சொந்தமாக வீடு நிலம் மற்றும் உங்கள் ஆசைகள் எதுவாக இருந்தாலும் இந்த ஆலயத்தில் உள்ள மயிலிடம் பிரார்த்தனை செய்தால் போதும். நீங்கள் நினைத்த யாவும் நினைத்ததை விட சீக்கிரத்தில் நிறைவேறும்.

murugan peacock
- Advertisement -

எல்லோருக்குமே சொந்த வீட்டில் வாழ வேண்டும், சொந்தமாக நிலம் வாசல் சொத்து இருக்க வேண்டும், பணம் காசு சேர்க்க வேண்டும், வசதியாக வாழ வேண்டும், என ஆசைகள் இருக்கத் தான் செய்யும். இதை தவறு என்றும் சொல்லிவிட முடியாது. ஆனால் இதையெல்லாம் வேண்டும் என ஆசைப்படும் அளவிற்கு நம்முடைய அளவிற்கு அதற்கான முயற்சியும் வேண்டும். அந்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும் வாய்ப்பினை தரும் ஒரு அற்புதமான ஆலயத்தின் சிறப்பை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் வழிபாடு
நம்முடைய இந்த ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றக் கூடிய கடவுளாக விளங்குபவர் கந்த கடவுள். வீடு நிலம் வாசல் இது தொடர்பான வேண்டுதல் என்றாலே அது செவ்வாய் கிரகம் தான். இந்த கிரகத்திற்கு அதிபதியான முருகப்பெருமானை வழிபடும் போது இவையெல்லாம் தானாக அமையும். இந்த ஆலயத்தை பொறுத்த வரையில் முருகப்பெருமானை வழிபட்ட பின்பு அந்த ஆலயத்தில் இருக்கும் அவருடைய வாகனமான மயிலிடம் வேண்டுதல் வைக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

இப்படி நம்முடைய ஆசைகளை நிறைவேற்றக் கூடிய ஆலயம் சிறுவாபுரியில் உள்ள முருகர் கோவில். இந்த கோவிலுக்கு தொடர்ந்து 11 வாரங்கள் சென்று நம்முடைய வேண்டுதலை வைக்கும் போது அது விரைவில் நிறைவேறும். பொதுவாக இந்த ஆலயத்திற்கு வீடு தொடர்பான பிரச்சனைகளுக்கு செல்வோர் அதிகம். ஆனால் நம்முடைய வாழ்வில் எல்லா வித பிரச்சனைகளும் தீர்ந்து ஆசைகள் நிறைவேறவும் இந்த ஆலய வழிபாட்டை செய்யலாம்.

இதற்கு இந்த ஆலயத்தில் உள்ள முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமையில் செவ்வாய் ஹோரையில் தரிசிப்பது சிறப்பு. இந்த ஆலயம் முழு நேரமும் திறந்திருப்பதால் காலை மதியம் என இரண்டு வேளையில் வரும் செவ்வாய் ஹோரையில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தரிசிக்கலாம். இவரை தரிசித்து நம்முடைய வேண்டுதலை வைத்த பிறகு ஆலயத்தை சுற்றி வந்து அங்கிருக்கும் மயிலிடம் நம்முடைய வேண்டுதல், ஆசைகள் அனைத்தும் நிறைவேற வேண்ட வேண்டும்.

- Advertisement -

மயிலிடம் வேண்டுதல் வைக்கும் பொழுது எனக்கு இதெல்லாம் ஆசையாக இருக்கிறது என கேட்க வேண்டும். இந்த முறையில் கேட்கும் போது நம்முடைய வேண்டுதல் பிரபஞ்சத்தை சென்றடைந்தது விரைவில் நிறைவேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு இந்த ஆலயத்தில் குறைந்தது ஒரு மணி நேரமாவது அமர்ந்திருக்க வேண்டும். 11 வாரங்கள் உங்களுடைய வேண்டுதல் முடிந்த பிறகு கடைசி வாரத்தில் கோவிலில் அன்னதானம் செய்ய வேண்டும். அது உங்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு செய்யலாம். இந்த 11 வாரங்களும் முடியும் முன்னரே உங்களுடைய வேண்டுதல் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் நிச்சயம் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இதையும் படிக்கலாமே: உங்க உடலில் நெகடிவ் வைப்ரேஷன் இருக்குன்னு நினைக்கிறீர்களா? உங்களுக்கு தெரியாமல் போடப்பட்ட சூழ்ச்சி அவிழ என்ன செய்யனும் தெரியுமா?

இந்த சிறுவாபுரி முருகன் வழிபாட்டையும், மயில் வழிபாட்டையும் முறையாக தொடர்ந்து செய்து உங்களுடைய பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து நிலம், வீடு, மனை, சொத்து என சகல சௌபாக்கியத்தோடு நிம்மதியாக வாழ எல்லாம் வல்ல முருகப்பெருமானை அருளை பெற வேண்டி கொள்வோம்.

- Advertisement -