சொத்து பிரச்சனை தீர்க்கும் பிள்ளையார் வழிபாடு

pillaiyar1
- Advertisement -

சில குடும்பங்களில், பல வருடங்களாக கோர்ட் கேஸ் வழக்குகள் நடக்கும். சொத்து பிரச்சனை நடக்கும். ஒரு சொத்தின் மீது வழக்கு நடக்கும் போது யாராலும் அதை அனுபவிக்க முடியாது, பராமரிக்கவும் முடியாது. அங்காளி பங்காளிகள், சொந்தக்காரர்கள், நினைப்பாங்க இந்த சொத்து யார் கைக்கும் போகக்கூடாது.

இப்படியே வழக்கிலிருந்து, அழிந்து போக வேண்டும், தனக்கு ஒரு கண் போனால், எதிராளிக்கு இரண்டு கண் போக வேண்டும் என்று நினைப்பவர்களும் இன்னும் இந்த பூமியில் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படிப்பட்ட இக்கட்டான சிக்கலில் இருந்து வெளிவர, உங்களுடைய சொத்தை பத்திரமாக காப்பாற்ற எந்த கடவுளை எப்படி வழிபாடு செய்வது. ஆன்மீகத்தில் இதற்கு ஒரு நல்ல வழிபாடு இருக்குதுங்க. அதைப் பற்றிய தகவலைத்தான் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

சொத்து பிரச்சனை தீர பிள்ளையார் வழிபாடு

இந்த வழிபாட்டிற்கு நமக்குத் தேவையான பிள்ளையார் மண்ணால் செய்யப்பட்ட பிள்ளையார். சிலபேர் சொல்லுவாங்க. மண்ணில் செய்யப்பட்ட பிள்ளையாரை வீட்டில் வைத்து, பூஜை அறையில் வைத்து வழிபடக்கூடாது என்று. அதாவது விநாயகர் சதுர்த்தி சமயத்தில் மட்டும்தான் மண் பிள்ளையார் சிறப்பானது என்று சொல்லுவாங்க. ஆனால் இந்த சொத்து பிரச்சனையை ஒரு முடிவுக்கு கொண்டு வர, இந்த மண் பிள்ளையார் தான் ஒரே தீர்வு.

மண்ணால் செய்யப்பட்ட பிள்ளையாரை வாங்கி பூஜை அறையில் வைக்கவும். வர்ணம் பூசி இருக்கக் கூடாது. அந்த பிள்ளையாரை ஒரு மனை பலகையின் மீது பூஜை அறையில் வைத்து, தினமும் அந்த பிள்ளையாருக்கு விளக்கு ஏற்றி, வாழைப்பழம், உலர் திராட்சை பேரிச்சம்பழம் இப்படி ஏதாவது ஒரு நெய்வேத்தியம் வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

தினமும் அந்த பிள்ளையாருக்கு முன்பாக அமர்ந்து உங்களுக்கு இருக்கக்கூடிய சொத்து பிரச்சனையை சொல்லி அந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். தொடர்ந்து இந்த வழிபாட்டை செய்யுங்கள். ஒரு சில மாதங்களில் நிச்சயம் உங்களுடைய கோர்ட்டு கேஸ் சொத்து பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்துவிடும்.

பிறகு இந்த பிள்ளையாரை கொண்டு போய் கடலிலோ அல்லது உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் ஏரி குளங்களிலோ கரைத்து விட்டு வந்து விடுங்கள். அவ்வளவுதான் இந்த வழிபாடு. உங்களுடைய பிரச்சனைக்கு நிச்சயம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கக் கூடியது. இந்த வழிபாட்டை என்னால் செய்ய முடியாது இதற்கான வாய்ப்பே இல்லை என்பவர்கள் மட்டும் இரண்டாவது வழிபாடாக சங்கட சதுர்த்தி அன்று விநாயகர் கோவிலுக்கு சென்று செவ்வரளி பூக்களை வாங்கி கொடுத்து வழிபாடு செய்யுங்கள்.

- Advertisement -

ஒரு சதுர்த்தி இதை செய்தால் உடனடியாக பலன் இருக்காது. தொடர்ந்து வரும் எல்லா சதுர்த்தி திதியில் இந்த வழிபாட்டை மேற்கொள்ளும் போது நிச்சயம் உங்களுடைய சங்கடம் தீரும். ஆனால் இந்த இரண்டு வழிபாடுகளில் முன்னுரிமை, மண் பிள்ளையாருக்கு தான் இருக்கிறது. ஆகவே வாய்ப்பு உள்ளவர்கள் மண் பிள்ளையார் வழிபாட்டை செய்வது நல்லது.

இதையும் படிக்கலாமே: குபேர பஞ்சமி வழிபாடு

மண் பிள்ளையாருக்கு வாய்ப்பே இல்லை என்பவர்கள் மட்டும் இந்த சங்கடகர சதுர்த்தி வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் நல்லது நடக்கும் என்ற தகவலோடு ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -