சனிக்கிழமை உள்ளம் உருகி பெருமாளுக்கு இந்த ஒரு பொருளை நிவேதினமாக வைத்து வழிபாடு செய்தால், நிறைய நிறைய பணம் சேரும்.

Perumal-theepam1
- Advertisement -

உன்மையான வேண்டுதலை எப்படி வைத்தாலும் அதை நிறைவேற்ற இந்த பிரபஞ்சம் காத்துக் கொண்டிருக்கிறது. அப்படி இருக்கும்போது நமக்கு நன்மையை மட்டும் செய்யக்கூடிய அந்த இறைவன், எம்பெருமான் உள்ளம் உருகி நாம் வரங்களை கேட்கும் போது கொடுக்காமல் போய்விடுவானா என்ன. அதிலும், சனிக்கிழமை பெருமாளை இப்படி மட்டும் வழிபாடு செய்து வாருங்களேன். உங்கள் வீட்டில் செல்வ கடாட்சம் பெருகும். கடன் சுமை குறையும். இந்த பொருள் வாங்க காசு இல்லை. அந்த பொருள் வாங்க காசு இல்லை என்ற வார்த்தைக்கு இடமே இருக்காது. வாரம் தோறும் சனிக்கிழமை பெருமாள் வழிபாட்டை எப்படி செய்வது, பெருமாள் படத்தை நம்முடைய வீட்டில் எந்த பக்கம் மாட்டி வைத்தால் வீட்டிற்குள் லட்சுமி தேவி சந்தோஷமாக நுழைவால் என்பதை பற்றிய ஆன்மீகம் சொல்லும் ஒரு பதிவு இதோ உங்களுக்காக.

பணக்கஷ்டம் தீர சனிக்கிழமை பெருமாள் வழிபாடு:
பெருமாள் படத்தை எந்த இடத்தில் மாட்டி வைத்தால் லட்சுமி தேவி சந்தோஷமாக வீட்டிற்குள் நுழைவாள் என்பதை முதலில் பார்க்கலாம். நிலை வாசலை திறப்பீர்கள். சில பேர் நிலை வாசல் கதவை திறந்து உள்ளே நுழைந்த உடன், எதிர்பக்கத்தில் கண்ணாடி மாட்டி வைத்திருப்பார்கள். அந்த கண்ணாடிக்கு மேல் பக்கத்திலோ, அல்லது பக்கத்திலோ, இந்த பெருமாள் படத்தை மாட்டலாம். உங்களுடைய வீட்டில் நிலை வாசல் படிக்கு நேராக கண்ணாடி இல்லை என்றாலும் பரவாயில்லை. இந்த பெருமாள் படத்தை மாட்டி வையுங்கள்.

- Advertisement -

வெளியில் இருந்து வீட்டிற்குள் வரப் போறீங்க. கதவைத் திறந்த உடன் எதிரே ஒரு சுவர் இருக்கும் அல்லவா. அந்த சுவற்றில் அழகான பெருமாள். வீட்டுக்குள் நுழையும் போது, இதை பார்க்கும்போது நமக்கே அவ்வளவு மன நிறைவு இருக்கும். மகாலட்சுமி வீட்டிற்குள் நுழையும் போது அந்த பெருமாளை பார்த்தால் என்ன செய்வார்கள். நிரந்தரமாக நம் வீட்டிற்குள் வந்து அமர்ந்து கொள்வார்கள். இதுதாங்க இந்த பரிகாரத்தில் இருக்கும் சூட்சமமே.

வேண்டும் என்றால் உங்களுடைய வீட்டிலும் இதே போல ஒரு பெருமாள் படத்தை நிலை வாசலுக்கு உள்பக்கம் மாட்டி தான் பாருங்களேன். (சின்ன படம் பெரிய படம் அலங்காரத்தோடு இருக்கும் படம் என்று எந்த படத்தை வேண்டும் என்றாலும் மாட்டலாம்.) நிச்சயம் குடும்பத்தில் நல்லது நடக்கும். அடுத்தபடியாக சனிக்கிழமை தோறும் காலையும் மாலையும் நேரம் கிடைக்கும் போது பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, ஒரு சின்ன கிண்ணத்தில் அவல், பெருமாளுக்கு பிரசாதமாக வையுங்கள்.

- Advertisement -

துளசி கிடைத்தால் பெருமாளின் பாதங்களில் போடுங்கள். உள்ளம் உறங்கி வேண்டுங்கள். உங்களுக்கு இருக்கும் பணக்கஷ்டம் தீர வேண்டும். வருமானம் அதிகரிக்க வேண்டும். பணத்தடை உடைய வேண்டும். கடன் சுமை குறைய வேண்டும். கடன் வாங்காத அளவுக்கு பணத்தை சம்பாதிக்க தெம்பு வேண்டுமென்று. இரண்டு கைகளையும் ஏந்தி உண்மையான பக்தியோடு வேண்டுதல் வைத்துப் பாருங்கள்.

இதையும் படிக்கலாமே: கடலளவு கடன் சுமை இருந்தாலும் அது கடுகளவாக குறைய அற்புதமான இந்த நாளை தவிர விடாமல் இன்று மாலையே தேங்காயை சுற்றி இதில் போட்டு விடுங்கள் போதும்.

பிறகு வாழ்க்கையில் என்ன அதிசயம் நடக்குதுன்னு நம்பவே மாட்டீங்க. அந்த அளவுக்கு பெருமாள் கோடி கோடியாக செல்வ வளங்களை உங்களுக்கு கொட்டித் தருவார். இது ஒரு எளிமையான சூட்சமமான பரிகாரங்க. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் வாரம் தோறும் சனிக்கிழமை இந்த வழிபாட்டை செய்து மகாலட்சுமியை வீட்டிற்குள் நிரந்தரமாக அமர வைத்துக் கொள்ளுங்கள் என்ற இந்த கருத்துடன் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -