சனி வக்ர நிவர்த்தியால் அடுத்து வரக்கூடிய 3 மாதங்களுக்கு ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய அந்த 4 ராசிகள் என்னென்ன?

sani
- Advertisement -

கடத்த ஒரு சில நாட்களுக்கு முன்பு சனி பகவான் வக்கிர நிவர்த்தி அடைந்திருக்கிறார். அதாவது தீபாவளிக்கு முந்தைய நாள் அக்டோபர் 23, 2022 ஆம் தேதி மகர ராசியில் இந்த வக்ர நிவர்த்தி நடைபெற்றது. 2023 ஜனவரி 17ஆம் தேதி மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு சனி பகவான் (சனி பெயர்ச்சி) பெயர்ச்சியாக இருக்கின்றார்.  இடைப்பட்ட இந்த மூன்று மாதங்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்கள், புதியதாக தொடங்கக்கூடிய எந்த காரியமும் சட்டென முடியாது. நீங்கள் கடினமாக உழைத்தால் தான் பலன் கிடைக்கும். அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் வீசுவதற்கு வாய்ப்பே இல்லை. எல்லா விஷயங்களிலும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். தொழிலில் லாபம் குறையும். வரவேண்டிய சம்பளம் நேரத்திற்கு வந்து சேராது. கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வீண் விரையும் உண்டாகும். கையில் இருக்கும் சேமிப்பும் குறையும். மூன்று மாதங்களுக்கு பின்பு எல்லாம் சரியாகிவிடும் கவலைப்படாதீங்க.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு ஏற்கனவே அஷ்டமத்து சனி நடந்து கொண்டிருக்கிறது. இதில் இந்த வக்கிர சனி நிவர்த்தியால் இன்னும் கொஞ்சம் பிரச்சனைகள் அதிகமாக வரும். காரிய தடை இருக்கும். சொன்ன சொல்லை காப்பாற்ற முடியாமல் கஷ்டப்படுவீர்கள். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வரும். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் இருக்கக் கூடாது. பிள்ளைகளுக்குள் பிரச்சனை என்றால் விட்டு கொடுத்து செல்லுங்கள். ஆரோக்கியத்தில் சின்ன பிரச்சினையாக இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு மனக்கவலை கொஞ்சம் அதிகரிக்கும். நேற்று செய்த தவறு, போன மாதம் செய்த தவறு, போன வருடம் செய்த தவறுக்கு இப்படி எப்பவோ செய்த தவறுக்கு கூட இந்த மூன்று மாதத்தில், தண்டனையை அனுபவிக்க போறீங்க. இனிமே வரக்கூடிய பிரச்சனையில் இருந்து தப்பிக்க பொய் சொல்லாதீங்க. எதுவாக இருந்தாலும் உண்மையை சொல்லி ஒற்று கொள்ளுங்கள். அது உங்களுக்கு பிரச்சனையை கொடுக்காது. செலவுகள் கையை மீறி நடக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் சில சிக்கல்கள் உண்டாகும். மனக்கசப்பு ஏற்படும்.

- Advertisement -

கும்பம்:
கும்ப ராசிக்காரர்கள் எல்லா விஷயத்திலும் இந்த மூன்று மாதங்கள் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டி இருக்கும். பிரச்சனை உங்களை துரத்தி துரத்தி அடிக்கும். உடனே பயந்து விடாதீங்க. பெரியதாக இழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு கிடையாது. பிரச்சினைகள் சூழும் போது மனக்கவலை அதிகரிக்கும். உடல்நலம் பாதிக்கும். மருத்துவச் செலவு அதிகரிக்கும். கடன் நிறைய வாங்க வேண்டாம்.

ஏற்கனவே கடன் பிரச்சனையில் இருப்பவர்களுக்கு இந்த காலம் மேன்மேலும் கஷ்டத்தை கொடுத்து விடும். முன் கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். உறவுகளிடம் நாசுக்காக நடந்துக்கோங்க. இந்த சமயத்தில் உறவுகள் பிரியவே கூடாது. குறிப்பாக கணவன் மனைவிக்குள் சண்டை வந்து பிளவு ஏற்படக் கூடாது. அது நிரந்தரமாவதற்கு வாய்ப்பு உள்ளது ஜாக்கிரதை.

இதையும் படிக்கலாமே: சூரிய கிரகண தோஷம் பரிகாரம், கிரகண நேரம் 2022.

மேல் சொன்ன விஷயங்கள் எல்லாமே பொதுப்படையாக சொல்லப்பட்டுள்ள கணிப்புகள் தான். அவரவர் ஜாதகம், பிறந்த நேரம், நட்சத்திரத்தைப் பொறுத்து இந்த குறிப்புகளில் சில மாற்றங்கள் ஏற்படும். இவற்றைத் தாண்டி எல்லாம் நன்மையாகவே நடக்க வேண்டும் என்றால் தினம் தோறும் நவகிரக வழிபாடும், குலதெய்வ வழிபாடும், சனி பகவான் வழிபாடு நன்மையை கொடுக்கும் என்பது சாஸ்திரத்திரம் சொல்லும் நம்பிக்கை. மேல் சொன்ன விஷயங்களில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருதோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -