வீட்டில் இல்லை என்ற வார்த்தையை, அடியோடு அழிக்கக்கூடிய சக்தி இந்த ஒரு தீபத்திற்கு உண்டு. வாரத்தில் ஒரு நாள் இந்த விளக்கை ஏற்றினால், தெய்வத்தின் ஆசிர்வாதம் நிறைவாக கிடைக்கும்.

cash-deepam-vilakku
- Advertisement -

நிம்மதி இல்லை, தூக்கம் இல்லை, சந்தோஷம் இல்லை, பணம் இல்லை, சமையல் அறையில் தன தானியம் இல்லை, அதாவது அரிசி பருப்பு எதுவுமே வீட்டில் இல்லை என்று எப்போதுமே சொல்லிக் கொண்டே இருக்கக் கூடாது. இந்த ‘இல்லை’ என்ற வார்த்தை உங்களுடைய வீட்டில், எதையுமே இல்லாமலேயே மாற்றிவிடும். எதுவுமே இல்லை என்றாலும், இந்த வார்த்தையை அடிக்கடி நீங்கள் பயன்படுத்தாதீர்கள்.

இப்படி திரும்பத் திரும்ப இல்லை என்று சொல்லிக் கொண்டே இருந்தால் இருப்பதும் இல்லாமல் போவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆகவே எல்லாம் இருக்கிறது என்ற மனநிறையோடு வாழ பழகிக் கொள்வதுதான் நல்லது. சரி இப்படி நம்மிடம் இல்லாத செல்வ வளத்தை, நிம்மதியை சந்தோஷத்தை வர வைப்பதற்கு தாந்திரீகத்தில் என்ன பரிகாரம் செய்யலாம்.

- Advertisement -

செல்வக் கடாட்சம் பெருக செம்பருத்தி இலை தீபம்:
கடவுளை வேண்டிக் கொண்டு ஆன்மீகம் சார்ந்த படி தாந்த்ரீகத்தில் ஒரு எளிமையான பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த தீபத்திற்கு பெயர் செம்பருத்தி இலை தீபம். இந்த தீபத்தை எப்படி ஏற்றுவது. வாரத்தில் ஒரு நாள் இந்த தீபத்தை வீட்டில் ஏற்றலாம். செவ்வாய், வெள்ளி, திங்கள் உங்கள் விருப்பம் போல எந்த கிழமை உங்களுக்கு சௌகரியமாக இருக்குமோ அந்த கிழமையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

ஒரு அழகான செம்பருத்தி இலைக்கு மேலே கொஞ்சமாக தேங்காய் எண்ணெயை தடவி, அதன் மேலே ஒரு மண் அகல் விளக்கை வைத்து, நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி, வெள்ளை நிறத்தில் பஞ்சு திரி போட்டு, விளக்கு ஏற்றி வைத்து பூஜை அறையில் வைத்து விடுங்கள். சாதாரணமாக உங்களுடைய வீட்டில் ஏற்றும் மற்ற விளக்குகளையும் ஏற்றலாம். கூடவே இந்த ஒரு விளக்கையும் ஏற்றி வைத்துவிட்டு இந்த விளக்கின் முன்பு அமர்ந்து குலதெய்வத்தை நினைத்து, மனம் உருகி உங்களுடைய வரங்களை கேளுங்கள்.

- Advertisement -

மனதார பிரார்த்தனையை முடித்துவிட்டு, சின்னதாக ஒரு கற்பூர ஆரத்தி காண்பித்து, பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். எண்ணெய் தீரும் வரை அகல் விளக்கு எரிந்து முடியட்டும். அதன் பிறகு மறுநாள் அந்த செம்பருத்தி பூ இலையை கால்படாத இடத்தில் போட்டு விடுங்கள். அடுத்த வாரம் மீண்டும் புதியதாக செம்பருத்தி இலையில் அதே மண் அகல் விளக்கை சுத்தம் செய்து வைத்து தீபம் ஏற்றலாம்.

இந்த விளக்கிற்கு முன்பு மனதார நம்பிக்கையுடன் என்ன வரம் கேட்டாலும் அது உடனே கிடைக்கும். உங்களுடைய தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்ய அந்த தெய்வத்தை வீட்டிற்குள் அழைத்து வரும் அளவிற்கு சக்தி இந்த தீபத்திற்கு உண்டு. அளவில்லாத செல்வம் வேண்டுமா, மன நிறைவான வாழ்க்கை வேண்டுமா, சந்தோஷத்தை தொலைத்து விட்டு கஷ்டப்படுகிறீர்களா, கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இல்லையா, குழந்தைகள் சொல் பேச்சு கேட்கவில்லையா, இப்படி பணம் அல்லாது மற்ற விஷயங்களை பூர்த்தி செய்யவும் இந்த வழிபாடு கை கொடுக்கும். மற்ற விஷயம் எல்லாம் என்னிடம் இருக்கிறது, ஆனால் இந்த பணம் மட்டும்தான் கஷ்டம் கொடுக்கிறது வறுமையில் வாடி வதங்குபவர்களும் இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

இதையும் படிக்கலாமே: 21 நாட்கள் இந்த பூஜையை செய்ய வேண்டும் என்று தொடங்கிய நாள் முதலே, உங்களுடைய பண கஷ்டங்கள் தீரும். அவ்வளவு அற்புதம் வாய்ந்த, பல பேருக்கு பலன் கொடுத்த, மகா பெரியவா அருளிய இந்த வழிபாடு பற்றி உங்களுக்கு தெரியுமா?

சில பேர் வீட்டில் தெய்வ அனுகிரகமே இருக்காது. அதுதான் முதலில் சொல்லியது போல, எதுவுமே இல்லாத வீட்டில் வறுமை மட்டும் தான் குடி கொண்டிருக்கும். அப்படிப்பட்ட வறுமை என்னும் இருட்டை ஒழித்து இறை அருளை முழுமையாக பெற்று தரக்கூடிய இந்த தீபத்தின் மகிமையை ஒரு சில நாட்களிலேயே நீங்கள் புரிந்து கொள்ள முடியும். முயற்சி செய்து பாருங்கள். மூன்று வாரம் தொடர்ந்து இந்த தீபத்தை ஏற்றினாலே முன்னேற்றம் தெரிந்து விடும்.

- Advertisement -