குபேரருக்கு இப்படி அர்ச்சனை செய்து வழிபட்டால் குபேர சம்பத்துகள் அனைத்தும் பெற்று நம் வீட்டில் செல்வ கடாட்சம் நிரம்பி இருக்கும்.

kubera poojai
- Advertisement -

வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையையும் நாம் கடந்து செல்வதற்கு நமக்கு பணம் என்ற ஒன்று கண்டிப்பாக தேவைப்படுகிறது. அந்த பணத்தை நாம் சம்பாதிப்பதற்கும், சம்பாதித்த பணத்தை தக்கவைத்துக் கொள்வதற்கும் பல வழிமுறைகளை நாம் மேற்கொண்டு வருகிறோம். அதோடு சேர்த்து சில ஆன்மீக ரீதியான பரிகாரங்களையும், வழிபாடுகளையும் செய்து வருகிறோம். இவை அனைத்துமே நம் வீட்டில் பணம் நிரம்பி இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே. அவ்வாறு என்றும் செல்வ கடாட்சம் நம் வீட்டில் இருப்பதற்கு குபேரரை எப்படி வணங்க வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

செல்வத்தை அருளக்கூடிய தெய்வங்களில் ஒருவராக இருக்கக் கூடியவர் திருப்பதி வெங்கடாசலபதி. அவருக்கே கடன் கொடுத்தவர் தான் குபேரர். அப்படிப்பட்ட குபேரரின் அருளை நாம் பெற வேண்டும் என்றால் அவரை நாம் நினைத்து வணங்க வேண்டும். அவருக்காக குபேர தீபம் என்று பலரும் வீட்டு பூஜை அறைகளில் தனியாக ஒரு தீபத்தை ஏற்றி வைப்பார்கள். அதோடு சேர்த்து இந்த வழிபாட்டையும் மேற்கொண்டால் கண்டிப்பான முறையில் குபேரரின் அருட்பார்வை நம் மீது படும்.

- Advertisement -

இந்த வழிபாட்டை நாம் மேற்கொள்வதற்கு நமக்கு குபேரரின் படம் தேவைப்படும். அல்லது குபேரனின் சிலை இருந்தாலும் அதை பயன்படுத்திக் கொள்ளலாம். லட்சுமி குபேர புகைப்படம் ஆக இருந்தால் அது மிகவும் சிறப்புக்குரியதாக இருக்கும். குபேரருக்கு தாமரைத் தண்டு திரியை பயன்படுத்தி நெய் தீபம் ஏற்ற வேண்டும். பிறகு அவரின் படத்திற்கு முன்பாக ஒரு பாத்திரத்தில் பன்னீரையும் தண்ணீரையும் சம அளவு ஊற்றி வைக்க வேண்டும். நிறைய ஊற்றாமல் முக்கால் பாகத்திற்கு மட்டும் ஊற்றினால் போதும்.

அவருக்கு வாசனை மிகுந்த மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக தாமரைப்பூ, மல்லிகைப்பூ மற்றும் மரிக்கொழுந்து இவை மூன்றும் இடம்பெற்றிருக்க வேண்டும். குபேரரின் அஷ்டோத்திரத்தை கூறியவாறு குபேரரின் படத்திற்கு நாம் பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். அவ்வாறு அர்ச்சனை செய்யும் பொழுது அர்ச்சனை செய்த அந்தப் பூக்கள் நாம் பாத்திரத்தில் நிரப்பி வைத்திருக்கும் பன்னீரில் விழுமாறு அர்ச்சனை செய்ய வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு செய்த பிறகு குபேரருக்கு டைமண்ட் கற்கண்டு நெய்வேத்தியமாக வைத்து, சாம்பிராணி தூபம் போட்டு, கற்பூர தீபாராதனை காட்ட வேண்டும். பிறகு அர்ச்சனை பூக்கள் விழுந்த பன்னீரை வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நம் வீட்டில் இருக்கக் கூடிய எதிர்மறை ஆற்றல்கள் விலகுவதோடு, நம் வீட்டின் அனைத்து இடங்களிலும் குபேரரின் அருள் நிரம்பி நம் வீடு செல்வ கடாட்சத்துடன் திகழும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: விடாமல் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கும் எதிரிகளை ஓட ஓட விரட்ட ஒன்பது சனிக்கிழமை அம்மனை இப்படி வழிபாடு செய்தாலே போதும். எதிரிகள் தொல்லை இல்லாமல் நிம்மதியாக வாழலாம்.

இந்த எளிமையான குபேரர் வழிபாட்டை நாம் தினமும் மேற்கொண்டால் நம் வீட்டில் செல்வநிலை விரைவிலேயே உயரும். முடியாதவர்கள் வெள்ளிக்கிழமை அன்று மட்டுமாவது இந்த குபேர பூஜையை செய்து செல்வ செழிப்புடன் வாழலாம்.

- Advertisement -