இந்த சின்ன சின்ன எளிமையான விஷயங்களை கடைப்பிடித்து வந்தாலே போதும். பெரிய பெரிய பிரச்சனைகள் எல்லாம் தூசி தும்பு போல காணாமல் போய்விடும்.

Arasamaram
- Advertisement -

பெரிய அளவில் இருக்கும் கஷ்டங்களுக்கு பெரிய அளவில் தான் பரிகாரம் செய்ய வேண்டும் என்பது அவசியம் கிடையாது. மனசு ரொம்ப கஷ்டமா இருக்கும்போது, கோவிலுக்கு போவோம். அங்கு யாரையாவது சந்திப்போம். நம்முடைய கஷ்டத்தை சொல்லுவோம். அந்த கஷ்டத்திற்கு எளிமையான தீர்வை சொல்லிவிடுவார்கள். அந்தக் கடவுளே வந்து நேரில் சொன்னது போல நமக்கு அவ்வளவு நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும். அப்படித்தாங்க எல்லா பிரச்சனையும். எல்லாத்தையும் போட்டு பெரிய அளவில் குழப்பிக்க கூடாது. பெரிய பெரிய பிரச்சனைகளுக்கு கூட நாம் செய்யும் சின்ன சின்ன விஷயங்களின் மூலம் விடிவு காலம் பிறக்கும். அப்படி நம் பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய எளிமையான ஒரு சில பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

சந்தோஷம் பெருக ஆன்மீக குறிப்புகள்:
வீட்டில் ரொம்பவும் வறுமை இருக்கா பண கஷ்டம் இருக்கா. உங்கள் பூஜை அறையில் தங்கத்தில் வைரத்தில் ஆடை ஆபரணங்களோடு ஜொலி ஜொலிக்கும் பெருமாள் படத்தை வாங்கி மாட்டி வைத்து, புதன்கிழமையும் சனிக்கிழமையும் மனம் உருகி வேண்டுதல் வையுங்கள். பணகஷ்டத்தை அந்த பெருமாளே வந்து தீர்த்து வைப்பார்.

- Advertisement -

குறிப்பு 2:
வீட்டில் ஒரு பொட்டு தங்கம் கூட சேரவில்லையா. பெண் குழந்தைக்கு கூட தங்கம் வாங்க முடியவில்லை. வாங்கிய தங்கம் எல்லாம் அடமானத்துக்கு போகுதா. உங்களுடைய பிறந்தநாள் அன்று, அதாவது நீங்கள் பிறந்த நட்சத்திரத்தன்று பிறந்தநாள் வரும் அல்லவா. அன்றைய நாளில் ஸ்வர்ணாக்கர்சன பைரவருக்கு சுத்தமான பன்னீர் வாங்கி கொடுத்து அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்தால், வீட்டில் தங்கத்தின் தோஷம் விலகும். தங்கம் வாங்க முடியாதவர்கள் வீட்டில் கூட, நிறைய தங்கம் சேரும். அடமானத்தில் இருக்கும் தங்கத்தை சீக்கிரம் மீட்டெடுக்கக்கூடிய நேரம் காலம் கைக்கூடி வரும்.

குறிப்பு 3:
வீடு எப்போதும் மணக்க மணக்க வாசம் நிறைந்ததாக இருக்க வேண்டும். வீட்டிற்குள் நுழைந்தாலே கோவிலுக்குள் நுழைந்த ஒரு உணர்வு நமக்குள் வர வேண்டும். அப்போதுதான் அந்த வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் தங்கும். இதற்கு வாசனை நிறைந்த பூக்களை வாங்கி வீட்டில் உருளியில் போடலாம். சுவாமிக்கு வைக்கலாம். வீட்டில் இருக்கும் பெண்களும் தலையில் பூ வைத்துக் கொள்ளலாம். எப்போதும் வாசனை நிறைந்த பூக்கள் கிடைக்கவில்லை என்றால் அக்தர், ஜவ்வாது, பன்னீர், போன்ற வாசனை திரவியங்களை வீட்டின் மூளை முடுக்குகளில் தெளித்து வைக்கவும். இந்த பாசிட்டிவ் வாசனை உங்களுக்கு நிறைய நன்மையை கொண்டு வந்து சேர்க்கும்.

- Advertisement -

குறிப்பு 4:
மாதம் தோறும் வரக்கூடிய பௌர்ணமி அன்று, அம்பாளை மனம் உருகி வழிபாடு செய்தால், வீட்டில் இருக்கும் சுபகாரியத் தடை விலகும். வீட்டில் பெண்களுக்கு இருக்கும் மனக்கஷ்டம் நீங்கும். குறிப்பாக இந்த விரதத்தை வீட்டில் இருக்கும் பெண்கள் மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பு 5:
வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் அரசமர பிள்ளையாரை 11 முறை வலம் வந்து பணக்கஷ்டம் தீர வேண்டும் என்று வேண்டுதல் வைத்தால், எவ்வளவு பெரிய பணக்கஷ்டமும் சீக்கிரத்தில் சரியாகிவிடும். அது மட்டுமல்லாமல் இந்த நேரத்தில் வேறு எந்த வேண்டுதலை விநாயகரிடம் கேட்டாலும் அது உங்களுக்கு அப்படியே கிடைக்கும். உதாரணத்திற்கு நல்ல வேலை கிடைக்க, தொழில் ஓஹோ என வளர, குடும்பத்தில் நிறைய நல்லது நடக்கணும். குடும்பத்தில் சண்டை சச்சரவு வரக்கூடாது. சந்தோஷம் பெருகனும் என்று என்ன வேண்டுதலை வைத்தாலும் அது உங்களுக்கு கூடிய விரைவில் நிறைவேறும்.

இதையும் படிக்கலாமே: செய்வினை ஏவல் பில்லி சூனியம் போன்ற எந்த அமானுஷ்யமான சக்தியாலும் உங்கள் உடலை நெருங்கவே முடியாது. வாரத்தில் ஒரு நாள் இப்படி குளித்தால்.

மேலே சொன்ன சின்ன சின்ன இந்த ஆன்மீகம் சார்ந்த குறிப்புகளில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -