கடலளவு கடன் சுமை இருந்தாலும் அது கடுகளவாக குறைய அற்புதமான இந்த நாளை தவிர விடாமல் இன்று மாலையே தேங்காயை சுற்றி இதில் போட்டு விடுங்கள் போதும்.

cash cocount
- Advertisement -

ஒரு மனிதன் நிம்மதியாக வாழ வேண்டுமென்றால் அவன் கடன் இல்லாத மனிதனாக இருக்க வேண்டும். இன்றைய காலக்கட்டத்தில் இது எல்லாம் வெறும் வாய் வார்த்தைக்காக மட்டும் தான் சொல்ல முடியும். எதார்த்தமான சூழ்நிலையில் கடன் இல்லாமல் வாழும் மனிதரை பார்ப்பது அரிது தான். அப்படி கடனே இல்லாமல் ஒரு மனிதன் வாழ்கிறான் என்றால் அவரைப் பார்த்து ஆச்சரியப்படும் நிலையில் தான் இன்று நாம் அனைவரும் இருக்கிறோம்.

இந்த கடனில் இரண்டு வகை உண்டு. ஒன்று தொழில் வியாபாரம் போன்றவற்றிற்கு முதல் ஈடாக வாங்கி போடுவார்கள். இன்னொன்று சூழ்நிலை காரணமாக வேறு வழி இல்லாமல் கடன் வாங்கி விடுவார்கள். இப்படியானவர்களின் நிலை தான் படுமோசம். இது போல கடன் வாங்கி அவஸ்தைப் படுபவர்களுக்கான எளிய ஒரு தீர்வை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

கழுத்தை நெரிக்கும் கடன் தொல்லையில் இருந்து வெளிவர
இந்த கடன் பிரச்சனையிலிருந்து வெளிவர செய்ய போகும் இந்த பரிகாரமானது மிக முக்கியமான அதே நேரத்தில் சக்தி வாய்ந்த பரிகாரமாக சொல்லப்படுகிறது. இந்த பரிகாரத்தை செய்ய நமக்கு ஒரு முழு தேங்காய், சிகப்பு நிற கயிறு. யார் இந்த பரிகாரத்தை செய்ய போகிறீர்களோ அவர்களின் உயரத்திற்கு ஏற்றவாறு இந்த கயிறு இருக்க வேண்டும். இத்துடன் சிகப்பு நிறத்திலான துணி இதையெல்லாம் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த பரிகாரத்தை இன்று மாலை சூரிய அஸ்தமனமாகும் போது செய்ய வேண்டும். அதாவது சூரியன் மறைந்து விடக் கூடாது மறைய போகும் நேரத்துக்கு முன்பாக செய்ய வேண்டும். இதை செய்வதுக்கு முன்பாக உங்களின் முழு உடல் நீளத்திற்கு சிகப்பு நிற கயிறை அளந்து எடுத்து கொள்ளுங்கள். அதே போல் சிகப்பு நிற துணியை தேங்காயை சுற்றி கட்டும் அளவிற்கு மட்டும் சிசர் வைத்து சதுரமாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது சிகப்பு நிற துணியில் தேங்காயை வைத்த பிறகு அதை சிகப்பு நிற நூலால் இறுக்கமாக கட்டி விட வேண்டும். இதை அப்படியே கையில் எடுத்துக் கொண்டு உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் கடற்கரை அல்லது ஓடை போன்ற இடங்களுக்கு எடுத்து சென்று விடுங்கள். அந்த நீரில் உங்கள் பாதம் நனையும் படி நின்று கொண்டு நீங்கள் கையில் எடுத்து சென்ற தேங்காய் மூட்டையை எடுத்துச் சென்று பிளாக் வயசில் மூன்று முறையும் ஆன்டிகிளாக் வயசில் மூன்று முறையில் சுற்ற வேண்டும். அப்படி சுற்றும் வேளையில் யாரிடம் வாங்கிய கடன் அடைய வேண்டும் என நினைக்கிறீர்களோ அவர்களின் பெயரையும் கடன் தொகையையும் மனதில் நினைத்து அடைய வேண்டும் என வேண்டிக் கொண்டு அதை கடலில் தூக்கி போட்டு விடுங்கள்.

அதன் பிறகு நீங்கள் திரும்பி பார்க்காமல் உங்கள் வீட்டிற்கு வந்து விட வேண்டும். வீட்டிற்கு வந்ததும் கை கால் முகம் எல்லாம் அலம்பிய பிறகு உங்கள் வீட்டிற்குள் செல்லுங்கள். இந்த பரிகாரத்தை அமாவாசை அன்று மாலையில் தான் செய்ய வேண்டும் அதே போல் உங்கள் தலையைச் சுற்றி போடுவதை வீட்டிலிருந்து செய்யக் கூடாது.

இதையும் படிக்காலமே: வாழ்க்கையில் கஷ்டப்பட்டு கொண்டே இருக்கிறோம் ஒரு சொந்த வீடு கூட கட்ட முடியவில்லை என்று நினைப்பவர்கள் செல்ல வேண்டிய முக்கியமான கோவில் என்ன? இங்கு சென்று வந்தால் சொந்த வீடு உடனே கட்டி குடியேறலாமாம் தெரியுமா?

இந்த பரிகாரம் செய்வது மிக மிக எளிமை தான். கடற்கரை அல்லது ஓடைகளுக்கு இடத்திற்கு நீங்கள் செல்ல வேண்டும் அது மட்டும் தான் இதில் கொஞ்சம் சிரமமான காரியம். ஆனால் அப்பேற்பட்ட கடன் தொல்லையிலிருந்து வெளிவர வேண்டும் என்றால் இந்த சின்ன விஷயத்தை நாம் செய்து தான் ஆக வேண்டும். இந்த பரிகார முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இதை செய்து கடன் தொல்லையில் இருந்து வெளிவர முயற்சி செய்யலாம்.

- Advertisement -