மார்கழி முதல் நாளில் வாங்க வேண்டிய பொருள்கள்

markazhi things
- Advertisement -

மார்கழி மாதம் என்றாலே சிறப்புக்குரிய மாதம் தான். அதிலும் இந்த வருடம் மார்கழி மாதம் ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு உகந்த நாள். அதிலும் ஒன்று என்ற எண்ணும் சூரிய பகவானுக்கு உகந்தது. சூரிய பகவானுக்கு உகந்த இவை இரண்டும் ஒன்றாக வரக் கூடிய இந்த மார்கழி நமக்கு மேலும் விசேஷமானதாக உள்ளது.

இத்தகைய அற்புதமான இந்த நாளில் நாம் வாங்கக் கூடிய சில பொருட்கள் நம் வீட்டிற்கு சுபிஷத்தை தரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது என்னென்ன பொருள்கள் எந்த நேரத்தில் வாங்க வேண்டும். அதை எப்படி பூஜை செய்ய வேண்டும் என்பதையெல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

மார்கழி ஒன்றாம் நாள் வாங்க வேண்டிய பொருட்கள்

ஞாயிற்றுக்கிழமையில் மார்கழி மாதம் வந்திருப்பதால் சூரிய பகவானுக்கு உரிய சூரிய ஹோரையில் இந்த பொருட்களை வாங்குவது சிறப்பு. இந்த சூரிய ஹோரையானது காலை ஆறிலிருந்து ஏழு, மதியம் ஒன்றிலிருந்து இரண்டு, இரவு எட்டில் இருந்து ஒன்பது. இந்த மூன்று நேரங்களில் உங்களுக்கு வாய்ப்புள்ள நேரத்தில் வாங்கலாம். முடியாதவர்கள் அன்றைய நாளில் ராகு காலம் எமகண்டம் தவிர்த்து மற்ற நேரத்தில் வாங்கிக் கொள்ளுங்கள்.

முதலில் ஏலக்காவை வாங்க வேண்டும். ஏலக்காய் மகாலட்சுமி தாயார் வாசம் செய்யும் பொருளாக கருதப்படுகிறது. அத்தகைய ஏலக்காவை அன்றைய தினம் வாங்கி பூஜையறையில் வைத்து மகாலட்சுமி தாயாரை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த ஏலக்காவை நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள். இந்த ஒரு வழிபாடு உங்கள் வீட்டில் என்றென்றைக்கும் பணத் தட்டுப்பாடு இல்லாமல் பண வரவை தாராளமாக்கும்.

- Advertisement -

அடுத்து ஞாயிற்றுக்கிழமை அன்று பஞ்சமி திதியும் சேர்ந்து வந்திருப்பதால் வாராகி அன்னைக்கு உகந்த மாதுளை பழத்தையும் தேனையும் வாங்க வேண்டும். ஒரு கிண்ணத்தில் மாதுளை பழ முத்துக்களை உதிர்த்து போட்டு அதில் தேனை கலந்து அன்னைக்கு நெய்வேத்தியமாக வைத்த பிறகு வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிடுங்கள். இதனால் வீட்டில் செல்வ வளம் பெறுவதோடு வீடு சுபிட்சமாக இருக்கும்.

இதற்கு அடுத்து நாம் வாங்க வேண்டிய முக்கியமான பொருள் கோதுமை. சூரிய பகவானுக்கு உகந்த இந்த பொருளை ஞாயிற்றுக்கிழமை வந்திருக்கும் மார்கழி ஒன்றாம் நாள் வாங்கும் போது நம் வீட்டில் உணவிற்கு பஞ்சம் ஒரு போதும் வராமல் இருக்கும். அது மட்டும் இன்றி பணவரவையும் தாராளமாக்கி கொடுக்கும் ஆரோக்கியமும் மேம்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இதையும் படிக்கலாமே: வீடு வளம் பெற மார்கழி மாத வழிபாடு

சிறப்பு வாய்ந்த இந்த மார்கழி மாதத்தின் முதல் நாளில் இந்த பொருள்களில் ஏதேனும் ஒன்றை வாங்கினாலும் சிறப்பு தான். அனைத்தையும் வாங்க முடியும் என்றால் அனைத்தையும் கூட வாங்கலாம். இது அவரவர் விருப்பத்தை பொறுத்து. ஆனால் ஏதாவது ஒன்றை வாங்கி பூஜை அறையில் வைத்து வணங்கிய பிறகு பயன்படுத்துங்கள். உங்கள் குடும்பத்திற்கு நல்ல சுபிட்சத்தை தரும் என்ற இந்த தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -