டில் நேர்மறை எண்ணங்கள் தோன்றி, எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். அத்துடன் இந்த பொருட்களையும் சேர்த்து தூபம் போடும் போது நேர்மறை ஆற்றல் நம் வீட்டிலும், நம்மிடமும் அதிகமாகவே வெளிப்படும் இந்த தூபத்தின் முக்கிய அம்சமே இது தான். இந்த தூபத்தின் வாசனைக்கு அத்தனை இறை சக்தி உண்டு. அது மட்டுமின்றி இதில் சேர்த்த பவுடர்கள் அத்தனையும் நல்ல மனம் மிக்க தெய்வம்சம் கொண்ட பொருள்கள். இவைகளின் வாசத்திற்கு மகாலட்சுமி தாயார் நிச்சயமாக வந்த அமர்ந்து அருள் புரிவார் என்றும் சொல்லப்படுகிறது.

நீங்கள் மனம் தெளிவாக ஒரு வேலையை நல்ல முறையில் துவங்கி, அத்துடன் தாயாரின் அனுகிரகமும் உங்களுக்கு முழுவதுமாக கிடைக்கும் போது, நீங்கள் தொடங்கும் தொழிலில் இருந்து, செயல்கள் வரை அனைத்திலும் வெற்றி என்பது நிச்சயம் உண்டு. இத்தோடு உங்களுக்கு பண வரவு ஏற்பட்டு வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் வருவதற்கான வாய்ப்பையும் இந்த தூபம் ஏற்படுத்திக் கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: நாள் பார்த்து, நட்சத்திரம் பார்த்து தானே திருமணம் செய்கிறோம்? பிறகு ஏன் மனமுறிவு அதிகரிக்கிறது? நாள், நட்சத்திரம் பார்த்து என்ன தான் பயன்?

நீங்களும் உங்கள் வீட்டில் பூஜையின் போது இந்த பவுடரை சாம்பிராணியுடன் சேர்த்து போட்டு மகாலட்சுமி தாயாரின் பூரண அனுக்கிரகத்தை பெறுவதோடு, உங்களின் முன்னேற்றத்திற்கான பாதையையும் நல்ல முறையில் வகுத்துக் கொண்டு வாழ்க்கையை மேலும் நல்ல முறையில் வாழ்ந்து பலன் அடையுங்கள்.

- Advertisement -