சாமுத்திரிகா லட்சணப்படி ஒரு பெண்ணின் தலைமுடியும், நெற்றியும் இப்படி இருந்தால் அவர்கள் நிச்சயமாக அதிர்ஷ்டசாலிகளாகத் தான் இருப்பார்கள்.

women
- Advertisement -

பெண்களின் அங்கங்களை வைத்தே அந்தப் பெண்ணினுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைப் பற்றி சொல்லக்கூடிய விஷயம் தான் சாமுத்திரிகா லட்சணம். ஒரு பெண்ணினுடைய கண் மூக்கு வாய் நெற்றி தோள் கை கால் இவைகளின் அமைப்பை வைத்து ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு தனித்தன்மை கட்டாயமாக இருக்கும். இதனடிப்படையில் சாமுத்திரிகா லட்சணப்படி ஒரு பெண்ணுக்கு தலை முடி, நெற்றி இந்த இரண்டும் அமைந்திருக்கும் விதத்தை வைத்து, அவள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோமா.

women1

பெண்ணுக்கு தலை முடி நீளமாகவும் கருமையாகவும் அடர்த்தியாகவும் இருந்தால்:
இப்படிப்பட்ட தலைமுடியைக் கொண்ட பெண்கள் எப்போதும் சந்தோஷமான மன நிலையிலேயே இருப்பார்கள். வாழ்க்கையில் கஷ்டம் வரும் சூழ்நிலையிலும் இவர்களுக்கு பெரியதாக எந்த ஒரு பாதிப்பும் இருக்காது. இருப்பதை வைத்து மனநிறைவோடு வாழக்கூடிய குணம் இவளிடம் இருக்கும். பெரும்பாலும் இப்படிப்பட்ட தலை முடியைக் கொண்ட பெண்களுக்கு சிறுவயதிலேயே திருமணம் நடந்திருக்கும். இப்படிப்பட்ட தலைமுடியைக் கொண்ட பெண்களுக்கு அமையக்கூடிய கணவன்மார்கள் வசதி வாய்ப்பு படைத்தவர்களாக இருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

பெண்களின் தலைமுடி குட்டையாக, பழுப்பு நிறமாக இருந்தால்:
இப்படிப்பட்ட தலைமுடியைக் கொண்ட பெண்களின் வாழ்க்கையில் கஷ்டமும் நஷ்டமும் சேர்ந்துதான் இருக்கும். இவர்களின் வாழ்க்கை திருமணம் ஆனபின்பு சிறப்பாக அமையும். இப்படிப்பட்ட பெண்கள் வசதி வாய்ப்புகளுடன் வாழவில்லை என்றாலும் தேவையான அளவிற்கு இவர்களுக்கு வருமானம் கிடைக்கும். அவர்களுடைய இல்லற வாழ்க்கை என்பது திருப்திகரமாக தான் இருக்கும்.

women8

பெண்களின் தலைமுடி குட்டையாக சுருட்டையாக இருந்தால்:
இப்படிப்பட்ட தலைமுடியைக் கொண்ட பெண்கள் திருமணத்திற்கு முன்பு வாழ்க்கையில் கொஞ்சம் கஷ்டத்தை எதிர்கொள்ளுவார்கள். திருமணத்திற்கு பின்பு இவர்களுடைய வாழ்க்கையில் சில நல்ல மாற்றங்கள் ஏற்பட்டாலும் கூட, இவர்களுக்கு பண கஷ்டம் என்பது இருந்துகொண்டேதான் இருக்கும். இவர்கள் வாழ்க்கையின் நடுப்பகுதியை கடந்த பின்பு கொஞ்சம் வசதி வாய்ப்புகளுடன் வாழ்வதற்கு வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

பெண்களின் நெற்றியை வைத்து சாமுத்திரிகா லட்சணம் என்ன சொல்கிறது:
அகண்ட நெற்றியைக் கொண்ட பெண்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். கலைத் துறைகளில் இவர்களுக்கு ஆர்வம் அதிகமாக இருக்கும். பதவி பட்டம் பெயர் புகழ் இவர்களை வந்து சேரும். பெரும்பாலும் இப்படிப்பட்ட நெற்றியை கொண்ட பெண்கள் உயர் பதவியில் இருப்பதற்கும் நிறைய வாய்ப்புகள் உள்ளது.

women1

சிறிய நெற்றியை கொண்ட பெண்களுக்கு கல்வி ஞானம் என்பது குறைவாகத்தான் இருக்கும். ஆனால், இவர்கள் அனுபவ ரீதியாக நிறைய பாடங்களை படித்திருப்பார்கள். கல்வி பயின்றவர்களை காட்டிலும் அனுபவ அறிவில் சிறந்து விளங்கும் இப்படிப்பட்ட பெண்கள் திருமணத்திற்கு முன்பு பொருளாதார ரீதியாக சில சிக்கல்களை எதிர் கொண்டாலும், திருமணத்திற்கு பின்பு இவர்களுடைய வாழ்க்கை செல்வ செழிப்பாக அமையும்.

women1

குறுகிய, நீளவாக்கில் நேராக இருக்கும் நெற்றியை கொண்ட பெண்கள் அதிர்ஷ்டசாலியான பெண்களாகத்தான் இருப்பார்கள். சில பேர் இந்த நெற்றியை ஏறு நெற்றி என்றும் சொல்வார்கள். இப்படிப்பட்ட நெற்றியை கொண்ட பெண்கள் மகாராணி போல தங்களுடைய வாழ்க்கையை வாழ்வார்கள். இவர்கள் பேச்சுக்கு வீட்டில் இருப்பவர்கள் மறுபேச்சு பேச மாட்டார்கள். சொல்லப்போனால் அடுத்தவர்களை அடக்கி ஆளும் திறமை கொண்டவர்கள் இவர்கள்.

women

சாமுத்ரிகா லட்சண குறிப்பில் பொதுப்படையாக எல்லா பெண்களுக்கும் பொதுவாக சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் தான் இவை. தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு பெண்ணிற்கும் இருக்கக்கூடிய ஜாதக அமைப்பு, குணாதிசயங்கள், வளரும் சூழ்நிலை இவைகளைப் பொறுத்து ஒரு சிலருக்கு இதில் வேறுபாடு இருப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது என்ற இந்தக் கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -