மகாலட்சுமி தாயாரின் அருளை முழுமையாக பெற சங்கு தீபத்தை இந்த நேரத்தில் ஏற்றி பாருங்கள். எட்டு திக்கிலும் இருந்து பணமழை கொட்டோ கொட்டென்று கொட்டும் என்பதில் துளியும் சந்தேகமே இல்லை.

mahalakshmi sangu dheepam
- Advertisement -

இந்த சங்கு தீப வழிபாடு முறை இப்போதெல்லாம் பெரும்பாலும் அனைவரும் கடைப்பிடிக்க தொடங்கி விட்டார்கள். இந்த சங்கில் இடம்புரி சங்கு, வலம்புரி சங்கு என்று இரண்டு வகைகள் உண்டு. இதில் வலம்புரி சங்கு கிடைப்பது கொஞ்சம் அரிதான விஷயம் தான். ஆகையால் இந்த தீப முறைக்கு இடம்புரி சங்கு கிடைத்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள். நீங்கள் வாங்கும் சங்கு அல்லது நல்ல தரமானதாக இருக்க வேண்டும். இந்த சங்கில் ஏற்றப்படும் தீபம் தான் மகாலட்சுமி தாயாரை நம் வீட்டிற்கு அழைக்கும். இப்போது இந்த சங்கு தீபத்தை எந்த நேரத்தில் எப்படி ஏற்றி நம்முடைய வீட்டில் லட்சுமி கடாட்சத்தை பெருக்கிக் கொள்ளலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

வீட்டில் லட்சுமி கடாக்ஷம் பெருக சங்கு தீப வழிபாடு
இந்த சங்கு தீபத்திற்கு நாம் தரமான சங்காக பார்த்து வாங்கிக் கொண்ட பிறகு, அந்த சங்கை வீட்டில் கொண்டு வந்து ஒரு முறை நன்றாக தண்ணீர் தண்ணீர் தண்ணீர் இரண்டும் கலந்து சுத்தம் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு அந்த சங்கிற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்த பிறகு ஒரு பாத்திரத்தில் கல் உப்பை நிரப்பி அதன் மேல் இந்த சங்கை வைத்து அதில் நெய் ஊற்றி திரி போட்டு தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது இந்த சங்கு தீபத்தை நம் வீட்டில் ஈசானிய மூலையில் வைத்து ஏற்ற வேண்டும். ஏனெனில் இந்த மூலையில் தான் தெய்வீக ஆற்றல் அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆகையால் இந்த தீபத்தை அங்கு வைத்து தான் ஏற்ற வேண்டும் தீபம் எரியும் திசையானது தென்மேற்க்கை பார்த்தவாறு இருக்க வேண்டும். அதாவது ஈசானி மூலையில் வைத்த தீபத்தின் ஒளி தென்மேற்கு திசையை பார்த்தவாறு இருக்க வேண்டும். இது போல வைத்த இந்த தீபத்தை சுக்கிர ஓரையில் ஏற்ற வேண்டும்.

இந்த சுக்கிர ஹோரையானது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரத்தில் வரும். அதை நம் வீட்டில் தினசரி காலண்டரில் ஓரைகள் என ஒரு காலம் குறிப்பிட்டு இருக்கும். அதில் பார்த்தால் சரியான நேரத்தை தெரிந்து கொள்ளலாம். தினமும் வரும் சுக்கிர ஓரையில் ஏற்றப்படும் இந்த தீபம் குறைந்தது அரை மணி நேரம் வரை எரிய வேண்டும். இந்த தீபம் நீங்கள் ஏற்ற தொடங்கிய நாளிலிருந்து 41 நாட்கள் தொடர்ந்து ஏற்றி வர வேண்டியது அவசியம்.

- Advertisement -

இப்படி 41 நாட்கள் தொடர்ந்து ஏற்றும் போது வீட்டில் நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவு உங்களுடைய பொருளாதார பிரச்சனைகள் தீர்ந்து பணவரவு அதிகரித்து கடன் பிரச்சனை போன்ற அனைத்து இன்னல்களும் தீர்ந்து விடும். இப்படி இன்னும் பல நல்ல விஷயங்களை சொல்லிக் கொண்டே போகலாம். ஏனெனில் மகாலட்சுமி தாயார் அம்சமாகவே விளங்கும் இந்த சங்கு தீபமாக வீட்டில் எரியும் போது அத்தனை நன்மைகள் நடக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

இதையும் படிக்கலாமே: சமையலறையில் இருக்கும் இந்த 1 பொருளை உங்கள் கையால் தொட்டு விட்டு, கொடுத்த பணத்தை வசூல் செய்ய செல்லுங்கள். வராத பணம் கூட வீடு தேடி வந்துவிடும்.

பெண்கள் இந்த தீபத்தை ஏற்றினாலும் 41 நாட்கள் ஏற்ற வேண்டும். அவர்களுக்கான அந்த மாதவிலக்கு நேரத்தில் மற்றவர்களை வைத்து இந்த தீபத்தை ஏற்றலாம். ஆனால் ஏற்றத் தொடங்கிய நாளிலிருந்து ஒரு நாள் கூட நிறுத்தாமல் தொடர்ந்து ஏற்ற வேண்டும் அதுவும் மிகவும் முக்கியமான ஒன்று. இந்த சங்கு தீப வழிபாட்டு முறையை நம்பிக்கையுடன் செய்து உங்கள் வீட்டில் இருக்கும் அனைத்து தடைகளையும் நீக்கி பணவரவை அதிகரித்து மகாலட்சுமி தாயாரின் அருள் பார்வையோடு நல்ல வளமானதொரு வாழ்க்கையை வாழலாம்.

- Advertisement -