இன்று சங்கடஹர சதுர்த்தி! இந்த 1 வார்த்தையை சொல்லி பிள்ளையாருக்கு சிதறு தேங்காய் உடைத்தால், வேண்டுதல் உடனே பலிக்கும். சங்கடங்கள் எல்லாம் சுக்கு நூறாக உடைந்து சிதறும்.

pillaiyar-prayer
- Advertisement -

சங்கடஹர சதுர்த்தி விநாயகர் வழிபாடு சங்கடங்களை எல்லாம் தீர்க்கும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். சங்கடஹர சதுர்த்தி அன்று நிறைய பேருக்கு சிதறு தேங்காய் உடைத்து விநாயகரை வழிபடக்கூடிய வழக்கம் இருக்கும். விநாயகருக்கு உடைக்கும் சிதறு தேங்காய் எப்படி சிதறி உடைகின்றதோ, அதேபோல நம்முடைய சங்கடங்கள் எல்லாம் நம்மை விட்டு விலகி ஓடும் என்பது தான் நம்பிக்கை. மிக மிக எளிமையாக சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டை எப்படி மேற்கொள்வது, சிதறு தேங்காய் உடைக்கும் போது எந்த ஒரு வார்த்தையை சொன்னால் நம்முடைய வேண்டுதல் உடனே பலிக்கும் என்பதைப் பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

சங்கடஹர சதுர்த்தி வழிபாடு:
ரொம்ப ரொம்ப குழந்தை உள்ளம் படைத்தவர் தான் விநாயகர். வெறும் கையோடு சென்று மூன்று தோப்புக்கரணம் போட்டு, பிள்ளையார் கொட்டு கொட்டிக்கொண்டு, இரண்டு கைகளையும் ஏந்தி நீங்கள் என்ன வரம் கேட்டாலும் அதை உடனே உங்களுக்கு கொடுத்து விடுவார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. வெறும் கையோடு சென்றாலே வரங்கள் கோடி. கையில் விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டையை செய்து கோவிலுக்கு கொண்டு போனால், சொல்லவே வேண்டாம். கோடான கோடி வரங்கள் கிடைக்கும்.

- Advertisement -

இந்த சங்கடஹர சதுர்த்தி திதி வரும்போது, உங்கள் கையாலேயே விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டையை செய்து எடுத்துக்கொண்டு போய், உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் விநாயகர்கோவிலில் கொடுத்து நிவேதனம் செய்து அந்த கொழுக்கட்டையை உங்கள் கையால் அந்த கோவிலுக்கு வரும் குழந்தைகள், பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுப்பது மிகவும் நல்லது.

இந்த சங்கடஹர சதுர்த்திக்கு உங்களுடைய மனதில் ஏதாவது ஒரு வேண்டுதலை வைத்து இப்படி கொழுக்கட்டை செய்து கொண்டுபோய் விநாயகர் கோவிலில் பிரசாதமாக கொடுத்துப் பாருங்களேன். அடுத்த சங்கடஹர சதுர்த்தி வருவதற்குள் உங்களுடைய வேண்டுதலை அந்த விநாயகர் நிறைவேற்றி வைப்பார். இந்த வழிபாட்டை வெறும் நம்பிக்கை என்று மட்டும் சொல்லி விட முடியாது. இது நிறைய பேருக்கு கை மேல் பலன் கொடுத்த ஒரு பரிகாரம்.

- Advertisement -

சிதற தேங்காய் உடைக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரம்:
உங்கள் கஷ்டங்கள் தீர வேண்டும் என்று விநாயகர் கோவிலுக்கு சென்று சங்கடஹர சதுர்த்தி தினத்தில் சிதறு தேங்காய் உடைக்கும் வழக்கம் உங்களிடத்தில் உள்ளதா. அந்த சித்று தேங்காயை உடைக்கும் முன்பு 2 உள்ளங்கைகளிலும் அந்த தேங்காயை வைத்துக் கொண்டு, விநாயகப் பெருமானை பார்த்து கஷ்டங்கள் தீர மனதார வேண்டிக் கொள்ளுங்கள். பிறகு ‘ஓம் சர்வ சக்கர டம் டம் ஸ்வாஹா’ என்ற இந்த மந்திரத்தை மூன்று முறை சொல்லுங்கள். அதன் பிறகு கையில் இருக்கும் தேங்காயை சிதறு தேங்காய் உடைத்து விடுங்கள். நீங்கள் வேண்டியது நிச்சயமாக அடுத்த சங்கட சதுர்த்திக்குள் நிறைவேறும். நீங்கள் எந்த கஷ்டத்தை சொல்லி இந்த சிதறு தேங்காயை உடைக்கிறீர்களோ, அந்த கஷ்டங்கள் எல்லாம் சுக்கு நூறாக சிதறி விடும் என்பது நம்பிக்கை.

இதையும் படிக்கலாமே: பூஜைக்கு தூபம் போடும் போது இந்த பொருள்களையும் சேர்த்து போட்டால் மகாலட்சுமி தாயார் நம் வீட்டில் நிரந்தரமாக தங்கி சகல ஐஸ்வர்யங்களையும் நிச்சயமாக வாரி வழங்குவார்.

விநாயகருக்கு மட்டும் தான் இந்த மந்திரத்தை உச்சரித்து சிதறு தேங்காய் உடைக்க வேண்டும் என்று அவசியமில்லை. எந்த இடத்தில் நீங்கள் சிதறு தேங்காய் உடைக்கும் போதும் இந்த மந்திரத்தை உச்சரித்தால் அதன் மூலம் உங்களுக்கு நன்மையே நடக்கும் என்ற இந்த தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -