எதிர்பாராத பண வரவைப் பெற சுக்கிர பகவான் வழிபாடு

sukkiran
- Advertisement -

எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத பண தேவையானது நிச்சயம் எல்லா மனிதருக்கும் தேவைப்படும். அந்த சமயத்தில் யாரிடம் ஆவது கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அப்படி இல்லை என்றால் ஏதாவது நகையை அடமானம் வைத்து பணம் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அப்படியும் இல்லை என்றால் சொத்து பத்திரம் ஏதாவது அடமானத்தில் வைத்து பணத்தை தயார் செய்வோம்.

ஆனால் எல்லாம் இருந்தும் சில பேருக்கு அவசர தேவைக்கு கைக்கு பணம் வந்து சேராது. இப்படி இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி இருக்கும் போது அவசர தேவைக்கு பணம் கிடைக்க சுக்கிர பகவானையும் நாம கொஞ்சம் வழிபாடு செய்யணும். அவசர தேவைக்கான பணம் உடனடியாக நம் கைக்கு வந்து சேர செய்ய வேண்டிய அந்த பரிகாரம் என்ன. ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

சுக்கிர மேட்டை ஆக்டிவ் செய்ய

நம்முடைய இடது கையில் கட்டை விரலுக்கு கீழ் பக்கம் கொஞ்சம் வீங்கியது போல இருக்கு அல்லவா. அதுதான் சுக்கிர மேடு. அந்த இடத்தை ஆக்டிவ் செய்தால் நமக்கான பணம் நம்மை வந்து சேரும். அந்த சுக்கிரமேட்டில் வாசம் நிறைந்த ரோஜா இதழ்களை வைக்கவும். பன்னீர் ரோஜா கிடைத்தால் அதை வாங்கிக்கோங்க. அதிலிருந்து ஓரிரு இதழை பறித்து கொஞ்சம் பன்னீரில் முக்கி எடுத்து, இடது கை சுக்கிர மேட்டின் மீது லேசாக அழுத்தம் கொடுத்து பிடித்துக் கொள்ளுங்கள்.

உங்கள் இடது கை முழுவதும் ரோஜா இதழின் வாசம் பரவி இருக்கும். கட்டாயம் பன்னீர் ரோஜா தான் இந்த பரிகாரத்துக்கு பயன்படுத்தனும். பன்னீர் ரோஜா கிடைக்கவில்லை எனும் பட்சத்தில், நல்ல வாசனை வரக்கூடிய ரோஸ் எசன்ஸ் வாங்கி பயன்படுத்தலாம். அந்த எசன்ஸை, இடது உள்ளங்கை சுக்கிர மேடில் பூசிக்கொண்டு, வலது கை கட்டை விரலை அந்த சுக்கிர மேட்டின் மீது லேசாக வைத்து, ‘ஓம் சுக்கிராய நமஹா’ என்ற மந்திரத்தை நம்பிக்கையோடு 108 முறை சொல்லுங்கள்.

- Advertisement -

இந்த மந்திரத்தை சொல்லி சுக்கிர பகவானை வழிபாடு செய்து இந்த சுக்கிர மேட்டினை ஆக்டிவ் செய்யும் போது, கட்டாயம் பணம் வந்துவிடும். முழு நம்பிக்கையில் இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு, நிச்சயம் பணம் தானாக தேடி வரும். இதை ஒருநாள் அவசர தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: துன்பங்கள் தீர பௌர்ணமி பரிகாரம்

தினமும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் இந்த சுக்கிர மேட்டை நீங்கள் மேல் சொன்ன முறைப்படி பலப்படுத்தும் போது உங்களுக்கான வருமானம் என்பது சீராக தொடங்கும். வறுமை என்பது சீராக உங்களை விட்டு வெளியேற தொடங்கி விடும். இது ஒரு எளிமையான ஆன்மீகம் சொல்லும் தாந்த்ரீக பரிகாரம். சுக்கிரனை வசியம் செய்யக்கூடிய பரிகாரம். தேவைப்படுபவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -