சனிபகவானால் படக்கூடாத கஷ்டங்கள் அனைத்தையும் அனுபவிக்கிறீர்களா? அப்படி என்றால் காகத்திற்கு இந்த ஒரு பொருளை வையுங்கள். உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து நல்ல வழி கிடைக்கும்.

sanibhagavan crow
- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் சனிப்பெயர்ச்சி என்ற ஒன்று ஏற்பட்டு விட்டால் அவர்களுக்கு பல கசப்பான அனுபவங்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அவர்கள் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்றவாறு அவர்களுக்கு நன்மைகளையும், தீமைகளையும் சனி பகவான் வழங்குவார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் பொதுவாக சனி பகவான் நமக்கு பல துன்பங்களை வழங்கி அதிலிருந்து நல்ல பாடங்களை நமக்கு கற்றுத் தருவார் என்றும் கூறப்படுகிறது. இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் சனிபகவானால் ஏற்படக்கூடிய கஷ்டங்களில் இருந்து வெளியில் வருவதற்கு காகத்திற்கு எதை தர வேண்டும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

சனிபகவானின் ஆதிக்கத்தில் இருந்து வெளியில் வருவதற்கும் அவர் தரும் இன்னல்களில் இருந்து தப்பிப்பதற்கும் நாம் பல பரிகாரங்களை மேற்கொண்டு வருகிறோம். அவற்றில் சில குறிப்பிடத்தக்க பரிகாரமாக சனிக்கிழமை அன்று எள் தீபம் ஏற்றுவது. சனிபகவான் வாகனமாக கருதப்படும் காகத்திற்கு உணவளிப்பது. விநாயகர் மற்றும் ஆஞ்சநேயரை வணங்குவது என்று நாம் கூறலாம்.

- Advertisement -

பிற உயிர்களுக்கு நாம் உதவு உதவுவதன் மூலம் சனிபகவானின் பாதிப்பிலிருந்து நாம் வெளியில் வர முடியும். கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்வது, அன்னதானம் வழங்குவது, நம்பிக்கை துரோகம் செய்யாமல் இருப்பது என்று பல செயல்கள் அவருக்கு பிடித்தமான செயல்களாக திகழ்கிறது. இதை நாம் தொடர்ந்து செய்யும்பொழுது அவருடைய தீய பாதிப்புகளில் இருந்து நாம் தப்பிக்க இயலும்.

பொதுவாக பலரும் சனி பகவானின் வாகனமாக திகழக்கூடிய காகத்திற்கு அன்றாடம் ஏதாவது ஒரு உணவு வழங்கும் பழக்கத்தை வைத்திருக்கிறார்கள். இவ்வாறு உணவு வழங்குவதன் மூலம் சனி பகவானின் ஆதிக்கம் குறையும் என்றும் அதே நேரம் நம்முடைய பித்ருக்களின் ஆசீர்வாதமும் நமக்கு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

இருப்பினும் சனி பகவானால் நமக்கு ஏற்படக்கூடிய கஷ்டங்கள் தீருவதற்கு காகத்திற்கு நாம் உலர் திராட்சையை உணவாக வைக்க வேண்டும். இதை நாம் தினமும் வைக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. ஆனால் மாதத்திற்கு ஒரு முறையாவது நாம் இவ்வாறு வைத்தோம் என்றால் சனி பகவானின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைத்து அவர் நமக்கு தரக்கூடிய இன்னல்களை குறைத்து நன்மையை தருவார்.

இதையும் படிக்கலாமே: கழுத்தை நெரிக்கும் கடனில் இருந்தும் உங்களை வாழவே விடாமல் பாடாய்படுத்தும் எதிரிகளின் தொல்லையிலிருந்தும் வெளிவர வளர்பிறை அஷ்டமி நாளான இன்று இரவுக்குள் பைரவருக்கு இந்த இரண்டு தீபத்தை ஏற்றி விடுங்கள்.

எந்த பரிகாரத்தை செய்வதாக இருந்தாலும் அதை முழு மனதோடும் நம்பிக்கையோடும் செய்தோம் என்றால் அதன் பலன் கண்டிப்பான முறையில் கிடைக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த எளிமையான ஒரே ஒரு பொருளை நாம் காகத்திற்கு வைப்பதன் மூலம் நம் கஷ்டம் தீரும் என்றால் அதை செய்வதில் நமக்கு எந்த தயக்கமும் இருக்காது.

- Advertisement -