இன்று இந்த சனி காயத்திரி மந்திரத்தை ஜெபித்தால் பலன்கள் அதிகம் உண்டு

sani-bagavaan
- Advertisement -

சூரிய புத்திரனான சனி பகவானை கண்டு பலரும் அஞ்சுவதுண்டு. ஆனால் உண்மையில் நாம் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்றவாறே அவர்  நமக்கு பலன்களை அளிக்கிறார். சனி பகவானின் அருளை பெற்றால் வாழ்வில் வசதிகள் பெருகும், நீண்டகாலம் நோய் நொடி இன்றி வாழலாம், சமுதாயத்தில் அந்தஸ்து கூடும், தலைமைத்துவதோடு வாழ வழி உண்டாகும். இப்படி பல நன்மைகளை தரும் சனிபகவானின் காயத்திரி மந்திரம் இதோ.

om manthiram

சனி பகவான் காயத்ரி மந்திரம்

‘ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்கஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்தஹ் ப்ரசோதயாத்’

- Advertisement -

பொருள்:

காகக் கொடியை உடையவரும், கையில் கமண்டலத்தை கொண்டவரும், மெதுவாக நகரும் தன்மை கொண்டவருமான சனி பகவானை நினைத்து தியானம் செய்வதன் பலனாக அவர் நம்மை காத்து ரட்சிப்பார்.

- Advertisement -

இந்த மந்திரத்தை சனிக்கிழமைகளில் 108 முறை ஜெபிப்பதன் பலனாக மேலே கூறிய பலன்கள் அனைத்தையும் பெறலாம்.

Sani baghavan

சனி பரிகாரங்கள்:

- Advertisement -

நமது ஜாதகத்தில் ஏற்படுகின்ற ஏழரை சனி மங்குசனி, பொங்கு சனி, அஷ்டம சனி, அஷ்டார்த்தம சனி என அனைத்து வகையான சனி தோஷங்கள் நீங்கவும், சனி பகவானின் நல்லருளை பெறுவதற்கும் சிறந்த பரிகாரமாக இருப்பது திருநள்ளாறு ஸ்ரீ சனி பகவான் கோயில் வழிபாடே ஆகும். ஏதாவது ஒரு சனிக்கிழமையில் காலையில் திருநள்ளாறு தலத்திற்கு சென்று, அங்குள்ள திருநள்ளாறு கோயில் குளத்தில் தலைக்கு எண்ணெய் தேய்த்து, நீரில் தலை முழுகி குளிக்க வேண்டும். குளித்து முடித்ததும் குளிக்கும் போது பயன்படுத்திய பழைய ஆடைகளை குளக்கரையின் மீது எங்கேயாவது விட்டு விட வேண்டும்.

பிறகு தூய்மையான புத்தாடைகளை அணிந்து கொண்டு, உணவு ஏதும் உண்ணாமல் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலுக்கு சென்று சிவபெருமானுக்கு அர்ச்சனை மற்றும் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். பிறகு அங்கு இருக்கும் சனீஸ்வர பகவான் சன்னதியில் சனீஸ்வரனுக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து கருப்பு நிறம் அல்லது கருநீல நிற வஸ்திரம் சாற்றி வழிபட வேண்டும். இந்த திருநள்ளாறு சனீஸ்வரர் வழிபாடு பரிகாரத்தை ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது ஒரு வருடத்திற்கு ஒருமுறையோ செய்வது மிகவும் நன்று.

sani bagavaan

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் நவக்கிரக சன்னதியில் இருக்கும் சனி பகவானுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 8 மணியிலிருந்து 9 மணிக்குள்ளாக சனிஸ்வர பகவானுக்கு சங்கு பூக்கள் சமர்ப்பித்து, கருப்பு எள் சிறிதளவு நிவேதித்து, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, சனி மந்திரங்கள் துதித்து வழிபட வேண்டும். இவ்வாறு 9 முதல் 27 வாரங்கள் வரை செய்வது சனி கிரக தோஷங்களை நீக்கி நன்மையான பலன்களை உண்டாக்கும்.

மேற்கூறிய இவ்விரண்டு பரிகாரங்களையும் செய்ய இயலாதவர்கள் உங்கள் சக்திகேற்ப ஆறு மாதம் அல்லது வருடத்திற்கு ஒரு முறை உடல் ஊனமுற்ற ஏழைகள், துப்புரவு தொழிலாளர்கள் போன்றவர்களுக்கு புத்தாடை தானம் செய்வது சிறப்பு. மேலும் தினந்தோறும் கருப்பு நிற நாய்களுக்கு பிஸ்கட் அல்லது இன்ன பிற உணவை உண்ண தருவது சனி பகவானின் அருளை உங்களுக்கு பூரணமாக கிடைக்கச் செய்ய சிறந்த பரிகாரங்களாக இருக்கிறது.

Sani Bagavan

சனிபகவான் பற்றிய சிறு தகவல் :

நமது சூரிய குடும்பத்தில் 9 கிரகங்கள் இருக்கின்றன. இந்த ஒன்பது கிரகங்களில் இருந்து வெளிப்படும் ஒளி அலைகள் மற்றும் கதிர்வீச்சுகள் பல லட்ச கிலோமீட்டர்கள் தாண்டி இந்த பூமியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நமது பண்டைய ஜோதிட சாத்திரமும், இன்றைய நவீன விஞ்ஞானமும் இந்த உண்மையை ஏற்றுக்கொள்கின்றன. அப்படியான அந்த நவகிரகங்களில் பூமியில் வாழும் மனிதர்களின் மீது மிகவும் ஒரு சக்தி வாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவராக “சனிபகவான்” கருதப்படுகிறார்.

Sani Baghavan

வானியல் ஆய்வாளர்கள் இந்த சனிக்கிரகம் பூமிக்கு மிகவும் தொலைவிலிருக்கும் அதே நேரத்தில் மெதுவான சுழற்சி கொண்ட ஒரு கிரகம் என்று வரையறுத்து இருக்கிறார்கள். இதை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டறிந்த நம் நாட்டு வானியல் நிபுணர்கள் மெதுவாக இயக்குபவன் என்று பொருள் படும் “மந்தன்: என்ற பெயரை சனிபகவானுக்கு சூட்டினார்கள். எவ்வளவு தொலைவில் இருந்தாலும் சனிபகவான் இப்பூமியில் வாழும் மனிதர்களின் மீது செலுத்தும் ஆற்றல் பலம் மிக்கது. எனவே அவரை வழிபட்டு அவரின் கேடான பலன்கள் நமக்கு ஏற்படாதவாறு பார்த்துக்கொள்வோம்.

இதையும் பார்க்கலாமே:
அனுமனுக்கு நடந்த பிரத்யேக அபிஷேகம் வீடியோ

இது போன்று மேலும் பல காயத்திரி மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்

English Overview:
Here we have Sani Bhagavan Gayatri mantra in Tamil. Usually, people will get afraid of Sani Bhagavan. By Chanting this mantra all the negatives will get changed to positive. This mantra is also called as Sani gayathiri manthiram in Tamil or Shani gayatri mantra in Tamil.

- Advertisement -