வீடு, நிலம், வாகனம் வாங்குவதற்கு தடைகள் இருக்கிறதா? அவை நீங்குவதற்கு உங்கள் இல்லத்தில் செய்ய வேண்டிய ராகு கால பரிகாரம்

ragu-parigaram
- Advertisement -

இன்றைய சமூகத்தில் அந்தஸ்து உள்ள மனிதர்கள் மட்டுமே மற்றவர்களால் மதிக்கப்படுகின்றனர். பணத்தை வைத்து தான் மனிதர்கள் ஒருவரை ஒருவர் ஏற்றத் தாழ்வுடன் பார்த்துக்கொள்கின்றனர். வீடு, வாகனம், சொத்துக்கள் உள்ளவரை உயர்ந்தவனாகவும், இவற்றில் ஏதும் இல்லாதவரை மிகவும் தாழ்வாகவும் பார்க்கின்றனர். எனவே பலருக்கும் தான் வாகனம் வாங்க வேண்டும், வீடு வாங்கவேண்டும், நிலம் வாங்க வேண்டும் என்ற ஆசைகள் இருக்கும். இவ்வாறான ஆசைகளுக்கு நிறைவேற முயற்சி செய்து கொண்டிருக்கும் பொழுது அவற்றை தவிர்க்கும் வகையில் ஏதேனும் பிரச்சனைகள் வந்து விடும். இதன்மூலம் நீங்கள் செய்ய வேண்டும் என்று நினைத்த காரியத்தை செய்ய முடியாமல் போய்விடும். எனவே இவ்வாறான ஆசைகள் எந்தவிதத் தடையுமின்றி நிறைவேற வீட்டில் இருந்தபடியே ராகு காலத்தில் இந்த விளக்கு ஏற்றுவதன் மூலம் நல்ல பலன் பெற முடியும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

car

ஒரு சிலர் பிறக்கும் பொழுதே வசதி வாய்ப்புடன், சொத்துக்களுடன் இருக்கும் குடும்பத்தில் பிறந்து செல்வச் செழிப்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பார்கள். ஆனால் அனைவருக்கும் இவ்வாறு வசதி நிறைந்த வாழ்க்கை கிடைப்பதில்லை. ஒவ்வொருவரும் உழைக்கின்ற கடின உழைப்பின் மூலம் தான் உயர வேண்டிய நிலைமை இருக்கிறது.

- Advertisement -

இவர்களின் வருமானம் குடும்பத்தை நடத்துவதற்கு போதுமானதாக இருக்கின்ற நிலைமையில் இவர்களுக்கு சொந்த வீடு வாங்குவதும், வாகனம் வாங்குவதும் கனவாகவே இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கான நல்ல நேரம் வருகின்ற பொழுது தான் இவ்வாறான ஆசைகள் நிறைவேறுகின்றன.

cash

ஒவ்வொருவருடைய ஜாதகத்தின் படி அவர்களின் கால சூழ்நிலை சரியாக இல்லை என்றாலும், ஜாதகத்தில் ஏதேனும் சுழி சரியில்லை என்றாலும் இவர்களுக்கான வாழ்க்கை மிகவும் துன்பத்தை கொடுக்கிறது. எனவே முதலில் இவ்வாறான சூழ்நிலையை சரி செய்து, அதன் பின்னரே வீடு, நிலம் வாங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

- Advertisement -

இதற்காக தினமும் ராகு கால நேரத்தில் வீட்டின் பூஜை அறையில் காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றி வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்களை சுற்றியுள்ள கெட்ட நேரமும், கால சூழ் நிலைகள் சரியில்லாமல் இருந்தாலும் இந்த ராகு கால தீபத்தை ஏற்றி துர்கை அம்மனை மனதார வேண்டி வழிபடுவதன் மூலம் அவற்றின் தாக்கங்கள் குறைய ஆரம்பிக்கும்.

jadhagam

இதனை தொடர்ந்து செய்து கொண்டே வரும் பொழுது, ஒரு மாதம் அல்லது மூன்று மாதம் கழித்து, உங்கள் வீட்டில் பூஜை அறையில் முகம் பார்க்கும் கண்ணாடியை வைக்க வேண்டும். அதற்காக ஒரு புதிய கண்ணாடி வாங்கி, அதனை சுற்றியுள்ள பிரேம்களை நீக்கி விட்டு, வெறும் கண்ணாடியை மட்டும் தரையில் படியும்படி வைக்க வேண்டும். அதாவது முகம்பார்க்கும் பக்கம் மேல் நோக்கி இருக்க வேண்டும்.

deepam

பின்னர் இந்தக் கண்ணாடியின் மீது அரச இலையை வைத்து, அதன் மீது ஒரு அகல் விளக்கை வைத்து, நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றி, கண்களை மூடி, கைகளைக் குவித்து, உங்களுக்கு வேண்டிய ஆசைகளை வேண்டிக்கொள்ள வேண்டும். விரைவில் வீடு வாங்கவேண்டும், வாகனம் வாங்க வேண்டும் அல்லது நிலம் வாங்க வேண்டும் இவ்வாறு மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வர நினைத்த காரியம் விரைவில் நிறைவேறும்.

- Advertisement -