இவையெல்லாம் உங்கள் வாழ்வில் தொடர்ச்சியாக நடந்தால், பெரிய துன்பங்கள் உங்களுக்கு நேர போகிறது என்று அர்த்தம். எதிர்மறை ஆற்றல் உங்களை சூழ்ந்துள்ளதை உணர்த்தும் அறிகுறிகள்

sulam kulatheivam
- Advertisement -

தான் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும். தனக்கு மட்டுமே அனைத்து மகிழ்ச்சிகளும் கிடைக்க வேண்டும். தனக்கு மட்டுமே வெற்றிகள் கிடைக்க வேண்டும் என்று சுயநலமாக யோசிப்பவர்கள் நிறைந்த உலகமாக இந்த உலகம் இருக்கிறது. அவ்வாறு நினைப்பதோடு மட்டும் இன்றி, தனக்கு இணையாக இருக்கும் மற்றவர்கள் நன்றாக இருக்கக் கூடாது, தோல்வி அடைய வேண்டும், கஷ்டங்கள் அவர்களுக்கு நேரிட வேண்டும் என்று பல தீய எண்ணத்தோடு செய்வது தான் செய்வினை எனப்படும். இந்த பதிவில் ஒருவருக்கு செய்வினை ஏற்பட்டு இருப்பின் என்னென்ன அறிகுறிகள் நேரும் என்பதை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

செய்வினையால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றிலிருந்து வெளிவருவதற்கு பல பரிகாரங்களை மேற்கொள்கின்றன. ஆனால் அந்த செய்வினை தனக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதே அறியாமல், பல பேர் இன்றளவும் இருந்து வருகின்றன. ஒருவரது வாழ்க்கையில் அவருக்கு செய்வினை ஏற்பட்டு இருக்கிறது என்பதை அறிவதற்கு சில அறிகுறிகள் இருக்கின்றன.

- Advertisement -

செய்வினை இருக்கிறது என்பதை அறியக்கூடிய அறிகுறிகள்:
தனக்கு சம்பந்தமே இல்லாத ஏதாவது ஒரு ரூபத்தில் இருந்து பிரச்சனைகள் வந்து கொண்டே இருப்பது. கழுத்துப் பின்புறம் வலி இருப்பது அல்லது எரிச்சல் இருப்பது. கை மற்றும் கால்களில் எரிச்சல் ஏற்படுவது. தேவையில்லாமல் வாந்தி வருவது. அடிக்கடி உடல் உபாதைகள் ஏற்படுவது, அதற்காக மருத்துவரை அணுகும் போது மருத்துவர் எந்த பிரச்சினையும் இல்லை நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று கூறுவது.

பத்து பேராக கூடியிருக்கும் சூழ்நிலையில் தம்மை யாரும் கவனிக்காமல் இருப்பது. வீட்டிலும் சரி வெளியிலும் சரி நாலு பேருக்கு நடுவில் ஏதாவது பேச வேண்டும் என்று நினைக்கும் போது தம்மால் பேச முடியாமல் தடுமாறுவது. காரணமே இன்றி வீட்டில் இருப்பவர்களுக்கிடையே சண்டைகள் ஏற்படுவது. சரியான முறையில் முயற்சிகளை மேற்கொண்டும் ஏதாவது ஒரு ரூபத்தில் தடங்கல்கள் ஏற்படுவது.

- Advertisement -

எது சாப்பிட்டாலும் வாந்தி வருவது, உடல் எதையும் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது போல் உணர்வது. குலதெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படுவது. மேலும் கோவிலுக்கு சென்றாலும் தெய்வ வழிபாட்டில் ஈடுபட முடியாமல் ஏதாவது ஒரு ரூபத்தில் தடங்கள் ஏற்படுவது.

இதையும் படிக்கலாமே: கோடி கோடியாக பணத்தை குவிக்க, வீட்டில் சுக்கிர ஓரையில் இந்த தீபத்தை தான் ஏற்ற வேண்டும்.

அடிக்கடி ஏப்பம் வருவது மற்றும் கொட்டாவி வருவது போன்றவை செய்வினை இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும். மேற்கூறிய அறிகுறிகள் ஏதேனும் இருப்பின் முதலில் வீட்டின் அருகில் உள்ள அம்மன் ஆலயத்தில் சூலத்தில் உள்ள எலுமிச்சை பழத்தை கொண்டு வந்து வீட்டின் நிலை வாசலில் கட்டி விடுங்கள். அத்துடன் அவற்றிற்கு சரியான பரிகாரத்தை மேற்கொள்வதன் மூலம் இந்த செய்வினைகளில் இருந்து வெளியில் வந்து வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.

- Advertisement -