சனி தோஷம் விலக பரிகாரம்

sani bhagavan one rupee coin
- Advertisement -

வாழ்க்கையில் துன்பத்திற்கு மேல் துன்பம் என போராத காலம் வந்து விட்டால் உடனே நாம் சொல்லும் வார்த்தை அவர்களுக்கு சனி திசை துவங்கி விட்டது என்று தான். ஏனெனில் சனி பகவானாவர் ஒருவருடைய நன்மை தீமைகளுக்கு ஏற்ப நியாயமான தீர்ப்பை அளிக்கக் கூடியவர். அத்தகைய சனி பகவானின் தாக்கத்தால் பிரச்சனை ஏற்படும் போது அதிலிருந்து தப்பிக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

சனி பகவானின் தாக்க குறைய வேண்டிய பரிகாரம்

சனி பகவானின் தாக்குதலை குறைத்துக் கொள்ள நாம் சனிக்கிழமை தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இந்த பரிகாரம் செய்வதற்கு ஒரு ரூபாய் நாணயங்கள் தேவை. இந்த பரிகாரம் செய்யும் நாளன்று ஆலயத்திற்கு சென்று சனி பகவானை நல்ல முறையில் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த பரிகாரத்தை துவங்குங்கள்.

- Advertisement -

சனிக்கிழமை அன்று இரவு தூங்கும் பொழுது தலையணை அடியில் ஒரு ரூபாய் வைத்துக் கொண்டு தூங்குங்கள். மறுநாள் காலையில் அதை எடுத்து ஒரு டப்பாவில் போட்டு வைத்து விடுங்கள். இதே போல தொடர்ந்து 48 நாட்கள் செய்ய வேண்டும். 48 நாட்கள் முடிந்த பிறகு வரும் சனிக்கிழமை அன்று இந்த 48 ரூபாய் நீங்கள் தானம் செய்ய வேண்டும்.

அதாவது ஒருவருக்கு உணவு வாங்கித் தர வேண்டும். அது வயது முதிர்ந்தவர்களாக இருக்கலாம் அல்லது அடுத்த வேலை சாப்பாட்டிற்கு துன்பப்படுபவர்களாக இருக்கலாம் துப்புரவு தொழிலாளர்கள் போன்றோருக்கு இந்த பணத்தில் நீங்கள் சாப்பாடு வாங்கி தர வேண்டும். இதற்கு மேலும் நீங்கள் பணத்தை போட்டு வாங்கி கொடுக்கலாம் அது உங்கள் விருப்பம்.

- Advertisement -

ஆனால் இதை செய்யும் நாளும் சனிக்கிழமையாக இருக்க வேண்டும் அதை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். அதே போல் சனிக்கிழமை சனி ஹேரையில் செய்வது உங்கள் கர்மாக்கள் குறைய உடனே வழி தேடி தரும் என்று சொல்லப்படுகிறது. அது மட்டும் இன்றி சனிக்கிழமையில் காகத்திற்கு எள் சாதம் வைப்பது சனிக்கிழமையில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று தீபம் ஏற்றுவது அனுமன் சாலிசா படிப்பது போன்றவை எல்லாம் சனி பகவானின் தாக்கத்தை பெரும் அளவு குறைக்கும்.

இதையும் படிக்கலாமே: செல்வம் பெருக விநாயகர் வழிபாடு

இவையெல்லாம் சனியின் தோஷத்தை குறைக்க நாம் மேற்கொள்ளும் வழிமுறைகள் தான். ஆனால் நம்முடைய வாழ்நாளில் வாழும் வாழ்க்கையை நல்ல முறையில் வாழ்ந்தால் துன்பத்தை கொடுக்கக் கூடிய தெய்வங்கள் கூட இன்பத்தை கொடுக்கும் என்பதில் துளியும் சந்தேகமே இல்லை.

- Advertisement -