வரவிருக்கும் சனிப்பெயர்ச்சி உங்கள் வாழ்வில் ஏற்படுத்தக்கூடிய பிரச்சினைகளில் இருந்து தப்புவது எப்படி? சனி பார்வை யார் மீதெல்லாம் கண்டிப்பாக விழும் தெரியுமா?

clothes-sani-bagavan
- Advertisement -

2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16ஆம் தேதி நிகழவிருக்கும் சனி பெயர்ச்சி வாழ்வில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த இருக்கிறது. ஒவ்வொருவருடைய ராசிக்கும் சனி பகவான் பல்வேறு விதமான பலன்களை கொடுக்க இருக்கிறார். இப்படி ஒவ்வொரு சனி பெயர்சியிலும் ஏற்ற இறக்கங்களை சந்தித்துக் கொண்டிருக்கும் நம்முடைய வாழ்க்கையில் சனி பார்வை படாமல் இருக்க நாம் எப்படி இருக்க வேண்டும்? எப்படி இருக்கக் கூடாது? என்கிற ஜோதிடம் சார்ந்த தகவல்களைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

சனி பகவானுடைய தீய பார்வைகள் நம் மீது எளிதில் விழக்கூடிய சில விஷயங்கள் உண்டு. இதை நம் வாழ்க்கையில் எப்பொழுதும் செய்யாமல் இருப்பது நல்லது. இந்த சில விஷயங்களை செய்யும் பொழுது சனி பகவானுடைய கெடு பலன்களை நீங்கள் உங்களுடைய ஜாதகத்தில் அனுபவிக்க வேண்டும் என்று இருந்தால் மிக விரைவாக அனுபவிக்கக்கூடும். அந்த வகையில் நாம் செய்யும் சில தவறுகள் என்ன?

- Advertisement -

முதலில் எப்பொழுதும் உலர்த்தாத துணியை உடுத்திக் கொள்ளக்கூடாது. ஈரத்துடன் இருக்கும் துணியுடன் நீங்கள் இருந்தால் சனியின் கெடு பலன்கள் விரைவாக உங்களை வந்தடைய சனி பகவான் பிடித்துக் கொள்வார். நாம் அணியும் துணிமணிகள் எப்பொழுதும் நன்கு சுத்தமாக உலர்ந்ததாக இருக்க வேண்டும்.

குளித்து முடித்து அங்கேயே நன்கு உடலை உலர்த்தி உடை உடுத்திக் கொண்டு வீட்டிற்குள் வர வேண்டும். தண்ணீர் சொட்ட சொட்ட நனைந்தபடி வீட்டிற்குள் வந்தால் சனி பகவான் உங்களை உடனடியாக பிடித்துக் கொள்வார். இத்தகையவர்களை சனி பகவானுக்கு மிகவும் பிடிக்குமாம் அதனால் இந்த தவறை செய்ய வேண்டாம்.

- Advertisement -

எந்த சூழ்நிலையிலும் நாம் குளிக்காமல் இருக்க கூடாது. ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிப்பது நல்லது என்று கூறப்படுகிறது ஆனால் ஒரு முறை கூட சிலர் கொடுக்காமல் இருக்கிறார்கள். அசுத்தமாக குளிக்காமல் இருப்பவர்களை சனி பகவானுக்கு சுத்தமாக பிடிக்காது. இவர்களை உடனே வந்து பற்றி கொள்வார்.

மேலும் தலைவிரி கோலமாக இருப்பவர்களையும், சனி பகவான் எளிதாக பற்றி கொள்வார். வெளியில் இருந்து வீட்டிற்குள் வருபவர்கள் கண்டிப்பாக கால்களை நன்கு கழுவி சுத்தம் செய்து கொண்டு வர வேண்டும். குறிப்பாக பின்னங்காலை கழுவாமல் வரக்கூடாது. பின்னங்கால் வழியாக சனி பகவான் பிடித்து விடுவதாகவும் ஜோதிடங்கள் கூறுகிறது.

- Advertisement -

முதல் நாள் நீங்கள் உடுத்திக் கொண்ட துணியை மறுநாள் துவைக்காமல் உடுத்திக் கொள்ளக் கூடாது. இந்த விஷயத்தை செய்தாலும் சனி பகவான் உங்களை விரைவாக பிடித்துக் கொள்வார். சனி பலன்கள் மிகவும் மோசமானதாக இருக்கும் என்பதால் சனியினால் பீடிக்கப்பட்டவர்கள் இந்த சில விஷயங்களில் கவனமுடன் இருப்பது நல்லது.

இதையும் படிக்கலாமே:
உங்களுடைய படுக்கை அறை இப்படி இருந்தால் கணவன் மனைவிக்குள் சண்டை தான் வருமாம் தெரியுமா? தம்பதியர் ஒற்றுமைக்கு படுக்கை அறையில் செய்யக்கூடாத விஷயங்கள்!

சனியைப் போல கொடுப்பவர்களும் இல்லை, சனியை போல கெடுப்பவர்களும் இல்லை என்று கூறுவார்கள். அவர் கொடுத்தால் நாம் குப்பையில் இருந்தாலும் கோபுரத்தில் ஏறி விடலாம் ஆனால் அவர் தடுத்தால் கோபுரத்தில் இருந்தாலும் குப்பைக்கு செல்ல வேண்டியது தான். வீட்டில் எப்பொழுதும் விளக்கு ஏற்றப்படாமல் இருண்டு காணப்படக்கூடாது. எப்பொழுதும் வெளிச்சத்துடன் வைத்துக் கொள்ளுங்கள். அமங்கல சொற்களை, அசுப சொற்களை தவிர்க்க வேண்டும். சனி உங்களுக்கு சாதகமாக இல்லை என்றால் இந்த சில விஷயங்களை செய்யாமல் இருப்பது உத்தமம். சிவபெருமான், ஹனுமான், பைரவர் வழிபாடு தொடர்ந்து செய்து வர சனி பார்வையில் இருந்து தப்பிக்கலாம்.

- Advertisement -