நீங்கள் செலவு செய்த பணம் பல மடங்காக உங்களிடம் திரும்பி வர சொல்ல வேண்டிய ரகசிய மந்திரம்.

cash
- Advertisement -

எல்லோருக்குமே பண தேவைகள் அதிகமாக இருக்கிறது. வருமானமாக வந்த பணம் நிறைய செலவு ஆகக்கூடாது. சேமிப்பில் தங்க வேண்டும் என்று தான் நினைப்போம். ஆனால் காலத்தின் கட்டளை, விதியின் பயனால் வந்த வரவு அனைத்தும் முக்கால்வாசி பேருக்கு செலவாகத்தான் செய்யும். ஏதோ ஒரு சில பேர் மட்டும்தான் கோடிக்கணக்கில் லட்சக்கணக்கில் பணத்தை சேமித்து வைத்திருக்கிறார்கள்.

அவர்களை விட்டு விடுவோம். இப்போது நம்முடைய பிரச்சனைக்கு வருவோம். கையில் பணம் தங்க வேண்டும் என்றால் பணத்தை செலவு செய்யும்போது, நாம் எந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். கூடவே சேர்த்து சொல்ல வேண்டிய ஏஞ்சல் நம்பர் என்ன, இந்த ரகசிய குறிப்பை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால் இந்த பதிவை தொடர்ந்து படிங்க.

- Advertisement -

செலவான பணம் மீண்டும் திரும்ப வர சொல்ல வேண்டிய மந்திரம்

இந்த மந்திரத்தை தெரிந்து கொள்வதற்கு முன்பு நாம் இன்னொரு விஷயத்தை ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும். எப்போதுமே பணத்தை செலவு செய்யும்போது மன வருத்தப்படக்கூடாது. பணத்தை செலவு செய்யவில்லை என்றால், பால், காய்கறி, மளிகை பொருட்கள், தின்பண்டங்கள், இதை எல்லாம் எப்படி வாங்க முடியும்.

நாம் உடித்துக் கொள்ளும் ஆடைகளை எல்லாம் எப்படி வாங்க முடியும். வாடகைக்கு வீடு குடியிருப்பவர்கள், வாடகை கொடுக்கவில்லை என்றால் வீட்டில் எப்படி குடியிருக்க முடியும். இதெல்லாம் அத்தியாவசியமான செலவுதானே. இதையெல்லாம் செய்தால்தானே வாழ்க்கையை நடத்த முடியும். இதற்காகத்தானே கடவுள் நமக்கு பணத்தை வருமானமாக கொடுத்திருக்கின்றான்.

- Advertisement -

இப்படி செலவு செய்யும் போதெல்லாம் அச்சச்சோ பணம் நம் கையை விட்டு போகிறதே என்று யோசிக்காதிங்க. இந்த செலவுக்கு, பணத்தை என் கையில் கொடுத்த ஆண்டவனுக்கு நன்றி என்று சொல்லுங்க. இன்றைய செலவுக்காக ஆயிரம் ரூபாயை உங்கள் கையில் எடுக்குறீங்க. அப்படி எடுக்கும் போது நீங்கள் இந்த மந்திரத்தை சொல்லுங்க.

‘ஓம் ஸ்ரீம் யம் நமஹ’ 1403. கூடவே அந்த நம்பரையும் சொல்ல மறக்காதீங்க. அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக பணம் செலவு செய்யும் போதும் சரி அல்லது வேறு ஏதாவது மருத்துவ செலவு அல்லது ஆடம்பர செலவுக்காக பணத்தை செலவு செய்யும்போதும் சரி, நீங்கள் பணத்தை கொடுக்கும் போது மேல் சொன்ன மந்திரத்தையும், மேல் சொன்ன நம்பரையும் மனதிற்குள்ளேயே சொல்லிவிட்டு, பணத்தை அடுத்தவர்களிடம் கொடுக்கலாம்.

- Advertisement -

இப்படி செய்தால் நீங்கள் செலவு செய்த பணம் மீண்டும் உங்கள் கைக்கு திரும்ப வரும். சரிதான், இன்று டிஜிட்டல் இந்தியா. எல்லோரும் ஃபோனில் பணத்தை ட்ரான்ஸ்ஷாக்ஷன் செய்கின்றோம். அப்படி மொபைல் போனில் பணத்தை ட்ரான்ஸ்ஷாக்ஷன் செய்யும் போதும் மனதில் நீங்கள் இந்த மந்திரத்தையும் நம்பரையும் சொல்லும்போது உங்களை விட்டு சென்ற பணம் மீண்டும் வருமானமாக உங்கள் கைக்கு திரும்பவும் வரும் என்பதே நம்பிக்கை.

இதையும் படிக்கலாமே: எந்த கலரில் கயிறு கட்டினால் அதிர்ஷ்டம் அடிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?

இந்த ஆன்மீகம் சொல்லும் எளிமையான பரிகாரத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பாருங்கள். உங்களுக்கே வருமானத்தில் வித்தியாசம் தெரியும். பிறகு நீங்களே நினைத்தாலும் இந்த மந்திரத்தை உச்சரிப்பதை விட மாட்டீங்க.

- Advertisement -