செய்வினையை தடுத்து நிறுத்த பரிகாரம்

mahalashmi5
- Advertisement -

ஜாதக கட்டத்தில் எல்லா கிரகங்களும் சரியாக இருக்கிறது. நேரமும் நல்லாதான் இருக்கு. ஆனால் குடும்பத்தில் தீராத பிரச்சனை, தீராத பிணி, தீராத கஷ்டம் இருக்கிறது என்றால், அவர்கள் மனதில் முதலில் எழக்கூடிய சந்தேகம், யாரோ நமக்கு செய்வினை வச்சிட்டாங்க. யாரோ நமக்கு மருந்து வச்சுட்டாங்க.

இதனால் தான் பிரச்சனைகள் தீரவில்லை என்ற ஒரு சந்தேகம் வந்து விடுகிறது. உங்களுக்கும் உங்களுடைய வீட்டில் இருப்பவர்களுக்கும் இப்படிப்பட்ட பிரச்சனைகள் இருந்தால், வீட்டில் செய்வினை இருப்பதாக உணர்ந்தால், உங்கள் உடம்பில் செய்வினை இருப்பதாக உணர்ந்தால், எளிமையான ஆன்மீகம் சொல்லும் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். செய்வினையால் வரும் பாதிப்புகளை நீங்களே தவிர்க்கலாம்.

- Advertisement -

செய்வினை பாதிப்புகளை தடுக்கும் செடி

நம்மை நாமே பாதுகாப்பாக வைத்துக் கொண்டால், எந்த ஒரு கெட்ட சக்தியாலும் நமக்கு பிரச்சனை வராது. அதற்கு அந்த காலத்திலேயே நம்முடைய முன்னோர்கள் சில விஷயங்களை செய்து வந்தார்கள். அதையெல்லாம் இப்போது நாம் செய்வதில்லை. அதனால் தான் கண்ணுக்கு தெரியாத கெட்ட சக்தியின் மூலம் இன்று கஷ்டப்படுகின்றோம்.

அந்த காலத்தில் எல்லோர் வீட்டு வாசலிலும் மருதாணி செடியானது வளர்க்கப்பட்டது. இன்றும் கூட நிறைய கிராமப்புறங்களில் போய் பாருங்கள் தெரியும். நிலை வாசலில் இருக்கக்கூடிய சின்ன இடத்தில் மருதாணி செடி வைத்து வளர்த்து வருவார்கள். இட வசதி இல்லாதவர்கள் கூட ஒரு தொட்டியில் மண் போட்டு அதில் மருதாணி செடியை வளர்த்து வருவார்கள்.

- Advertisement -

இந்த மருதாணி செடி இருக்கக்கூடிய இடத்தில் தீய சக்தி அண்டாது. உங்கள் நிலை வாசலில் இந்த மருதாணி செடியை வைத்துவிட்டால் உங்களுடைய வீட்டுக்குள் செய்வினை ஏவல் பில்லி சூனியம் கண் திருஷ்டி போன்ற எந்த கெட்ட சக்தியாலும் நுழைய முடியாது.

அது மட்டும் இல்லைங்க கெட்ட எண்ணத்தோடு யாராவது வராங்க உங்க வீட்டுக்குள்ள நுழைய பாக்குறாங்க அப்படின்னா கூட, அந்த கெட்ட எண்ணத்தை எல்லாம் அழித்து, கெட்ட எண்ணம் புகுந்த மனதில், நல்லெண்ணத்தை வைத்து வீட்டிற்குள் அனுப்பக்கூடிய வேலையை இந்த மருதாணி செடி செய்யும். இந்த மருதாணி செடி மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியது.

- Advertisement -

மருதாணி செடியை வீட்டில் வைத்து வளர்த்து வாருங்கள். அந்த செடியில் இருந்து வளரக்கூடிய மருதாணி இலைகளை பறித்து அரைத்து கையில் வைத்து பயன்படுத்துங்கள். வீட்டுப் பெண்கள் மகாலட்சுமி அம்சத்தை பெறலாம். ஆண்கள் சிறு குழந்தைகள் யார் வேண்டுமென்றாலும் இந்த மருதாணியை கையில் இட்டுக் கொள்ளலாம். குறிப்பாக வயது வந்த பெண்களுக்கு.

மாதவிடாய் வருவதற்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பு கையில் மருதாணி வைத்துக் கொள்வது ரொம்ப ரொம்ப நல்லது. மருதாணியை கையில் வைத்துக் கொண்டாலே நம்மை எந்த கெட்ட சக்தியும் அண்டாது என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

இதையும் படிக்கலாமே: இதுவரை கேள்விப்படாத வித்தியாசமான ரெசிபி முட்டைகோஸ் கோதுமை சப்பாத்தி. இந்த சப்பாத்திக்கு பக்க சைட் டிஷ் தேங்காய் சட்னி ரெண்டையும் சேர்த்து எப்படி செய்வது என்று பார்க்கலாமா?

ஒரு செடி, இதை வைப்பதனால் எந்த பாதிப்பும் நமக்கு ஏற்பட போவது கிடையாது. அதை நாம் நம்முடைய வீடுகளில் வைத்து வளர்த்து தான் பார்த்தோமே. செடி வளர வளர உங்களுடைய குடும்பம் செழிப்போடு செல்வக் கலாச்சத்தோடு வளரும். உங்கள் வீடு பாதுகாப்பு கவசத்திற்குள் வந்துவிடும். வீட்டுக்குள் கண்ணுக்குத் தெரியாத எந்த கெட்ட சக்தியாலும் நுழைக்க முடியாது. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

- Advertisement -