இன்று சுக்கிர ஜெயந்தி. சுக்கிர யோகம் பெற வீட்டில் எப்படி விளக்கு ஏற்றுவது.

sukiran1
- Advertisement -

ஒருவர் சந்தோஷமாக இருக்கும்போது நாம் எந்த வரத்தை கேட்டாலும் அவரிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம். நம்முடைய அப்பா அம்மா கணவர் யார் சந்தோஷமாக இருக்கும்போதும் காசு பணம் கேட்டால் உடனே கொடுத்து விடுவார்கள் அல்லவா. அதே போல் தான் இன்று சுக்கிரன் சந்தோஷமாக இருக்கக்கூடிய நாள். அப்படி என்ன நாள். சுக்கிர ஜெயந்தி என்றால் என்ன. சுக்கிரனுக்கு இன்று பிறந்தநாள்.

இன்று சுக்கிரனுக்கு பிடித்த விஷயங்களை நாம் பூஜை அறையில் செய்து விளக்கு ஏற்றி வைத்துவிட்டு அவருடைய நாமத்தைச் சொல்லி பணம் கேட்டுப் பாருங்களேன். உங்களுக்கு செல்வ செழிப்பை கோடி கோடியாக கொட்டிக் கொடுப்பார். இன்று மாலை உங்களுடைய வீட்டில் சுக்கிர தீபம் ஏற்றுவது எப்படி. ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

சுக்கிர ஜெயந்தி வழிபாடு

இன்று மாலை பூஜை அறையை சுத்தம் செய்து பூக்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். எல்லோர் வீட்டிலும் மகாலட்சுமியின் திருவுருவப்படம் இருக்கும். அதற்கு வெள்ளைப் பூக்களை வாங்கி அலங்காரம் செய்யவும். குறிப்பாக மல்லி பூ ஜாதி மல்லி பூவை வாங்கிக் கொள்ளுங்கள். வாசம் நிறைந்த பூ, வாசம் நிறைந்த மலர்கள் சுக்கிரனை வசியம் செய்ய கூடியவை.

கொஞ்சமாக ஒரு கைப்பிடி அளவு வெள்ளை மொச்சை தேவை. வெள்ளி விளக்கு, சுத்தமான பசுமை தேவை. ஒரு சின்ன தாம்பூல தட்டில் மொச்சையை பரப்பி அதன் மேலே வெள்ளி விளக்கை வைத்து, சுத்தமான நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு சுக்கிர பகவானுக்கு ஒரு நெய்வேதியம் வையுங்கள்.

- Advertisement -

வெள்ளை நிறத்தில் கற்கண்டு பால் பாயாசம் எது வேண்டுமென்றாலும் வைக்கலாம். விளக்கு ஏற்றி வைத்துவிட்டு மனம் உருகி ‘ஓம் சுக்கிர பகவானே போற்றி’ என்ற மந்திரத்தை 27 முறையில் இருந்து 108 முறை உச்சரிக்கலாம். 108 முறைக்கு மேலே எத்தனை முறை உச்சரித்தாலும் தவறு கிடையாது.

இறுதியாக கற்பூர ஆராத்தியை காண்பித்து சுக்கிர பகவானையும் குல தெய்வத்தையும் மனதார நினைத்து உங்களுடைய வேண்டுதலை சொல்லி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். பிறகு பிரசாதத்தை எடுத்து வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் சாப்பிடக் கொள்ளலாம். விளக்குக்கு அடியில் மொச்சை வைத்து ஏற்றினீர்கள் அல்லவா.

- Advertisement -

பூஜை முடிந்த பிறகு, அதாவது இன்று இரவு முழுவதும் அந்த மொச்சை பூஜை அறையில் இருக்கட்டும். மறு நாள் காலை அந்த மொச்சையை எடுத்து ஒரு வெள்ளை துணியில் வைத்து முடிச்சாக கட்டி பணம் வைக்கும் பெட்டியில் வைத்து விடுங்கள். மொச்சை ஒரு சில நாட்களில் வண்டு பிடித்து விடும்.

ஒரு மாதம் கழித்து இந்த மொச்சையை எடுத்து காக்கை குருவிகளுக்கு இரையாக போட்டு விடுங்கள். அவ்வளவுதான். எளிமையாக செய்யப்படும் இந்த சின்ன வழிபாடு உங்களுக்கு பணவசாயத்தை தரும். நீங்கள் கேட்ட வரங்களை சுக்கிர பகவான் உடனடியாக உங்களுக்கு கொடுத்து விடுவார். சில பேர் வீட்டில் வெள்ளி விளக்கு இல்லை என்று சொல்லுவீர்கள்.

இன்றைய தினம் வெள்ளியில் ஒரு சின்ன காயின் ஆவது காசு கொடுத்து வாங்குவது அவ்வளவு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். முடிந்தால் ஒரு வெள்ளி விளக்கு வாங்குங்கள். இல்லை என்றால் மண் அகல் விளக்கில் இந்த பரிகாரத்தை செய்யலாம். சீக்கிரம் வெள்ளி விளக்கு வாங்கக்கூடிய யோகம் உங்களுக்கு கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: ராகு கேது பெயர்ச்சி 2023-2025 பரிகாரங்கள்

வாரம் தோறும் வெள்ளிக்கிழமை, வெள்ளி விளக்கு ஏற்றி சுக்கிர பகவானை வழிபாடு செய்து வர பணக்கஷ்டம் எல்லாம் தீரும் என்பது நம்பிக்கை. மேல் சொன்ன வழிபாட்டில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -