நாளை நடக்கவிருக்கும் சூரிய கிரகணத்தில் அதிர்ஷ்டம் பெற போகும் 3 ராசிக்காரர்கள்.

surya-grahanam
- Advertisement -

இந்த வருடத்தின் கடைசி சூரிய கிரகணமானது நாளை நடக்கவிருக்கிறது. நாளைய தினம் மஹாலயா அமாவாசையோடு இந்த சூரிய கிரகணம் சேர்ந்து வந்திருக்கிறது. இந்த சூரிய கிரகணம் எப்போது நடைபெறப்போகிறது, இந்த கிரகணம் நம்முடைய இந்தியாவில் தெரியுமா தெரியாதா? இந்த சூரிய கிரகணத்தால் நன்மை அடையக்கூடிய ராசிக்காரர்கள் எவை என்பதை பற்றிய ஆன்மீகம் சொல்லும் ஜோதிட ரீதியான சில தகவல்களை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

சூரிய கிரகண தேதி மற்றும் நேரம்

அக்டோபர் 14ஆம் தேதி 2023 இந்திய நேரப்படி இரவு 8.34 மணிக்கு தொடங்கும் சூரிய கிரகணமானது, நள்ளிரவு 2.25 வரை நீடிக்கும். கிரக நேரம் இரவு நேரத்தில் இருப்பதால் இந்த சூரிய கிரகணம் நம்முடைய இந்தியாவில் தெரியாது. அதனால் நாளைய தினம் நாம் எப்போதும் போல முன்னோர்கள் வழிபாட்டை செய்யலாம். திதி தர்ப்பண காரியங்களில் எந்த குறையும் வைக்காதீங்க.

- Advertisement -

அதேபோல நாளைய தினம் உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வதும் சிறப்பு மிக்க பலனை கொடுக்கும். சரி இந்த சூரிய கிரகணமானது இந்தியாவில் தெரியாமல் போனாலும், கிரகணத்தின் மூலம் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் இருப்பதாக ஜோதிடத்தில் சொல்லப்பட்டுள்ளது. அந்த 3 ராசிக்காரர்கள் என்னென்ன அவர்களுக்கு எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கப் போகிறது என்பதையும் இப்போது தெரிந்து கொள்வோம்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய கிரகணத்தின் மூலம் நிறைய நன்மைகள் நடக்கப் போகின்றது. உங்களுடைய வாழ்க்கையில் இதுநாள் வரை இருந்து வந்த பணப் பிரச்சனைகள் எல்லாம் ஒவ்வொன்றாக சரியாகும். தொழிலில் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். வாங்கிய கடனை எல்லாம் திருப்பிக் கொடுக்கக்கூடிய நேரம் காலம் அமைந்து வரும். வேலை செய்யும் இடத்திலிருந்து வந்த அவமானங்கள் எல்லாம் வெற்றியாக மாறிவிடும். உங்களுக்கு மதிப்பு கொடுக்காதவர்கள் கூட இனி மதிப்பு நடந்து கொள்வார்கள். உங்களுடைய மதிப்பு மரியாதையும் உயர்ந்து நீங்கள் ஒரு படி அந்தஸ்தில் உயர்ந்து நிற்பீர்கள்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய கிரகணம் அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கப் போகின்றது. உங்களுக்கான வேலை பளுவானது அதிகரித்துக் கொண்டே செல்லும். ஆனால் அதற்கு ஏற்ற சம்பள உயர்வும், பதவி உயர்வும் உங்களைத் தேடி வரும். அதாவது நீங்கள் மரியாதைக்குரிய நபராக மாறிவிடுவீர்கள். அதன் மூலம் உங்களுக்கான பொறுப்புகளும் அதிகரிக்கும்.

உங்களுக்கான சம்பளமும் அதிகரிக்க போகின்றது. உழைத்தால்தானே நல்ல ஊதியம் கிடைக்கும். ஆகவே பொறுப்புகளை அலட்சியப்படுத்தாமல் ஏற்றுக்கொள்ளுங்கள். வாய்ப்புகளை தவற விட்டவர்களுக்கு வாழ்க்கையில் சின்ன சின்ன ஏமாற்றம் வரலாம். ஆகவே எக்காரணத்தைக் கொண்டும் நீங்கள் வரக்கூடிய வாய்ப்புகளை வேண்டாம் என்று தட்டிக் கழிக்க கூடாது. வெற்றியோ தோல்வியோ ஒரு கை மோதிப் பார்க்கலாம்.

இதையும் படிக்கலாமே: பித்ரு தோஷம் நீங்க நாளை மகாளய அமாவாசை தினத்தில் இந்த ஒரு காரியத்தை மறக்காமல் செய்து விடுங்கள்.

துலாம்


துலாம் ராசிக்காரர்கள் இதுவரை தேங்கி கிடந்த குட்டை போல இருந்திருப்பீர்கள். இனிமேல் ஓடுகின்ற நதி போல செயல்பட போகிறீர்கள். உங்களுக்கு எல்லா காரியத்திலும் நிறைய வெற்றி கிடைக்கும். வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்டத்திற்குச் செல்ல நிறைய வாய்ப்புகள் உங்களுக்கு வரும். தொழிலில் நல்ல லாபம் இருக்கும். சுப செய்திகள் செவிகளை எட்டும். வீட்டில் சுப காரிய செலவு ஏற்படும். நிறைய நன்மைகளை அள்ளிச்சென்று மன மகிழ்ச்சியோடு இருக்கப் போகிறீர்கள்.

- Advertisement -