செல்வம் நிலைத்து இருக்க விநாயகர் வழிபாடு

silver pillaiyar
- Advertisement -

நோய் நொடிகள் இல்லாத வாழ்க்கை வாழ்வது என்பது ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக திகழ்கிறது. நாம் எவ்வளவுதான் பொருட்களை சம்பாதித்தாலும் நோய் நொடிகள் இல்லாத ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்தால் தான் நம்மால் அந்த செல்வத்தை நிலையாக தக்க வைத்துக் கொள்ள முடியும். அப்படி செல்வத்தை நிலையாக தக்கவைத்துக் கொள்ளவும் நோய் நொடிகள் எதுவும் அண்டாமல் இருக்கவும் விநாயகப் பெருமானை வழிபடும் முறையைப் பற்றிதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

முழு முதல் கடவுளான விநாயகர் பெருமானை வழிபடுபவர்களுடைய வாழ்க்கையில் எந்தவித தடைகளும் இருக்காது என்று கூறுவார்கள். அதனால் தான் இன்றைய காலம் வரை செய்யக்கூடிய அனைத்து விதமான சுப நிகழ்ச்சிகளிலும் முதலில் பிள்ளையாரை பிடித்து வைத்து வழிபாடு செய்யும் பழக்கம் இருக்கிறது. பிள்ளையார் வழிபாடு என்பது மிகவும் சிறப்பு மிகுந்த ஒன்றாக திகழ்கிறது. மிகவும் எளிமையாக செய்யக்கூடிய பிள்ளையாரின் வழிபாட்டை நாம் முழு மனதோடு செய்தால் கண்டிப்பான முறையில் அவரின் அருளால் நமக்கு அனைத்து விதமான நன்மைகளும் ஏற்படும். சரி நோய் நொடிகள் நீங்கவும் செல்வம் நிலைத்து இருக்கவும் செய்யக்கூடிய விநாயகர் வழிபாட்டை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை தினமும் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டிற்கு நமக்கு மிகவும் முக்கியமாக தேவைப்படுவது வெள்ளியால் செய்யப்பட்ட விநாயகர் சிலை. இது மிகவும் சிறிய அளவில் இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் வெள்ளியால் செய்யப்பட்ட விநாயகர் சிலை ஆக இருக்க வேண்டும். அதுதான் மிகவும் முக்கியமான ஒன்று. பொதுவாக நம்முடைய இல்லங்களில் மாலை பொழுதில் விளக்கேற்றி வழிபாடு செய்யும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. இவ்வாறு நாம் விளக்கேற்றும் பொழுது விளக்கேற்றி விட்டு குறைந்தபட்சம் அரை மணி நேரம் ஆவது விளக்கை எரிய விடுவோம். பிறகு விளக்கை குளிர வைத்து விடுவோம்.

இப்படி செய்யும்பொழுது வெள்ளி விநாயகரை வீட்டு பூஜை அறையில் ஒரு தாம்பாலத்தில் வைக்க வேண்டும். பிறகு அவருக்கு முன்பாக அகலில் ஒரு தீபத்தை ஏற்றி வைக்க வேண்டும். அடுத்ததாக பஞ்ச பாத்திரத்தில் சுத்தமான தண்ணீரை பிடித்து அதில் துளசியை போட்டு அவருக்கு முன்பாக வைத்து விட வேண்டும். இரவு நாம் படுக்கச் செல்வதற்கு முன்பாக பூஜை அறைக்கு சென்று விநாயகர் பெருமானுக்கு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாடு செய்துவிட்டு அந்த விளக்கை குளிர வைத்துவிட்டு பஞ்சபாத்திரத்தில் இருக்கும் தீர்த்தத்தை எடுத்து வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பருக கொடுக்க வேண்டும். நாமும் பருகி விட்டு பிறகு உறங்கச் செல்ல வேண்டும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: பணப்பிரச்சனையை விரட்டி அடிக்க தீப வழிபாடு

இப்படி அனுதினமும் நாம் செய்து வர நம் வீட்டில் யாருக்கும் எந்தவித நோய்களும் ஏற்படாது. அதோடு நாம் சம்பாதித்த செல்வங்கள் நம்மிடம் நிலையாக நிலைத்திருக்கும்.

- Advertisement -